இந்த நான்கு பொருட்களை மட்டும் ஒன்றாக சேர்த்து வைத்து பாருங்கள். நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் வகையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

manja
- Advertisement -

பணத் தேவை இல்லாதவர்கள் என்று எவருமில்லை. எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பணம் வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். இன்னும் கொஞ்சம் அதிகம் கிடைத்துவிட்டால் இதை விட அதிகமாக வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி பணத்தின் மீது உள்ள மனிதனின் ஆசை அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது. அதுபோல பணத்தின் தேவையும் அதிகமாக இருக்கிறது. பணம் இல்லாமல் இருந்தால் இன்றைய சமூகத்தில் யாரும் மதிப்பதில்லை. நமது பேச்சைக் கேட்பதற்கு கூட எவரும் இருக்க மாட்டார்கள். எனவே தான் ஒவ்வொரு மனிதனும் அதிகம் பணம் சம்பாதிப்பதற்காக பணத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி கடின முயற்சியின் மூலம் பணத்தை சம்பாதிப்பதற்காக போராடிக்கொண்டிருந்தாலும் வீட்டில் சில ஆன்மீக சூட்சமங்களை கடைபிடிப்பதன் மூலம் பண வரவை அதிகரிக்க முடியும். அவ்வாறு வீட்டில் இருக்கும் இந்த நான்கு பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரே இடத்தில் வைத்திருக்க, விரைவாக பணவரவு அதிகரிக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஆன்மீகம் முறைப்படி செல்வத்திற்கு எல்லாம் அதிபதியாக இருப்பவர் மகாலட்சுமி தேவி ஆவாள். ஒரு குழந்தை அண்ணியின் அணைப்பில் இருக்கும் பொழுது எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறதோ, அதுபோல மகாலட்சுமி தேவியின் அருள் கிடைத்துவிட்டால் ஒவ்வொரு மனிதனும் மிகவும் பாதுகாப்பாக இருக்க முடியும்.

- Advertisement -

மகாலட்சுமி வாசம் செய்யும் ஒவ்வொரு இல்லத்திலும் பணத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களுக்கு பணத்திற்கான குறை ஏற்படாது. இவ்வாறு மகாலட்சுமி தேவியின் அருள் நமது வீட்டிலும் நிரந்தரமாக நிலைத்திருக்க அன்னபூரணியின் அம்சமான அரிசியில் இந்த நான்கு பொருட்கள் சேர்ந்த மஞ்சள் மூட்டையைப் போட்டு வைக்க வேண்டும்.

மகாலட்சுமி வாசம் நிறைந்த சில பொருட்கள் எப்பொழுதும் நமது இல்லங்கள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை விரலிமஞ்சள், ஏலக்காய், கிராம்பு மற்றும் சில்லறை நாணயங்கள். இவை அனைத்திற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த பலன்கள் இருக்கிறது. இவை மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஒரு வெள்ளை நிறத் துணியை எடுத்துக் கொண்டு, அதனை மஞ்சள் கலந்த தண்ணீரில் முழுவதுமாக நினைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனை காய வைத்து, மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மஞ்சள் துணியில் ஒரு விரலிமஞ்சள், 2 கிராம்பு, 2 ஏலக்காய் மற்றும் ஒரு ஒரு ரூபாய் நாணயம் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு மஞ்சள் நிற நூலை வைத்த இந்த மூட்டையை முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும். பின்னர் இதனை பூஜை அறையில் இறைவனின் பாதத்தில் வைத்து, தீபாராதனை காண்பித்து பூஜை செய்த பிறகு, உங்கள் வீட்டின் சமையல் அறையில் அரிசி பாத்திரத்தில் இதனை வைத்து விட வேண்டும். இவ்வாறு மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் இல்லத்தில் பணத்திற்கான தட்டுப்பாடு என்றுமே இருக்காது.

- Advertisement -