வாரத்தில் 2 நாள் இந்த சூப்பை குடித்தால் சக்கரை வியாதி இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்.

soup4
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் சக்கரை வியாதி இல்லாத மனிதர்களே இல்லை. யாரைப் பார்த்தாலும் ஷுகர். இந்த சர்க்கரை வியாதியினால் சிறுவயதில் உள்ளவர்களும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். வயதானவர்களும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த சர்க்கரை வியாதி நம் உடலுக்குள் வந்து விட்டால், கட்டாயமாக தினம்தோறும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு தான் வர வேண்டும். அதை நிறுத்தி விடக்கூடாது. மருந்து மாத்திரைகளுடன் சேர்த்து வாரத்தில் இரண்டு நாள் இந்த சுவையும் குடித்து வந்தால், உங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறையும். சர்க்கரை வியாதி கட்டுப்படுத்தப்படும். எந்த ஒரு பின் விளைவுகளும் ஏற்படாமல் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த இந்த சூப்பும் ஒரு சுலபமான வழி. சரி அந்த சூப்பை எப்படி வைப்பது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

soup5

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தோலுரித்த சின்ன வெங்காயம் – 5 பல், தோல் உரித்த பூண்டு – 4 பல், சிறிய தக்காளிப் பழம் நான்காக வெட்டியது – 1, மிளகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் விழுதாக அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக சிறிய அளவில் இருக்கும் பாகற்காய்கள் – 10, பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

soup3

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதை 400ml அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். கொதிக்கும் தண்ணீரில் வெட்டி வைத்திருக்கும் பாகற்காயை போடவேண்டும். அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி மசாலா விழுதையும் சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து இதை நன்றாக கொதிக்க வையுங்கள்.

- Advertisement -

400ml தண்ணீர் நன்றாக சுண்டி 250ml தண்ணீர் வரை வரவேண்டும். இறுதியாக இதில் தேவையான அளவு கல்லுப்பு சிறிதளவு சேர்த்து, நன்றாக கலந்து விட்டு வடிகட்டி திப்பிகளை நீக்கிவிட்டு, இந்த சூப்பை மட்டும் பருக வேண்டும். கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். சர்க்கரை நோயாளிகள் இந்த சூப்பை கசப்போடு தான் குடிக்க வேண்டும். இதனுடன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளக்கூடாது.

kasayam

சில பேருக்கு சர்க்கரையின் அளவு 300, 400 கூட தொட்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து தினமும் பத்து நாட்கள் இந்த சூப்பை குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வந்துவிடும். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வந்தவுடன் இந்த சூப்பை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் குடித்து வந்தால் போதும். சில பேருக்கு இரவு தூங்கவே முடியாது. அடிக்கடி யூரின் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த சூப்பை குடித்து வந்தாலும் பத்தே நாட்களில் நல்ல வித்தியாசத்தை உணரலாம். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -