பண தேவதையை நிரந்தரமாக வீட்டிலேயே தங்க வைக்க, தினம் தினம் வீட்டில் இந்த ஒரு விளக்கு ஏற்றினாலே போதும்.

mahalakshmi-vilakku
- Advertisement -

பணம் சம்பாதிப்பது கூட அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல. ஒரு நாளைக்கு ஒருவர் ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிப்பதற்கு உண்டான வழிமுறைகள் இன்னைக்கு இருக்கு. ஆனால், சம்பாதித்த பணத்தை சேமித்து வைப்பதில் தான் சூட்சமமே அடங்கி இருக்கிறது. இன்னைக்கு வரும் 1000 ரூபாயை செலவு செய்து விட்டு, நாளைக்கு பணம் தேவை எனும்போது கடன் வாங்கக் கூடிய பழக்கத்தை வைக்கக்கூடாது. வருமானத்தில் சேமிப்பை எடுத்து வைத்துவிட்டு, மீதம் இருக்கும் ரூபாயைத்தான் செலவு செய்ய வேண்டும். கஷ்டப்பட்டாவது இதை நீங்கள் பின்பற்றி வந்தால் கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். பண தேவதையை உங்களுடைய வீட்டில் நிரந்தரமாக தங்க வைக்கலாம்.

நாம் எல்லோருக்கும் தெரியும் பணத்திற்கு உண்டான தேவதை யார் என்பது, மகாலட்சுமி தேவி.  மகாலட்சுமி எவ்வளவு விரைவாக வீட்டிற்குள் வருகிறார்களோ, அவ்வளவு விரைவாக வீட்டில் இருந்து வெளியே ஓடி விடுவாள். அவளை நிரந்தரமாக நம்முடைய வீட்டில் பிடித்து அமர வைப்பது எப்படி. மகாலட்சுமிக்கு பிடித்த இந்த விளக்கை ஏற்றி பாருங்க. மகாலட்சுமி வீட்டிற்குள் வந்த வேகத்தில் அப்படியே உட்கார்ந்து கொள்வார்கள். எந்திரிச்சு திரும்பவும் வெளியில் போகவே மாட்டாள்.

- Advertisement -

பண தேவதையை வசியம் செய்ய விளக்கு:
ஒரு சின்ன தட்டு எடுத்துக்கோங்க. அதில் மஞ்சள் குங்குமம் போட்டு வச்சுக்கோங்க. பித்தளை தட்டாக இருந்தால் சிறப்பு. அதன் மேலே மண் அகல் விளக்கை வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து நெய் ஊற்றி, பஞ்சு திரி போடவும்.

விளக்கில் ஊற்றி இருக்கும் நெய்யில் நாம் இரண்டு பொருட்களை சேர்க்க வேண்டும். இரண்டு டைமண்ட் கற்கண்டுகளை எடுத்து தூள் செய்து அந்த நெய்யில் போட்டு விடுங்கள். ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் அந்த நெய்யில் போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். இப்படி ஏற்றிய இந்த விளக்கிற்கு முன்பு அமர்ந்து பணத்திற்கு தேவதையான மகாலட்சுமி தாயை மனம் உருகி வழிபாடு செய்யும்போது, மகாலட்சுமி உங்களுக்கு வசியமாகிவிடுவாள்.

- Advertisement -

வீட்டிற்குள் வந்த மகாலட்சுமி நிலையாக உங்கள் வீட்டிற்குள் தங்குவாள். ஒரு நாள் இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு பணம் வரவில்லை என்று சொல்லக்கூடாது. நித்தம் நித்தம், நித்திய பூஜையாகவே உங்களுடைய வீட்டில் இந்த விளக்கு எரிய வேண்டும். ஒரு மணி நேரம் இருந்தால் கூட போதும். காலை அல்லது மாலை உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் இந்த விளக்கை ஏற்றி மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டே இருங்கள்.

இதையும் படிக்கலாமே: பணத்தைத் தேடி நீங்கள் ஓடிக் கொண்டிருக்காமல் பணம் உங்களைத் தேடி ஓடி வர ஆஞ்சநேயர் கோவிலின் செந்தூரத்தை வாங்கி வீட்டில் இப்படி எழுதி வைத்து விடுங்கள்.

அவளை வீட்டிற்குள் இருக்கும் படி வேண்டி கேட்டுக் கொள்ளுங்கள். நிச்சயமாக வந்த பணம் தேவைக்கு போக மீதம் சேமிப்பில் தங்குமே தவிர, எல்லா பணமும் வீண் விரையும் ஆகாது. தொடர்ந்து இந்த பூஜையை செய்து வருபவர்களுக்கு அந்த மகாலட்சுமியின் அருளாசி முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீங்க வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க. செலவு செலவு செலவு என்ற நிலைமை மாறி, வரவு வரவு வரவு என்ற நிலைமை நிச்சயம் உங்களுக்கு உண்டாகும்.

- Advertisement -