பணத்தைத் தேடி நீங்கள் ஓடிக் கொண்டிருக்காமல் பணம் உங்களைத் தேடி ஓடி வர ஆஞ்சநேயர் கோவிலின் செந்தூரத்தை வாங்கி வீட்டில் இப்படி எழுதி வைத்து விடுங்கள்.

human cash
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பணம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது போன்றதொரு மனநிலைக்கு வந்து விட்டோம். அந்த பணத்தை சம்பாதிக்க நாம் என்ன தான் இரவும் பகலும் பாடுபட்டாலும் ஓரளவுக்கு மேல் நம்மால் அதை ஈட்ட முடியவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பண ஈர்ப்பு தன்மை நம்மிடம் குறைவாக இருந்தாலும் பணமானது நம்மிடம் சேராது, சேர்ந்தாலும் நிலைத்திருக்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பண ஈர்ப்பு தன்மையை அதிகரித்துக் கொள்ள சில தாந்திரீக பரிகாரங்கள் உண்டு. அதில் ஒன்றை தான் இப்பொழுது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக பணம் நம்மிடம் சேரவும் பெருகவும் நிலைத்திருக்கவும் மகாலட்சுமி தாயார், குபேரர் போன்றவர்களை வணங்குவது வழக்கம் இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் பணம் நம்மிடம் பெருக்கவும் கடன் அடையவும் நம்முடைய ஆரோக்கியம் மேம்படவும், எதிரிகள் தொல்லை இன்றி நிம்மதியாக வாழவும் ஆஞ்சநேயர் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அத்தகைய ஆஞ்சநேயரை வணங்கி தான் இப்போது இந்த பண வரவிற்கான பரிகாரத்தையும் நாம் செய்யப்போகிறோம்.

- Advertisement -

பணம் நம்மிடம் தாராளமாக புழங்க
இந்த வழிபாட்டை வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் செய்ய வேண்டும். இந்த இரண்டு நாளில் உங்களுக்கு விருப்பமான நாலு ஒன்று தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த நாளில் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று அங்கு ஆஞ்சநேயருக்கு முன்பாக இரண்டு அகல் வைத்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தின் முன்பு அமர்ந்து உங்களுடைய கடன் பிரச்சனையோ அல்லது பணத் தேவையோ எதுவாக இருப்பினும் அது சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஆஞ்சநேயர் கோவிலில் செந்தூரத்தை பிரசாதமாக தருவார்கள். இந்த செந்தூரத்தை நீங்கள் கைகளில் வாங்காமல் வெற்றிலையில் வாங்க வேண்டும். ஆஞ்சநேயர் கோவிலில் அவருக்கு வெற்றிலை மாலை கட்டாயமாக சாற்றி இருப்பார்கள் அதில் ஒரு வெற்றிலையை கேட்டு வாங்கி அது இந்த செந்தூரத்தை வைத்து வீட்டிற்கு கொண்டு வந்து விடுங்கள். இந்த வெற்றிலை செந்தூரத்தை பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றி வைத்து வணங்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த செந்தூரத்தை கொண்டு நீங்கள் பணம் வைக்கும் பீரோ அல்லது டப்பா எதுவோ அதற்கு கீழே ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து விடுங்கள். அதன் பிறகு அதன் மேல் அந்த பொருளை வையுங்கள். பீரோவாக இருந்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து அதன் மேல் பணத்தை வையுங்கள். அடுத்தது வீட்டின் அரிசி பானை இந்த அரிசி பானை வைக்கும் இடத்திற்கு கீழாக இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து வைத்து விடுங்கள். இதனால் வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கு வாய்ப்பில்லை.

மூன்றாவதாக உப்பு ஜாடி உப்பு ஜாடியை எடுத்து விட்டு அதன் அடியிலும் இதே போல் ஸ்வஸ்திக் சின்னத்தில் வரைந்து அதன் மேல் உப்பை வைத்து விட்டால் உங்கள் கடன் தொல்லைகள் அனைத்தும் சீக்கிரம் நிவர்த்தி ஆகுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். இந்த மூன்று இடங்களில் எழுதி இருக்கும் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை நீங்கள் வார வாரம் துடைத்து விட்டு புதிதாக எழுதி வைத்து விடுங்கள்.

இதையும் படிக்காலமே: வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்கும் பழக்கமுடையவரா நீங்கள்? அப்போ உப்பு கூட சேர்த்து இந்த மூன்று பொருட்களையும் வாங்குங்கள். எதிர்ப்பாராத அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

இந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் ஆஞ்சநேயர் கோவிலில் அவருடைய பிரசாதமான செந்தூரத்தை வைத்து இப்படி எழுதி வழிபடும் போது பணமானது உங்கள் திரு வீடு தேடி வருவதோடு உங்களுக்கு இருக்கும் கடன் வறுமை போன்ற பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி செல்வ வளத்துடன் வாழ்வீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. நம்பிக்கையுடன் இந்த வெற்றிலை பரிகாரத்தை செய்து கடன் இல்ல நிம்மதியான செல்வ வாழ்க்கையை வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -