பழனி முருகன் கோவிலில் ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்வது சரியா? தவறா? இதனால் விளையும் விபரீதம் என்ன?

- Advertisement -

பழனி முருகன் கோவிலில் இருக்கும் மூலவர் சிலைக்கு மகத்துவமான புராண உண்மைக் கதைகள் உண்டு. ஒவ்வொரு தேவைக்காகவும் ஒவ்வொரு ரூபத்தில் நாம் இறைவனை தரிசனம் செய்து வருகின்றோம். அந்த வகையில் பழனி முருகன் கோவிலில் ராஜா அலங்காரத்தில் இருக்கும் மூலவரை வழிபடுவது நல்லதா? ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்வது நல்லதா? இதற்கான பலன்கள் என்னென்ன? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பக்தர்கள் ஆகிய நாம் இறைவனை தரிசிக்கும் போது சாதாரண கோலத்தில் இருப்பதை விட அலங்காரம் செய்த பின்பு கண் குளிர தரிசனம் செய்வதை தான் அதிகம் பேர் விரும்புகின்றோம். ஒரு மனிதனால் செய்ய முடிந்த விஷயம் அனைத்திற்கும் இறைவனின் துணை கிடைக்க ராஜ அலங்கார தரிசனம் செய்யலாம்.

- Advertisement -

திருமணத்திற்கு வரன் பார்க்க செல்கிறோம் என்றாலும், திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்பதாலும், பத்திரிக்கை கொடுக்கவும், ராஜ அலங்கார தரிசனம் செய்யலாம். புதுமனை வாங்குவது, விற்பது, வீடு வாங்குவது, கட்டுவது, கிரகப்பிரவேசம் செய்வது போன்ற நல்ல நிகழ்வுகளுக்கும் நம்மால் இயலக்கூடிய விஷயங்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்க ராஜ அலங்கார கோலத்தை தரிசனம் செய்து வழிபடலாம்.

மனிதனால் முடியாத ஒரு சில விஷயங்களும் இவ்வுலகில் உண்டு. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் உறவுகளை காப்பாற்றும் எண்ணத்திலும், சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறும் மனம் கொண்டவர்களும் ஆண்டி கோலத்தை தரிசனம் செய்து பலன் பெறலாம். ஆண்டி கோலத்தை பெரும்பாலும் முற்றும் துறந்த ஞானிகளும், ரிஷிகளும், சித்தர்களும் வழிபடுவார்கள். மேலும் குடும்ப நிலையை கடந்து வாழ்பவர்களும் இந்த கோலத்தை தரிசனம் செய்ய போராடுவார்கள். மிகுந்த சக்தி வாய்ந்த ஆண்டி கோல தரிசனம் செய்வது மகத்துவமான பலன்களை கொடுக்கக் கூடியது ஆகும்.

- Advertisement -

ஆண்டி கோலத்தில் பழனி முருகனை தரிசித்தால் முற்றும் துறக்க வேண்டி இருக்கும் என்பதெல்லாம் மெய்யல்ல! ஞான காரகனாக இருக்கக் கூடிய இந்த முருகன் நமக்கு வீரத்தையும், தைரியத்தையும், ஞானத்தையும் கொடுக்கிறார். முருகனுக்கு செவ்வாய் கிரகமும், குரு பகவானும் இருக்கிறார்கள்.

தீராத வழக்குகள் தீரவும், தீராத நோய்கள் விலகவும், தீர்ப்புகள் சாதகமாகவும், வழக்குகளில் உங்கள் பக்கம் நியாயம் கிடைக்கவும் போராடிக் கொண்டிருப்பவர்கள் முருகனை ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்து வழிபட்டு நல்ல பலன்களை பெறுவார்கள்.

- Advertisement -

மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், நோயாளிகள், வாய் பேச முடியாதவர்கள், உடலில் குறைபாடு உள்ளவர்கள், மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், மன இறுக்கத்தில் இருப்பவர்கள் ஆண்டி கோல முருகனை தரிசித்தால் சாத்வீகமாக அவர்களுடைய மனநிலை மாறும். மனம் சாந்தம் உற்று, சமத்துவம் பெற்று அமைதி அடையும். இதனால் தங்களுக்கு ஏற்பட்ட குறைகள் அனைத்தும் நீங்க கூடிய வாய்ப்புகள் அதிகம் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
விடாப்பிடியாக தினமும் கோவிலுக்கு இப்படி சென்றால், அந்த தெய்வம் தினம் தினம் உங்களுடனே, உங்கள் வீட்டிற்கு வந்து விடும். நீங்கள் கேட்ட வரத்தை எல்லாம் வாரி வாரி தந்துவிடும்.

இதனால் தான் ராஜ அலங்காரத்தை காட்டிலும், ஆண்டி கோலம் மிகுந்த விசேஷமான பலன்களை கொடுக்கக் கூடியது ஆகும். அனைத்தையும் துறந்தவர்கள் மட்டும் அல்ல, உண்மையான பக்தியுடனும், ஆத்மார்த்தமாக, ஆத்ம ஞானத்துடன் முருகனை மனதார வழிபடுபவர்கள் எவராயினும் அதற்கு உரிய பலனை பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

- Advertisement -