சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கே உங்கள் வீட்டில் பணப்பற்றாக்குறை ஏற்படுகிறதா? இது உங்களுக்கான பதிவு.

maligai
- Advertisement -

நம் கையில் கடந்த சில நாட்களாக பணப்புழக்கம் மிக மிக குறைவாக உள்ளது. குறிப்பாக அடித்தட்டு மக்களும், நடுத்தர நிலையில் வாழும் மக்களும் மாத வருமானத்திற்க்கே கஷ்டப்பட்டு வருகிறார்கள். வாழ்க்கையில் பணத்திற்காக கஷ்டப்பட்டு வருபவர்களுடைய நிலைமைக்கு அவர்களுடைய கர்மவினையும் ஒரு காரணம் தான். இந்த கர்மவினையை குறைப்பதற்கு ஆன்மீக ரீதியாக பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு சில பரிகாரத்தை பற்றிதான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

maligai-prorutkal

சாஸ்திரப்படி ஒருவருடைய ஜாதக கட்டத்தில் கர்மவினையின் படி நல்ல பலனை கொடுப்பதும், கெடுபலன்களை கொடுப்பதும் சனி பகவான். சனி பகவானை போல கொடுப்பவரும் கிடையாது. கெடுப்பவரும் கிடையாது என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் சனிபகவானுக்கு உகந்ததாக சொல்லப்படும் பொருள் எள். எள்ளிலிருந்து எடுக்கக் கூடியது நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணையை கோவிலுக்கு தீபம் ஏற்றுவதற்கு எவ்வளவு தானமாக வாங்கிக் கொடுக்கின்றோமோ, அந்த அளவிற்கு நம்முடைய கர்ம வினைகள் குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அடுத்தபடியாக சில வீடுகளில் மாதந்தோறும் வாங்கக்கூடிய மளிகை பொருட்களை வாங்க முடியாத அளவிற்கு வறுமை இருக்கும். இப்படி உங்களுடைய வீட்டிலும் பிரச்சினை இருந்தால் நீங்கள் மளிகை பொருட்கள் வாங்கும் போது அதோடு சேர்த்து சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயை வாங்காதீர்கள். எண்ணெயை தனியாக வாங்கிப் பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வருமானத்தில் மாற்றம் தெரியும். வறுமை உங்கள் வீட்டில் இருந்து விலகும்.

nallennai

மாதம்தோறும் அரிசி பருப்பு வாங்க கூட காசு இல்லை என்ற பிரச்சனை உங்கள் வீட்டிற்கு வரவே வராது. அப்படியே மளிகை பொருட்களை, வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய சுக்கிர ஹோரையில் வாங்கினால் வீட்டில் எப்போதுமே தன தானியத்திற்கு குறைவில்லாமல் பெருகிக் கொண்டே செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

ஏன் இந்த எண்ணெயை மட்டும் தனியாக வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா? எண்ணெய் என்பது சனி பகவானுக்கு உகந்த ஒரு பொருளாக சொல்லப்பட்டுள்ளது. மற்ற பொருட்கள் வரிசையில் எண்ணெயை வைக்காமல் எண்ணெயை தனித்துவம் வாய்ந்த, மகத்துவம் வாய்ந்த பொருளாக கருதி அதை நம் வீட்டிற்கு வாங்கி வந்தோம் என்றால் சனிபகவான் மனம் குளிர்ந்து நம் குடும்பத்தில் இருக்கும் கஷ்டத்தை தீர்த்து வைப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது.

sani-baghavan

இந்த எண்ணெய்யை நம்முடைய வீட்டிற்கு எந்த கிழமையில் எப்போது வேண்டும் என்றாலும் வாங்கி வரலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. எண்ணெய்க்கு என்று தனி மதிப்பு கொடுத்து உங்கள் வீட்டிற்கு தனியாக வாங்கி வந்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வீட்டின் வறுமை நிலை மாறும்.

இது ஒரு முயற்சிதான். இதை செய்துவிட்டால் நீங்கள் மறு நாளில் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள் என்று சொல்ல வரவில்லை. உங்கள் வீட்டினுடைய நிலைமை மாறி மேலும் மேலும் தன தானியத்திற்க்கு எந்த ஒரு குறைவும் இருக்காமல், மேலும் மேலும் உங்களுடைய வீட்டில் பொருள் வாங்கும் யோகம் வந்து கொண்டே இருக்கும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள குறிப்புதான் இது. நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வீட்டில் இருக்கும் வறுமை நிலையில் நிச்சயம் மாற்றம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -