பணக்கஷ்டம் தீர ஏற்ற வேண்டிய விளக்கு

mahalshmi11
- Advertisement -

சந்தோஷத்தையும், பணத்தையும் எப்போதுமே நம் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். பண கஷ்டத்தை நம்மை விட்டு தூரம் தள்ளி வைக்க வேண்டும். இந்த இரண்டு விஷயமும் நடக்க வேண்டும் என்றால் நம்மை சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி தேவை. வறுமை நம்மை விட்டு விலகி நிற்க வேண்டும் என்றால், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் விதைக்கணும்.

கஷ்டம் நம்மை கண்டு பயந்து ஓடும் அளவுக்கு, அயராது உழைக்கணும். இதனோடு சேர்த்து கொஞ்சம் மகாலட்சுமி கடாட்சமும் அதிர்ஷ்டமும் இருந்து விட்டால் போதும். மொத்த பணக்கஷ்டத்திற்கும் ஒரு முடிவு கட்டலாம். இதற்கு ஆன்மீகத்தில் ஒரு விளக்கு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. பண கஷ்டத்தை விலக்கி வைக்கும் விளக்கு பரிகாரம். இந்த விளக்கை எப்படி ஏற்றுவது, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பணக்கஷ்டம் நீங்க ஏற்ற வேண்டிய விளக்கு

இந்த விளக்கை கட்டாயம் மண் அகல் விளக்கில் தான் ஏற்ற வேண்டும். புதுசாக ஒரு மண் அகல் விளக்கு வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு பித்தளை தட்டை எடுத்து, அதை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே மண் அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றவும்.

மஞ்சள் நிறத்தில் இருக்கும் பஞ்சு திரி போடவும். அந்த எண்ணெயில் நான்கைந்து டைமண்ட் கற்கண்டுகளை இடித்து தூளாக்கி போடுங்கள். 2 சிட்டிகை மஞ்சள் பொடியை போடுங்கள். 1 சிட்டிகை பச்சை கற்பூரத்தை நசுக்கி போட்டு பிறகு அந்த விளக்கை ஏற்றி பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த விளக்கில் இருந்து வெளிவரும் வாசம் பணக்கஷ்டத்திற்கு சுத்தமாக பிடிக்காது.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பணக்கஷ்டத்தை துரத்தி துரத்தி அடிக்கக்கூடிய சக்தி இந்த விளக்கிலிருந்து வெளி வரக்கூடிய வாசத்திற்கு உண்டு. இந்த விளக்குக்கு முன்பாக அமர்ந்து உங்கள் பண பிரச்சினைகளை சொல்லி வேண்டுதல் வைத்தால், அந்த பிரச்சனை கூடிய சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரும்.

தினமும் இந்த விளக்கை ஏற்றலாம். வாரத்தில் இரண்டு நாள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றலாம், அல்லது வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை ஏற்றினாலும் சரிதான். உங்களுடைய கஷ்டத்தின் தாக்கம் என்னவென்று உங்களுக்கு தெரியும் அல்லவா. ரொம்பவும் பணகஷ்டம் இருக்கிறது, அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லவே முடியவில்லை என்றால் தினமும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த விளக்கை பூஜை அறையில் மகாலட்சுமிக்கு முன்பு ஏற்றுங்கள்.

- Advertisement -

48 நாள் தொடர்ந்து இந்த விளக்கை ஏற்றி இறைவனிடம் வேண்டுதல் வைத்தால், எப்பேர்ப்பட்ட பண கஷ்டமும் 48 நாட்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்துவிடும். தீராத கடன் சுமை உள்ளவர்களும் இதே போல 48 நாள் இந்த விளக்கிற்கு முன்பு அமர்ந்து வேண்டுதல் வைத்தால் உங்கள் கடன் சுமை உடனே குறையும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி போக்கும் தேங்காய் பரிகாரம்

தினமும் பழைய விளக்கை ஒரு துணி போட்டு துடைத்து எடுத்து விட்டு, மீண்டும் புது நல்லெண்ணெய் ஊற்றி, கற்கண்டு பொடி செய்து போட்டு, மஞ்சள் தூள் போட்டு, ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஊற்றிய எண்ணெய் தீரும் வரை விளக்கு எரியட்டும். குலதெய்வத்தை வேண்டி இந்த பரிகாரத்தை செய்யத் தொடங்குங்கள். ஒரு ரூபாய்க்கு கூட வருமானத்திற்கே வழியில்லாத குடும்பம் கூட இந்த விளக்கு பிரகாசத்தில் ஒளிமயமாக மின்னத் தொடங்கிவிடும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -