பணத்தை சேர்க்கும் பணப்பெட்டி ரகசியம்

cashbox
- Advertisement -

பணத்தை அதிகப்படியாக சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய சூழ்நிலையில் எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது. ஆனால் பணம் வருவதற்கு முன்பாகவே அதற்கான செலவுகள் வரிசை கட்டி நிற்கின்றது. வரக்கூடிய பணத்தை சேமிப்பதற்கு என்னதான் வழி. இதற்கு சில சூட்சம வித்தைகளை அந்த காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அதிலிருந்து ஒரு சிலவற்றைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பணத்தை சேமித்து வைக்க வழிகள்

இதற்கு முதல் வழியாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது என்ன தெரியுமா பணத்தை வைக்கக் கூடிய பெட்டி மரப்பட்டையாக இருக்க வேண்டும். அதிலும் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட மரப்பெட்டியில் பணத்தை வைத்தால் பணம் நம்மிடமே தேங்கி நிற்கும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எல்லோராலும் இவ்வளவு விலை உயர்ந்த தேக்கு மர பெட்டியை வாங்க முடியாது.

- Advertisement -

தேக்கு மரத்துக்கு அடுத்த இடத்தில் சொல்லப்பட்டுள்ள மரம் பலாமரம். பலாமர கட்டையில் பணப்பெட்டி செய்து வைத்தாலும், பணம் பல மடங்காக பெருகும். பலாமர விதையை, ஒரு விதையை போட்டால் அது நமக்கு 100 பழத்தை கொடுக்கிறது. அதேபோலத்தான் நீங்கள் அந்த பெட்டியில் ஒரு ரூபாயை வைத்து சேமித்து வந்தால் அது 100 ரூபாயாக பல மடங்காக பெருகும் என்பதும் நம்பிக்கை.

வாய்ப்பு கிடைத்தவர்கள் முடிந்தால் பலாமர பலகையில் ஒரு பணப்பெட்டியை சின்னதாக செய்து வீட்டில் வைத்து அதில் பணத்தை சேமித்து வாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். இந்த பலாமர பெட்டிக்கு உள்ளே சிவப்பு நிற துணி விரிக்கவும். வெல்வட்டில் துணி விற்கும், சிவப்பு நிறத்தில் அந்த துணியை விரித்து அதன் மேலே இரண்டு கோமதி சக்கரம், இரண்டு தாமரை மணி விதை, வைத்து அதற்குள்ளே பணத்தை சேமித்து வைத்தால் பணம் பல மடங்கு ஈர்க்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இந்த கோமதி சக்கரத்தையும் தாமரை விதைகளையும் காசு கொடுத்து கடையிலிருந்து வாங்குவதை விட, உங்களுக்கு நன்றாக தெரிந்தவர்கள் பணக்காரர்களிடம் இருந்து அதை நீங்கள் தானமாக பெற வேண்டும். இது சாத்தியமா என்று கேட்டால், கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் இப்படி பணக்காரர்களிடம் கையில் இருந்து நம் கைக்கு வரக்கூடிய அந்த பொருளில் அவர்களுடைய பாசிட்டிவ் எனர்ஜியானது இருக்கும்.

அதே பாசிட்டிவ் எனர்ஜி நம்மிடமும் வரும்போது நாமும் பணக்காரர் ஆவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. உங்களால் முடிந்தால் நீங்கள் இந்த தாமரை மணி விதை கோமதி சக்கரங்களை வாங்கி நல்ல எண்ணத்தோடு, அடுத்தவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்று தானம் கொடுக்கலாம். இதன் மூலமாகவும் உங்களுக்கு நேர்மறை ஆற்றல் ஈர்க்கப்பட்டு உங்களுக்கும் பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

மேல் சொன்ன இந்த சின்ன சின்ன எளிமையான பரிகாரங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரிய அளவில் செல்வ வளத்தை கொடுக்கக் கூடியவை. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -