உங்கள் வீட்டு பீரோவில் பணம் கட்டுக்கட்டாய் சேரவும், நகை பலமடங்கு பெருகவும் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து அதனுடன் வைத்திடுங்கள்

cash
- Advertisement -

ஒவ்வொருவரும் காலை முதல் மாலை வரை ஏதேனும் ஒரு வேலை செய்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். தங்கள் கடின உழைப்பின் மூலம் தான் ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவ்வாறு என்ன தான் கஷ்டப்பட்டாலும் ஒரு நகை கூட வாங்க முடியவில்லை, பணம் சேர்க்க முடியவில்லை என்ற வருத்தம் பலருக்கும் இருக்கிறது. ஒரு சிலர் முயற்சி செய்து ஆசைப்பட்டு ஒரு நகை வாங்கினால் உடனே அதனை அடகு வைப்பதற்கு ஏற்ப பிரச்சனை வந்து விடுகிறது. இவ்வாறு ஆசைப்படுவதையும் கூட சிலர் நிறுத்தி விடுகின்றனர். ஆனால் சில பெரிய பணக்காரர்களிடம் பணமும், நகையும் சேர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு காரணம் என்னவாக தான் இருக்கும் என்று பலரும் யோசிப்பதுண்டு. அவ்வாறு பணத்தை பெருக்குவதற்கும், நகை அவர்கள் கையிலிருந்து செல்லாமல் இருப்பதற்கும் பெரிய பணக்காரர்கள் சில சூட்சும பரிகாரங்களை செய்து வருகின்றனர். அவ்வாறு பலன் அளிக்கக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பணம் என்பது உங்கள் வீட்டில் எப்பொழுதும் சிறிதளவாவது இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே மகாலட்சுமி நமது வீட்டில் முழுமையாக வாசம் செய்கிறாள் என்று அர்த்தமாகும். நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் எப்பொழுதும் ஒரு ரூபாய் கூட இல்லாமல் துடைத்து எடுக்கக்கூடாது. எனவே அங்கு ஒரு நூறு ரூபாய் தாளையாவது வைத்துவிட்டு மற்ற ரூபாய்களை எடுத்து செலவு செய்யுங்கள்.

- Advertisement -

அதுபோலவே நகை இருக்கும் பெட்டியிலும் ஒரு குண்டுமணி தங்கத்தையாவது எப்போதும் வைத்திருங்கள். இவ்வாறு செய்வதை தொடர்ந்து பின்பற்றி பாருங்கள். அதன் பலன் பற்றி உங்களுக்கே தெரிய ஆரம்பிக்கும். அதுபோல பணம் வீண் விரயம் ஆவதையும், தங்க நகை அடிக்கடி அடகுக்கு செல்வதைத் தவிர்க்கவும் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து நல்ல பலனை பெற்றிடுங்கள்.

அதற்கு முதலில் நாட்டு மருந்து கடையில் அதிமதுரம், நெல்லி சக்கை இவை இரண்டு பொருட்களையும் வாங்கிக் கொள்ள வேண்டும். அதுபோல 30 சோழிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் பால், பன்னீர் மற்றும் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அந்த தண்ணீரில் இதனை சிறிது நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் சுத்தமான நெய்யை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்த நெய்யை லேசாக சூடு செய்து உருக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நெய்யில் அதிமதுரம், நெல்லி சக்கை மற்றும் 30 சோழிகளையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு மூன்று நாட்கள் இதனை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

இந்தப் பூஜையை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் துவங்க வேண்டும். பின்னர் மூன்றாம் நாள் நெய்யிலிருந்து இந்தப் பொருட்களை வெளியே எடுத்து, ஒரு துணியில் லேசாக துடைத்தெடுக்க வேண்டும். பின்னர் பூஜை அறையின் முன் பச்சை கற்பூரத்தை ஏற்றி, அந்த நெருப்பில் இந்த ஒவ்வொரு பொருளையும் லேசாக சூடு காட்டி இவற்றை ஒரு பாட்டிலில் போட்டு வைத்து, அவற்றை பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். இவ்வாறு இந்த பாட்டிலை பணம் அல்லது நகையின் மீது படுமாறு வைத்து விட வேண்டும்.

- Advertisement -