வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு 33 ரூபாய் வைத்து இந்த வழிபாடு செய்தால் கடலளவு இருக்கும் பணப் பிரச்சினைகள் காணாமல் போவதுடன், வராத பணம் கூட உங்களைத் தேடி வந்தே தீரும்.

lashmi with cash
- Advertisement -

மஹாலஷ்மி தாயாருக்கு வெள்ளி, செவ்வாய் இந்த இரண்டு தினங்களில் செய்யும் எந்த ஒரு பூஜையும் பரிகாரமும் அதிக பலன் கொடுக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த தினங்களில் செய்யப்படும் பூஜைகள் மங்கள வார பூஜைகள் என்றும் கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்த இரண்டு நாட்களும் தெய்வ அனுகிரகம் அதிகம் கிடைக்கக் கூடியவை. இந்த நாளில் நம்முடைய கடன் அடைந்து பண வரவை அதிகப்படுத்திக் கொள்ள மகாலட்சுமி தாயாருக்கு இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் அனைத்தும் சரியாகும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பண கஷ்டம் தீர பரிகாரம்
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு 7 மணி வரை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு ஒரு கண்ணாடி பவுல் அல்லது மண்ணால் ஆன ஒரு பெரிய அகல் இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டை தவிர மற்ற எந்த பொருளையும் பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

நீங்கள் எடுத்திருக்கும் பௌலில் முக்கால் பாகம் வரை கல் உப்பை நிரப்பி விடுங்கள். அதற்கு மேல் 33 ரூபாய் பணம் வைக்க வேண்டும். மூன்று பத்து ரூபாய் தாள், மூன்று ஒரு ரூபாய் நாணயம் அல்லது மூன்று பத்து ரூபாய் காயின் மூன்று ஒரு ரூபாய் காயின் இப்படி மட்டும் தான் 33 ரூபாயாக வைக்க வேண்டும்.

மஹாலஷ்மி தாயாரின் படத்திற்கு முன்பாக கல்லுப்பின் மீது இந்த பணத்தை வைத்த பின் மகாலட்சுமி தாயாரிடம் உங்களுக்கான பணத் தேவைகள் எதுவாக இருப்பினும் கடன், நகை அடமானம் என்று எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது சீக்கிரம் தீர வேண்டும் என்றும் அதற்கான பண வரவு எங்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பௌல் வெள்ளிக்கிழமை முழுவதும் உங்கள் பூஜை அறையில் இருக்கட்டும். அடுத்த நாள் சனிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜை அறைக்கு சென்று நீங்கள் வைத்திருந்த 33 ரூபாயை உங்கள் பீரோவில் தனியாக ஒரு இடத்தில் எடுத்து வைத்து விடுங்கள் அதை செலவு செய்யக் கூடாது. கல் உப்பை கால்படாத இடத்தில் கொட்டி விடுங்கள்.

இதே போல ஆறு வாரங்கள் புதிதாக கல் உப்பு, புதிதாக 33 ரூபாய் பணத்தை வைத்து இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். பெண்கள் அவர்களுக்கான மாத இடையூறுகள் வரும் பொழுது வீட்டில் கணவர் அல்லது பிள்ளைகளை செய்ய சொல்லாம். அப்படி செய்ய முடியாதவர்கள் அந்த வாரம் இந்த பரிகாரம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -

ஆறு வாரம் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து முடித்த பிறகு ஆறாவது வாரமும் கல்லுப்பை கால் படாத இடத்தில் கொட்டிய பிறகு 6 வாரமாக எடுத்து வைத்த 33 ரூபாய் பணம் உங்கள் பீரோவில் இருக்கும் அல்லவா அதை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் மகாலட்சுமி தாயார் ஆலயம் அல்லது ஏதாவது ஒரு அம்மன் ஆலயத்திற்கு சென்று இந்த பணத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி அங்கு மகாலட்சுமி தாயாரை நினைத்து மனதார உங்கள் வேண்டுதலை வைத்து விட்டு வந்து விடுங்கள்.

இந்த பரிகாரம் செய்து முடித்த உடனே உங்களுக்கான பண வரவுகள் அதிகரித்து பண தேவைகள் நிறைவேற ஆரம்பிக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்துடன் உங்கள் கடன் பிரச்சனைகள், அடமானத்தில் இருக்கும் நகைகள் வீட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள், அதற்கான நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே கைகூடும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: எதிரிகள், துரோகிகள் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? உப்பை பிள்ளையார் பிடித்து இப்படி வழிபடுங்கள், உங்களை ஜெயிக்க யாராலும் முடியாது!

இந்த ஒரு பரிகாரம் உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விடும். இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இன்று வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யத் தொடங்கி விரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து நல்ல ஒரு செல்வ செழிப்பான வாழ்க்கை வாழுங்கள்.

- Advertisement -