உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் தீர, 1 ரூபாய் நாணயம் போதும்! குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு இப்படி செய்து பாருங்கள்!

mahalakshmi-1
- Advertisement -

நம்முடைய வீட்டில் பலவகைப்பட்ட பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பது பணம். இந்த பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை,  முதலில் தீர்த்து விட்டால், வீட்டில் சந்தோஷம் கட்டாயம் குடியிருக்கும். அளவான வருமானம், இருந்தாலும் கடன் தொல்லை இருக்கக்கூடாது. யாரும் நம் வீட்டு வாசலில் வந்து நின்று, கடன் கொடுத்தவர்கள் பிரச்சனை செய்யக்கூடாது. உங்களுக்கு வரக்கூடிய வருமானத்தில் தான் உங்களுடைய குடும்பம் நடக்கவேண்டும். உங்கள் வருமானத்திற்கு தகுந்தவாறு உங்கள் பட்ஜெட்டை அடக்கிக் கொள்ள வேண்டும். அதில் மட்டும் உறுதியாக இருக்க வேண்டும். முடிந்தவரை தேவைக்கு அதிகமாக கடன் வாங்கும் பழக்கத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பல பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண, எளிய முறையில் ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்!

cash

உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணாடி பவுல் அல்லது வெள்ளி பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிய பழைய வெள்ளி கிண்ணம் உங்கள் வீட்டில் இருந்தாலும் அதை எடுத்து சுத்தப்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். பழைய வெள்ளிக் கிண்ணத்தில், கொஞ்சம் நெய் தடவி, ஸ்டவ்வில் வைத்து லேசாக சூடு பண்ணி, சுத்தமாக பவுடர் போட்டு துலக்கி விடுங்கள். அவ்வளவுதான். அதன் பின்பு, இந்த பரிகாரத்திற்க்கு, அந்த வெள்ளிக் கிண்ணதையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

வெள்ளிக் கிண்ணம் வீட்டில் இல்லாதவர்கள் பரவாயில்லை! கண்ணாடி கிண்ணத்தையோ அல்லது பீங்கான் கிண்ணத்தையோ பயன்படுத்திக்கொள்ளலாம். முதலில் அந்த கிண்ணத்தில் பச்சரிசியை முழுமையாக நிரப்பி விட்டு, மகாலட்சுமி படத்திற்கு முன்பாக வைத்து, தீபம் ஏற்றி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு சிறிய பூஜையை செய்து முடித்து விடுங்கள். எப்பவும் போல் வெள்ளிக்கிழமை பூஜை போலவே, தீபம் ஏற்றி, கற்பூர ஆரத்தி காட்டி உங்கள் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

poojai

அதன் பின்பாக, அந்த கிண்ணத்தை எடுத்துக் கொண்டுபோய் உங்கள் வீட்டு சமையலறையில் தென்கிழக்கு மூலையில் வைத்து விடுங்கள். இப்போது உங்கள் குடும்பத்தில் இருக்கும் உருபினர்கள் எல்லோர் கையிலும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத் தலைவர், தலைவி அதன் பின்பு குழந்தைகள், என்று எல்லோரும் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை மகாலட்சுமியை வேண்டிக்கொண்டு, குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு, உங்கள் வீட்டில் இருக்கும் பணகஷ்டம் தீர வேண்டும் என்று மனதார நினைத்து, அந்த பச்சரிசியில் புதைத்து வைத்து, புதைத்து விடுங்கள். அதாவது ஒரு ரூபாய் நாணயம் வெளியில் தெரியாமல் பச்சரிசிக்கு உள்பக்கமாக வைத்துவிடுங்கள்.

- Advertisement -

உங்கள் வீட்டு சமையலறையில் அந்தக் கிண்ணம் அப்படியே இருக்கட்டும். மாதத்திற்கு ஒரு முறை மட்டும், பழைய அரிசியை பறவைகளுக்கு இறையாக போட்டுவிட்டு, புதிய அரிசியை வைத்து மறுபடியும் இதேபோல், ஒரு ரூபாய் நாணயத்தை அந்த இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த அரிசியில் இருந்த பழைய ஒரு ரூபாய் நாணயத்தை மீண்டும் பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பார்ப்பதற்கு இது ஒரு சிறிய முறையாகத்தான் தெரியும். ஆனால், இப்படி தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில், உங்கள் வீட்டில் கஷ்டங்களும் தொடர்ந்து குறைந்து வருவதை கண்கூடாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

pakku

சில பேருக்கு கடன் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கும். கடன் கழுத்தை நெறிக்கும். வாழ்வா சாவா போராட்டம் இருந்தால், தொடர்ந்து 3 வாரம் வெள்ளிக்கிழமை மட்டும், மகாலட்சுமி முன்பு இப்படி வழிபாடு செய்யுங்கள். எச்சில் படாத ஒரு தாம்பாளத் தட்டில் 5 வெற்றிலை, 5 முழு கொட்டை பாக்கு, 5 ஜாதிக்காய், ஐந்து ரூபாய் நாணயம் 1, இவை அனைத்தையும் அந்தத் தட்டில் வைத்து மகாலட்சுமி முன்பு படைத்து, ஒரு தாமரைப்பூவை மகாலட்சுமிக்கு வைத்து, பணம் பிரச்சனை விரைவாக தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள், மூன்று வாரத்திற்குள்ளேயே உங்களுக்கு ஒரு நல்லவழி கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நம்பிக்கையோடு வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை வழிபட்டால் கைமேல் பலன் நிச்சயம் உண்டு என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தெய்வங்கள் கோவிலுக்குள் பேசும் சத்தம் கேட்கும் விசித்திர கோவில்? என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிக்கும் விஞ்ஞானிகள்!!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -