புதன் அருள் இருந்தால் புத்தி மட்டுமல்ல சொத்தும் சேருமாம் தெரியுமா? புதன்கிழமைகளில் விரதம் இருந்து எளிதாக இவரை வழிபட்டால் அள்ள அள்ள குறையாத செல்வங்கள் பெருகும்!

puthan-vilakku
- Advertisement -

நவகிரகங்களில் புதன் பகவானை புத்திகாரகன் என்று ஜோதிடங்கள் குறிப்பிட்டு அழைக்கின்றது. புத்தி கூர்மையையும், சிறந்த அறிவாற்றலையும், ஞானத்தையும் கொடுக்கக் கூடியவர் இவர். இவரை புதன்கிழமைகளில் எளிய விரதம் மேற்கொண்டு வழிபட்டு வந்தால், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரங்கள். அப்படியான ஒரு எளிய நவகிரக புதன் வழிபாடு பற்றிய ஆன்மீக குறிப்பு தகவலை தான் இந்த பதிவில் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நவகிரகங்களில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கக்கூடியவர் புதன் பகவான். இதனால் சூரியனுடைய அருள் புதன் பகவானுக்கு அதிகமாக இருக்கிறது, அதனால் தான் என்னமோ இவர் மனிதனுடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். ஒருவர் எதை இழந்தாலும் தன்னுடைய புத்தியையும், அறிவையும் இழந்து விடக்கூடாது.

- Advertisement -

நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்கள் நம்மை விட்டு போகலாம். உறவுகள் நம்மை விட்டு பிரியலாம். ஆனால் நம்முடன் கடைசி வரை வருவது அறிவு, புத்தி, ஞானம் ஆகியவை மட்டுமே ஆகும். இவை இருந்தால் மறுபடியும் இழந்தவற்றையெல்லாம் நாம் சுயமாக சம்பாதித்து கொள்ள முடியும். அத்தகைய சிறப்புகளை அள்ளிக் கொடுக்கக்கூடிய சுகபோக தன்மையை அருளக்கூடிய புதன் பகவானை புதன் கிழமைகளில் விரதம் இருந்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் செல்வ சேர்க்கை உண்டாகும்.

புதன்கிழமையில் புதன் பகவானுடைய சிறிய படம் ஒன்றை பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் முன்பாக ஒரு தாமரை கோலம் இட்டு, அதன் நடுவில் சிறிய கலசம் ஒன்றில் தண்ணீரை நிரப்பி வையுங்கள். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் பிடிக்கும் எனவே புதிய பச்சை துணி ஒன்றை வைக்க வேண்டும். வாசம் உள்ள பூக்களை கொண்டு சுற்றிலும் அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்பு பச்சை காய்கறிகளை படைத்து, இனிப்பு பண்டங்களை நைவேத்தியம் செய்து, இரண்டு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி புதன் பகவானுக்கு உரிய கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து இரு வேளை உபவாசம் இருந்து வணங்கி வர வேண்டும்.

- Advertisement -

புதன் காயத்ரி மந்திரம்:
ஓம் கஜத்வஜாய வித்மஹே,
சுகஹஸ்தாய தீமஹி,
தந்நோ புத ப்ரசோதயாத்!!

காலையில் ஒரு முறை இதே போல தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். மாலையிலும் ஏற்றி வழிபட வேண்டும். அதுவரை உணவு ஏதும் உண்ணக்கூடாது. விரதம் முழுமையாக இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் போன்ற எளிய விரத உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். பின்னர் அன்றைய நாள் தொழில் வளம் சிறக்கவும், வியாபாரம் விருத்தி அடையவும், வேலையில் பதவி உயர்வு பெறவும், நினைத்த வேலை அமையவும், வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற்றம் உண்டாகவும் புதன் பகவானை வேண்டி வணங்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அன்றைய தினம் நீங்கள் புதன் கோவிலுக்கு சென்று அல்லது நவகிரக சந்நிதிக்கு சென்று ஐந்து விளக்குகள் கொண்ட தீபம் ஏற்றி பச்சை வஸ்திரம் சாற்றி வழிபடலாம். பக்தர்களுக்கு பச்சை பயறு போன்றவற்றை தானம் செய்யலாம். அது மட்டும் அல்லாமல் நன்கு படிக்கும் வசதியற்ற குழந்தைகளுக்கு பேனா, புத்தகம், நோட்டு என்று உங்களால் முடிந்தவற்றை வாங்கி கொடுக்கலாம், இதனால் புத பகவானுடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே:
தினமும் இந்த வேலைகளை செய்யும் பெண்களை அந்த கடவுளுக்கே ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். இந்தப் பெண்கள் வாழும் வீட்டில் நிச்சயமாக ஒரு சிக்கல் கூட இருக்காது.

இது போல தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையிலும் உங்களால் முடிந்த வரை எளிமையாக செய்து வந்தால் புதன் அருள் அதிகரிக்கும். புதன் திருமாளுடைய அம்சமாக இருப்பதால் புத வழிபாடு இங்ஙனம் மேற்கொள்பவர்களுக்கு புத்தியுடன், செல்வ சேர்க்கையும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

- Advertisement -