மனபயம் போக்கும் ஹனுமன் மந்திரம்

hanuman2
- Advertisement -

சில பேர் வாழ்க்கையில், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தானாக வந்து வீட்டு வாசல் கதவை தட்டும். ஆனால் அவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களிடத்தில் இருக்கும் பயம் அவர்களை முன்னேற விடாமல் தடுக்கும். வாய்ப்புகளை நழுவ விடச் செய்யும். வீட்டை விட்டு வெளியே வர பயப்படுவாங்க, பேச பயப்படுவாங்க, படிக்க பயப்படுவாங்க, மேல்படிப்பு படிக்க வெளியிடங்களுக்கு செல்ல பயம் இருக்கும்.

இப்படி எல்லா விஷயத்திலும் பயந்து பயந்து அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே அழித்துக் கொள்வார்கள். அறிவு இருக்கும், திறமை இருக்கும், எல்லாம் இருந்தும் முன்னேற முடியாமல் இருக்கும் பிள்ளைகளை பார்த்தால் பெற்றவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும். உங்கள் பிள்ளைகளும் மன பயத்தின் காரணமாக வாழ்க்கையில் முன்னேற முடியாமல் இருக்கிறார்களா.
வாய்ப்புகளை தவறவிடுகிறார்களா.

- Advertisement -

அவர்களுடைய பயத்தை உடைத்தெரிய தினமும் அனுமனை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லச் சொல்லுங்கள். பயம் என்ற வார்த்தை அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக மறைந்து விடும். மன பயம் போக்கும் ஹனுமன் மந்திரம் என்ன, அதை எத்தனை முறை உச்சரிக்க வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

மனபயம் போக்கும் ஹனுமன் மந்திரம்

இதற்கு உங்களுடைய வீட்டில் அனுமனின் திரு உருவப்படம் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. தினமும் ஆஞ்சநேயரை பார்க்கும்போது நம்மை அறியாமலேயே நம்முடைய மனதில் பலம் உண்டாகும். ஒரு சக்தி பிறக்கும். அப்படி இல்லை என்றால் ராமரது பட்டாபிஷேக படம் இருந்தாலும் அதை வைத்து இந்த மந்திரத்தை சொல்லலாம்.

- Advertisement -

இது இரண்டுமே இல்லை என்பவர்கள் பெருமாளுக்கு முன்பாக ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு வாழைப்பழத்தை நிவேதனமாக வைத்து, இந்த மந்திரத்தை சொல்லுங்கள். தினமும் 21 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். மாணவர்கள் இந்த மந்திரத்தை சொன்னால் அவர்கள் மன பயம் இல்லாமல் படிப்பில் சிறந்து விளங்கி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் அல்லது வேலை செய்து கொண்டிருப்பவர்கள் இந்த மந்திரத்தை சொன்னால் அவர்களுடைய வேலையில் சிறந்து விளங்குவார்கள். மேலும் மேலும் பிரமோஷன் கிடைக்கும். எல்லாம் இருந்தும் இந்த பயம் காரணமாக வாழ்க்கையில் பின்னுக்கு தள்ளப்பட்டவர்களுக்கு எல்லாம் இந்த மந்திரம் ஒரு வரப் பிரசாதமாக இருக்கும். கோழையாக இருப்பவர்கள், அப்படியே ஹனுமன் போல பலசாலியாக மாற்றிவிடும். மன பயம் உள்ளவர்கள் தினமும் உச்சரிக்க வேண்டிய ஹனுமன் மந்திரம் இதோ.

- Advertisement -

ஆஞ்சநேயம் அதி-பாத-
லநனம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பரிஜாத-தருமூல வாசினம்
பாவயாமி பவமான நந்தனம்.

ஓம் ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்.

அஞ்சனையின் மகனான ஆஞ்சநேயர், சிவந்த முகத்தைக் கொண்டவர், பொன்னால் செய்யப்பட்ட மலைபோல் தேகம் எங்கும் ஜொலி ஜொலிப்பு கொண்ட ஹனுமனே, பாரிஜாத மரத்தின் வேரில் எப்போதும் வாசம் செய்பவனே, அவனையே நினைத்து வழிபாடு செய்கின்றேன். காற்று கடவுளின் மைந்தன் எனக்கு அருள் தர வேண்டும், என்பதுதான் இந்த பாடலுக்கு உண்டான அர்த்தம்.

இதையும் படிக்கலாமே: வருமானம் பெருகி பணவரவை அதிகரிக்கும் தீபம்

இந்த மந்திரத்தை உச்சரித்து அனுமனின் பாதங்களில் நீங்கள் சரணடைந்தால், உங்களுடைய வாழ்க்கையை பிறகு ஹனுமன் பார்த்துக் கொள்வான். தினமும் 21 முறை இந்த மந்திரத்தை சொன்னால், அடுத்த 48 நாட்களுக்குள் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரும்.

பிறகு மன பயம் நீங்கி வாழ்க்கையில் தோல்வி என்பதை தகர்த்தெறிந்து, ஜெயம் ஜெயம் ஜெயம் என்ற வெற்றி வாகையை சூடுவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த மந்திரத்தை படித்து பலன் பெறலாம் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -