பணம் முடக்கத்தை நீக்கும் தீபம்.

panam deepam
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு முதலில் பணம் என்பது தாராளமாக இருக்க வேண்டும். அப்படி தாராளமாக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் என்பது சீராக இருந்தால்தான் அந்த பணத்தை அனுபவிக்க முடியும். இப்படி இந்த இரண்டும் இன்றியமையாததாக இந்த காலத்தில் திகழ்கிறது. இந்த இரண்டையும் தக்க வைத்துக் கொள்வதற்கு எந்த பூவை வைத்து தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்

ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்களும், மகத்துவ குணங்களும் நிறைந்துதான் இருக்கின்றன. அந்த பூக்களை நாம் முறையாக பயன்படுத்தும் பொழுது நம்முடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்பதுதான் உண்மை. பல வகையான பூக்களை நாம் நம் வீட்டில் வைத்து வளர்த்தாலும் ஒரு சில பூக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.

- Advertisement -

அந்த வகையில் நித்திய கல்யாணி என்று சொல்லக்கூடிய பூ சிவபெருமானுக்குரிய பூவாக திகழ்கிறது. மேலும் இதை சுடுகாட்டு பூ என்றும் கூப்பிடுவார்கள். அதாவது சுடுகாட்டில் அதிக அளவில் இந்த செடிகளை வைத்து வளர்ப்பார்கள். அப்படிப்பட்ட மலரை வைத்து நாம் தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்று பார்ப்போம்.

இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை தோறும் ஏற்ற வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தால் அவர்கள் இருக்கும் அறையில் இந்த தீபத்தை ஏற்றலாம் அல்லது சாதாரணமாக பூஜை அறையிலும் ஏற்றலாம். ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மூன்று எலுமிச்சம் பழங்களை வைக்க வேண்டும் முக்கோண வடிவில் வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு மூன்று மஞ்சள் கிழங்கை எலுமிச்சம் பழங்களுக்கு நடுவில் வைக்க வேண்டும். இவை அனைத்திற்கும் நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி திரி போட வேண்டும். பிறகு மூன்று குப்பைமேனி இலை மற்றும் ஒரு நித்திய கல்யாணி பூ இவை அனைத்தையும் அந்த எண்ணெயில் போட்டு பிறகு தீபம் ஏற்ற வேண்டும்.

இவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய பண முடக்கம் என்பது நீங்கும். மேலும் எந்த வகையில் நமக்கு இருக்கும் தடைகள் அனைத்தும் விலகும். நோய் வாய்பட்டவர்கள் இருக்கும் அறையில் இந்த தீபத்தை தினமும் ஏற்றி வர அவர்களின் நோய் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: நோயற்ற வாழ்வை தரும் தன்வந்திரி ஜெயந்தி.

எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த பூவை வைத்து தீபம் ஏற்றி வழிபட்டு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய முடக்கங்கள் அனைத்தையும் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம்.

- Advertisement -