பல தலைமுறைகளுக்கு பணத்தை சேர்க்கும் பண ஈர்ப்பு பரிகாரம்

cash5
- Advertisement -

பணத்தை லட்ச லட்சமாக சேர்ப்பதற்கு எத்தனையோ பண ஈர்ப்பு விதிகள், பரிகாரங்களாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்‌. இதை நம்பிக்கையோடு செய்தால் உங்கள் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை விரைவில் தீரும்.

ஒரே ஒரு ரூபாய் நோட்டில், இந்த பரிகாரத்தை செய்து, உங்கள் கையோடு வைத்துக் கொள்ளுங்கள். அந்த ரூபாய் நோட்டு இன்னும் நிறைய ரூபாய் நோட்டுகளை ஈர்த்துக் கொண்டு வந்து உங்களிடம் சேர்த்து விடும். பண ஈர்ப்பை அதிகப்படுத்தும் ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் என்ன பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பண ஈர்ப்பு பரிகாரம்

உங்களுடைய ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் இந்த மூன்று விரலையும் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். இந்த மூன்று விரல்களும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது. குரு பகவான், சனி பகவான், சூரிய பகவான், இந்த மூன்று பேரை ஆக்டிவ் செய்யப் போகின்றோம். பிறகு தானாக பணம் உங்களைத் தேடி வரும்.

ஒரு சின்ன கிண்ணத்தில் கொஞ்சமாக பன்னீர் ஊற்றி அதில் 2 லவங்கம்(கிராம்பு) போட்டுக் கொள்ளுங்கள். முதல் நாள் இரவே பன்னீரில் லவங்கம் போட்டு ஊற விட வேண்டும். அடுத்த நாள் காலை இந்த தண்ணீரை பரிகாரத்திற்கு பயன்படுத்தனும். ஒரு ரூபாய் நோட்டு எடுத்துக் கொள்ளுங்கள். 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய், உங்கள் சௌகரியம் தான்.

- Advertisement -

ஏதோ ஒரு நோட்டு எடுத்துக்கோங்க. உங்களுடைய ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரல் இந்த மூன்று விரலையும் இந்த தண்ணீரில் தொட்டு, அந்த 3 விரலை அப்படியே இந்த ரூபாய் நோட்டின் மேலே வைத்து, பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வையுங்கள். நிறைய பன்னீரை இந்த ரூபாய் நோட்டின் மேலே வைத்தால் ரூபாய் நோட்டு செல்லாமல் போய்விடும்.

லேசாக அந்த தீர்த்தமானது இந்த நோட்டில் பட வேண்டும் அவ்வளவுதான். ஈரமான உங்கள் கையை மட்டும் அந்த நோட்டின் மேல் வைத்து வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த ரூபாய் நோட்டை மடித்து உங்களுடைய பாக்கெட்டில் வைக்கலாம். பீரோவில் வைக்கலாம். ஆனால் இந்த ரூபாய் நோட்டை செலவு செய்யாதீங்க.

- Advertisement -

மூன்று மாதத்திற்கு இந்த ரூபாய் நோட்டு அப்படியே இருக்கட்டும். பிறகு இந்த ரூபாய் நோட்டை ஏதாவது ஒரு மங்களகரமான காரியத்திற்கு செலவு செய்து கொள்ளலாம். பிறகு வேறு ஒரு ரூபாய் நோட்டில் இதேபோல பரிகாரத்தை செய்து உங்களுடைய பணப்பெட்டியில் வைத்தால் அந்த இடத்தில் பணம் மேலும் மேலும் சேரும்.

இதையும் படிக்கலாமே: கேட்டது கிடைக்க பாலா திரிபுரசுந்தரி வழிபாடு

இல்லையென்றால் அந்த அதே ரூபாய் நோட்டில், வாரம் ஒரு முறை இதே போல மூன்று விரலை, அந்த தண்ணீரில் தொட்டு, நோட்டின் மேலே வைத்து அந்த நோட்டுக்கு பணம் ஈர்ப்பு விதியை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் அதிகப்படுத்தி கூட வைக்கலாம். அது உங்களுடைய நேரத்தை பொறுத்தது. விருப்பத்தை பொறுத்தது. பல தலைமுறைகளுக்கு பணத்தை சேர்க்கக்கூடிய தன்மை இந்த எளிமையான பரிகாரத்திற்கு உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பலன் அடையலாம்.

- Advertisement -