பணப்பிரச்சனை தீர வெற்றிலை பரிகாரம்

cash-betal-leaf
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படுவது இந்த பண பிரச்சனை தான். பணப் பிரச்சனை தீர்ந்தாலே கடன் பிரச்சனையும் சரியாகி விடும். கடன் மட்டும் இன்றி நமக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருப்பதை இந்த பணம் தான். பணப் பிரச்சனை சரியாக வேண்டுமென்றால் பணத்தை சம்பாதிக்க வேண்டும். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் சம்பாதிக்கக் கூடிய சூழ்நிலையும் சம்பாதித்த பணம் தங்குவதற்கான யோகத்தையும் பெற சில தங்களிடம் முறைகளை நாம் அறிந்தோம். அப்படி இந்த பண பிரச்சினை சரி செய்து பண வரவை அதிகரிக்க கூடிய ஒரு எளிய பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணப் பிரச்சனை கடன் பிரச்சனை தீர வெற்றிலை பரிகாரம்

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அதிலும் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்வது தான் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு மூன்று வெற்றிலை, இரண்டு கொட்டைப்பாக்கு, ஆறு ஏலக்காயை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். அதாவது சூரிய உதயம் ஆவதற்கு முன்பாகவே இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து முடித்து விட வேண்டும். ஆகையால் வெள்ளிக்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து முடித்த பிறகு முதலில் உங்கள் பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த மூன்று வெற்றிலையும் எடுத்து அதல் கொட்டைப்பாக்கு, ஏலக்காயை வைத்து நன்றாக சுருட்டி மடித்துக் கொள்ளுங்கள். வெற்றிலை கிழிந்து விடக் கூடாது கவனமாக சுருட்டுங்கள். கொட்டைப்பாக்கும் ஏலக்காயும் வெளியில் விழுந்து விடாதபடி வெள்ளை நிற நூலால் இலையை நன்றாக சுற்ற வேண்டும்.

அதன் பிறகு இந்த வெற்றிலை மடித்து மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அத்துடன் இந்த முடிச்சிக்கு சாம்பிராணி கற்பூர தீபாராதனை காட்டிக் கொடுங்கள். அதன் பிறகு இதைக் கொண்டு உங்கள் பணம் வைக்கும் பெட்டியில் பீரோ போன்றவற்றை வைத்து விடுங்கள்.

- Advertisement -

இது ஒரு வாரம் வரை அப்படியே இருக்க வேண்டும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று இதை எடுத்து விடுங்கள். புதிதாக இதே போல் செய்ய வேண்டும். பழைய வெற்றிலையை வெள்ளிக்கிழமை சாம்பிராணி தூபம் போடும் போது அதில் அந்த வெற்றிலை, கொட்டைப்பாக்கு, ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து போட்டு விடுங்கள்.

வளர்பிறை வெள்ளிக்கிழமை செய்யும் போது மாதத்தில் இரண்டு வெள்ளிக்கிழமைகள் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வது போல இருக்கும். இதில் வைத்திருக்கும் வெற்றிலை கொட்டைப்பாக்கு இவை மகாலட்சுமி தாயார் உகந்த பொருட்கள். ஏலக்காய் வெள்ளை நிற நூல், ஆறு எண்ணிக்கை இவையெல்லாம் சுக்கிரனுக்கு உகந்தது.

இதையும் படிக்கலாமே: வருமானம் அதிகரிக்க பரிகாரம்

பண வரவிற்கு உகந்த இவர்கள் இருவரையும் நினைத்து செய்யப்படும் இந்த பரிகாரமானது உங்களின் பண தேவைகளை பூர்த்தி செய்து கடன் தொல்லை இன்றி நிம்மதியாக வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -