கேட்டது கிடைக்க பாலா திரிபுரசுந்தரி வழிபாடு

ninathathu nadakka
- Advertisement -

பெண் தெய்வங்கள் பல இருந்தாலும் பாலா திரிபுரசுந்தரி சுந்தரி ஆனவர் கருணையின் சொரூபமாக இருக்கிறார். மற்ற தெய்வங்களுக்கு இல்லாத ஒரு அனுகிரகம் தாயாருக்கு உண்டு. அது மட்டும் இன்றி தெய்வங்களிலே குழந்தை ரூபமாக அமர்ந்து காட்சி தரக் கூடிய அற்புதமான அண்மை தான் இவர். இவரை சிவபெருமானின் மகள் என்றும் புராணங்கள் சொல்கிறது. அது மட்டும் இன்றி சித்தர்களின் தெய்வமாகவும் அன்னை திகழ்கிறார்.

பாலா என்பது சமஸ்கிருத சொல்லாகும். இவருக்கு வாலை அம்மன் என்ற பெயரும் உண்டு. இந்த அன்னையை வழிபட்டால் வீட்டில் சகல விதமான செல்வங்களையும் பெற்று சந்தோஷமாக வாழலாம் என்பது நம்பிக்கை. அத்தகைய அன்னையை நம்முடைய வேண்டுதல் நிறைவேற எப்படி வழிபாடு செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

நினைத்தது நடக்க பாலா திரிபுரசுந்தரி வழிபாடு

குழந்தை சொரூபமான இந்த அன்னையிடம் நாம் மனமுருகி கேட்கும் எதையும் நிச்சயமாக நிறைவேற்றி தருவார் என்று சொல்லப்படுகிறது. இந்த அன்னையை வணங்க வீட்டில் பாலா திரிபுரசுந்தரி படம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து விட்டு படத்திற்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

அன்னைக்கு நெய்வேத்தியமாக மாதுளை முத்துக்களை வைக்கலாம் அல்லது குழந்தை சொரூபம் என்பதால் சாக்லேட் கூட பிரசாதமாக வைக்கலாம். இந்த வழிபாடு செய்ய தீபத்திற்கு முன் அமர்ந்து தட்டில் சிறிது மாதுளை முத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அன்னையின் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

மந்திர ரூபின்யை நமஹ
மந்திராத்மிகாயை நமஹ
பாலா திரிபுரசுந்தரியை நமக

என்ற இந்த மந்திரத்தை சொல்லி மாதுளை முத்துக்களால் அபிஷேகம் செய்யுங்கள். இந்த மந்திரத்தை குறைந்தது 11 முறை சொல்ல வேண்டும். அதிக பட்சம் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்.

- Advertisement -

அதன் பிறகு மாதுளை முத்துக்களையும் நெய்வேத்தியத்தில் வீட்டில் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் முதலில் அவர்களுக்கு இதை கொடுத்துவிட்டு அதன் பிறகு நீங்கள் உண்ணுங்கள். இப்படியாக 48 நாட்கள் அன்னையை தொடர்ந்து வழிபடும் போது நீங்கள் வேண்டுவதை நிச்சயமாக தருவார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வாராகி அருள் பெற தீப வழிபாடு

குறிப்பாக குழந்தை வரம் இல்லாதவர்கள் இந்த முறை விரதம் இருந்து வழிபட்ட நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது அன்னையின் இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை இருக்கும் நம்பிக்கையுடன் செய்து பலனை பெறுங்கள்.

- Advertisement -