உங்கள் பகைவர்களின் சூழ்ச்சியை ஒன்றுமில்லாமல் செய்து முறியடிக்க வீட்டில் சாம்பிராணியுடன் இந்த 1 பொருளை போட்டு தூபம் போடுங்கள்.

sambrani-naai-kadugu
- Advertisement -

நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நமக்கு நண்பர்கள் என்று கூறி விட முடியாது. நம்முடனேயே இருந்து கொண்டு நமக்கு சூழ்ச்சிகளை புரியும் நண்பர்களும் இருக்கத்தான் செய்வர். எதிரிகளை கூட மன்னித்து விடலாம் ஆனால் உடன் இருந்து துரோகம் செய்பவர்களை நம்மால் மன்னிக்க கூட முடியாது. இப்படி எதிரிகள், துரோகிகள் என்று நம்மை சுற்றி இருக்கும் பகைவர்களுடைய சூழ்ச்சியை முறியடிக்க செய்யக்கூடிய ஆற்றல் இந்த 1 பொருளுக்கு உண்டு. அது என்ன பொருள்? அதில் சாம்பிராணி தூபம் போடுவதால் நமக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை மேலும் பின் தொடர்வோமாக.

thirusti

புதிதாக நாம் ஒரு பொருளை வாங்கி விடக்கூடாது, உடனே எங்கிருந்து, யாருடைய கண்கள் நம் மீது படும் என்று நமக்கே தெரிவது இல்லை. வாங்கிய கொஞ்ச நாட்களில் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். இதெல்லாம் கண் திருஷ்டியின் ஒரு அங்கம் தான். இதற்காகத் தான் நம் முன்னோர்கள் பொது விழா, விசேஷங்களின் பொழுது யாருடைய கண்களும் நம் மீது படாமல் இருக்க திருஷ்டி கழித்து சுற்றி போட சொல்லிக் கொடுத்தார்கள். எல்லா திருமண வைபவங்களிலும் ஊர் கண் மொத்தமும் மணமக்கள் மீது இருக்கும் என்பதால் தான் அவர்களுக்கு திருஷ்டி கழிக்கப்படுகிறது. எனவே பாரம்பரிய முறையில் திருஷ்டி கழிப்பது என்பது மிகவும் அவசியமாகும்.

- Advertisement -

அதே போல பகைவர்கள் தொல்லை நீங்க, துரோகிகள் சூழ்ச்சிகள் முறியடிக்க, வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற, துஷ்ட அதிர்வுகள் நீங்க அடிக்கடி சாம்பிராணி தூபம் போடப்பட வேண்டும். சாம்பிராணி தூபம் போடுவதால் நம்மிடம் இருக்கும் எத்தகைய எதிர்மறை ஆற்றலும் தன்னாலே விலகி செல்லும். பச்சிளம் குழந்தைகளுக்கு சாம்பிராணி போடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம். அதில் இருந்து வரும் புகை நிறைய இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இதனால் மூச்சுத்திணறல் பிரச்சனை வரும் என்பதால் மருத்துவர்களும் பரிந்துரைக்க மறுக்கின்றனர். லேசாக சாம்பிராணி புகையை குழந்தையின் தலை பகுதியில் இருந்து பாதம் வரை காண்பித்தால் போதும். எத்தகைய கண் திருஷ்டி கோளாறுகளும் நீங்கும்.

sambrani

செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுவாக சாம்பிராணி தூபம் போடுவது மிகவும் விசேஷம். தினமும் கூட நாம் வீடு முழுக்க சாம்பிராணி தூபம் காண்பிக்கலாம். ஆனால் இந்த குறிப்பிட்ட சில நாட்களில் காண்பிப்பது இன்னும் விசேஷம். இந்நாட்களில் சாம்பிராணி தூபத்தில் இந்த ஒரு பொருளை சேர்த்து தூபம் காண்பிக்க பகைவர்கள் தொல்லை நீங்கும்.

- Advertisement -

பூஜை பொருட்கள் விற்கும் கடைகளிலும், நாட்டு மருந்து கடைகளிலும் சாதாரணமாக கிடைக்கும் இந்த பொருளுக்கு ‘நாய்கடுகு’ என்பது பெயராகும். நாய் கடுகு என்பது கடுகைப் போலவே சிறுத்து காணப்படும். இதன் அபூர்வ சக்தி ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே நீங்கள் சாம்பிராணி தூபம் காண்பிக்கும் பொழுது நாய்க்கடுகு கொஞ்சமாக கையிலெடுத்து தூவி கொள்ளுங்கள். வீடு முழுக்க இதனுடைய புகை மண்டலம் பரவ எத்தகைய கண் திருஷ்டி கோளாறுகளும் எளிதாக நீங்கிவிடும்.

naai-kadugu

வெண்கடுகுக்கு இணையான ஆற்றலை கொண்டுள்ள இந்த நாய் கடுகு, தூபம் போட சகல நோய்களும் நீங்கி நல்ல நிவாரணம் கிடைக்கும். தெரிந்தோ, தெரியாமலோ நமக்கு இருக்கும் எதிரிகளின் அட்டகாசம் ஒழிய, அவர்கள் செய்யும் சூழ்ச்சிகள் ஒன்றும் இல்லாமல் போக நாய்கடுகு சாம்பிராணி தூபம் வீடு முழுக்க காண்பிப்பது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். எனவே வாரம் தோறும் தவறாமல் இதை செய்வது சிறப்பு.

- Advertisement -