வாரம் தோறும் தவறாமல் பூஜை செய்யும் பெண்களுக்கு சில எளிய குறிப்புகள். உங்கள் பூஜை அறையில் இவற்றை மட்டும் சரியாக செய்து விட்டால் போதும். உங்கள் பூஜைக்கான முழுபலனையும் பெற முடியும்

pooja-room-vilakku
- Advertisement -

காலம் எவ்வளவு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், ஆண் பெண் இருவரும் சமமான நிலை என்றாலும், பணம் சம்பாதிப்பதற்காக ஆண் பெண் இருவரும் வேலைக்குச் சென்று வந்தாலும், நமது பெற்றோர்கள் பின்பற்றி வந்த சில ஆன்மீக விஷயங்களையும், வீட்டை பராமரிக்கும் விஷயங்களையும் இன்று வரையிலும் சரியாகத்தான் செய்து வருகின்றோம். அவ்வாறு நம்மை விடவும் பெரிய சக்தி ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் தான் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றோம். அவ்வாறு இந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை செவ்வாய் கிழமைகளில் வீட்டில் பூஜை செய்து வருகின்றோம். இப்படி இறைவனை வணங்குவதற்கென்று ஒவ்வொரு வீட்டிலும் தனியாக பூஜை அறை வைத்திருக்கின்றனர். இந்த பூஜை அறையில் எவற்றை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poojai arai

முதலில் பூஜை அறையில் ஒரு சிலர் கண்ணாடி வைத்திருப்பார்கள். இந்த கண்ணாடியை வடக்கு திசையை நோக்கியவாறு வைப்பது தான் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன் அருகில் ஒரு சிறிய கிண்ணத்தில் சில்லறைக் காசுகளைப் போட்டு வைத்து அந்த காசுகளின் பிம்பம் கண்ணாடியில் விழுமாறு வைக்க வேண்டும்.

- Advertisement -

வீட்டின் பூஜை அறையில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கின் அடியில் தட்டு வைப்பது அனைவரின் வழக்கம். இந்த தட்டில் பச்சை அரிசியில் மஞ்சள் கலந்து விட்டு, அதனுடன் அரை ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொண்டு, அதன்மீது வாசனை மலர்களை தூவி, அதன் பிறகு காமாட்சி அம்மன் விளக்கை மேல் வைத்து தீபம் ஏற்றி வணங்குவது நமது பூஜைக்கான பலன்களை பன் மடங்காகப் பெருக்கி தருகிறது.

kamatchi-vilakku

வீட்டில் எப்பொழுதும் எதிர்மறை சக்திகள் நிலவு கொண்டிருப்பதை உணர்பவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றுவதை வழக்கமாக கொள்ளலாம். காமாட்சி அம்மன் விளக்கிற்க்கு அடியில் வைக்கும் தட்டின் மீது சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொண்டு, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை குங்குமம் மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்க்க வேண்டும். பிறகு அதன்மீது வாசனை மலர்களை தூவி விட்டு, அதன் பிறகு தட்டின் மீது காமாட்சி அம்மன் விளக்கினை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

வீட்டில் நடக்கவிருக்கும் சுபகாரியங்களுக்கு தடைப் பட்டுக் கொண்டிருந்தால் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் எருக்கம் பூவை சேர்க்க வேண்டும். இவ்வாறு எருக்கம்பூ சேர்க்கும்போது “ஓம் கம் கணபதியே நமக” என்று சொல்லிக்கொண்டே அதில் சேர்க்க வேண்டும். இந்த கண்ணாடி டம்ளரை பூஜை அறையில் வைத்து பூஜை செய்வதன் மூலம் சுபகாரியங்கள் தடை இல்லாமல் நடைபெறும்.

Kadugu

ஒரு சிறிய மஞ்சள் துணியில் சிறிதளவு பச்சை கற்பூரம், ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து நன்றாக முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். இந்த முடிச்சை நிலை வாசற் படியில் கட்டிவிட வேண்டும். இதன் மூலம் வீட்டிற்குள் எப்பேர்பட்ட தீய சக்திகள் நுழைவதையும் தவிர்க்க முடியும்.

- Advertisement -