பணக்கஷ்டம் தீர்க்கும் துளசி செடி வழிபாடு

thulasi1
- Advertisement -

எவ்வளவு பணம் வந்தாலும் அது நமக்கு தெவிட்டுமா என்ன? பணம் போதும் என்று சொல்லிவிடுவோமா. நிச்சயம் சொல்ல மாட்டோம். உங்களுக்கு தெவிட்ட தெவிட்ட பணத்தை கொடுக்கக் கூடிய ஒரு வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சொல்ல முடியாத அளவுக்கு மகாலட்சுமி கடாட்சத்தை பெற்று தரக்கூடிய வழிபாடு தான் இந்த துளசி செடி வழிபாடு. உங்க வீட்டில் துளசி செடி இருக்கா.

அதை எந்த கலர் தொட்டியில் வச்சிருக்கீங்க. ஒரு முறை பாருங்க. உங்க வீட்டு துளசி செடி இந்த நிற தொட்டியில் இருந்தால், உங்க வீட்டில் பணக்கஷ்டம் என்பதே வராது. வீட்டில் இருக்கும் தரித்திரத்தை விரட்டி அடிக்க துளசி செடி வழிபாட்டை எப்படி செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

துளசி செடி வழிபடும் முறை

உங்க வீட்டில் நீங்கள் தொட்டியில் துளசி செடியை வைத்து வழிபட்டாலும் சரி, அல்லது மண்ணில் துளசி செடியை வைத்து வளர்த்து வந்தாலும் சரி, அது உங்களுக்கு நன்மையை மட்டுமே தரும். தொட்டியில் துளசி செடி இருந்தால், அந்த தொட்டி சிவப்பு நிற தொட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையில் அமையும்.

கடன் பிரச்சனை இல்லாமல் இருக்க, இருக்கும் கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர, சிவப்பு நிறத் தொட்டியில், துளசி செடியை வைத்து, செவ்வாய்க்கிழமை தோறும் அந்த துளசி செடிக்கு சின்ன மண் அகல் விளக்கில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

வீட்டிற்கு வருமானம் பெருக வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை அதே துளசி செடிக்கு மண் அகல் விளக்கில் நெய் விட்டு திரி போட்டு தீபம் ஏற்றி ஊதுவத்தி காண்பித்து வீட்டில் இருக்கும் பெண்கள் வழிபாடு செய்ய வேண்டும். சரி, உங்க வீட்டில் துளசி செடி தொட்டி வேறு ஏதோ ஒரு கலரில் இருக்கிறது. என்ன செய்யணும்.

எங்களால் அந்த துளசி செடி தொட்டியை உடனடியாக மாற்ற முடியாது என்றால் கொஞ்சமாக வெறும் செம்மண்ணை தண்ணீரில் போட்டு கரைத்து அந்த செம்மண்ணை அந்த துளசி செடி தொட்டி சுற்றி தடவி விடுங்கள். துளசி மாடத்திற்கும் இதேதான். காவி என்று சொல்லுவார்கள் அல்லவா அந்த செம்மண். காய்த்த பிறகு அதில் மஞ்சள் குங்குமம் போட்டு வையுங்கள். இதுவும் உங்களுக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். சரி, துளசி செடி மண்ணில் புதைத்து வளர்த்திருந்தால் என்ன செய்வது.

- Advertisement -

அந்த துளசி செடியின் கிளைகள் இருக்கும் அல்லவா அந்த இடத்தில் மஞ்சள் தடவி, நல்ல சிவப்பு நிறத்தில் வாசம் நிறைந்த குங்குமமத்தை ஆங்காங்கே இட்டு விடுங்கள். இந்த சிவப்பு நிறமும் உங்களுக்கு மகாலட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். பூமியில் இருக்கும் துளசி செடிக்கும் விளக்கு ஏற்றி வைத்து ஊதுவத்தை காண்பித்து வீட்டில் இருக்கும் பெண்கள் வழிபாடு செய்யலாம். அதுவும் ரொம்ப ரொம்ப நன்மை தரக்கூடியதுதான்.

வாய்ப்பு இருந்தால் துளசி செடி வீட்டில் வைத்திருப்பவர்கள் மேல் சொன்ன விஷயங்களை கடைபிடித்து பாருங்கள். நிச்சயம் உங்கள் குடும்பத்திற்கு பணக்கஷ்டம் வராமல் இருக்கும். ஏற்கனவே எங்க வீட்டில் இந்த துளசி செடி சிவப்பு நிறத் தொட்டியில் தான் இருக்கிறது. ஆனால் எங்க வீட்டில் கடனும் இருக்கிறது. வருமானமும் இல்லை என்பவர்கள் என்ன செய்வது. நீங்கள் அந்த துளசி மாதாவை தொடர்ந்து வழிபாடு செய்து வர வேண்டும்.

வெள்ளிக்கிழமை என்றால் 1 டம்ளர் நல்ல தண்ணீரில், 1 ஸ்பூன் பசும்பால் விட்டு, 1 சிட்டிகை மஞ்சள் போட்டு அந்த தண்ணீரை அந்த துளசி செடிக்கு விடுங்க. இப்படி அந்த பாலை செடிக்கு ஊற்றும்போது உங்கள் கை மேல் அந்த தண்ணீர் பட்டு, செடிமேல் விழும் படி பாத்துக்கோங்க.

இதையும் படிக்கலாமே: மனபயம் போக்கும் ஹனுமன் மந்திரம்

மனதார உங்க பண கஷ்டம் தீரனும் என்று துளசி மாதாவை நினைத்து பிரார்த்தனை வையுங்கள். நிச்சயம் கூடிய சீக்ரதத்தில் உங்கள் பண கஷ்டம் தீர்ந்து கடன் சுமை குறைந்து நீங்க செல்வந்தர்களாக மாறும் வாய்ப்புகள் வீடு தேடி வரும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -