வருமானம் அதிகரிக்க பரிகாரம்

suriyan cash
- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையில் எவ்வளவு சம்பாதித்தாலும் வருமானம் போத வில்லை தான். வருமானத்திற்கு மீறிய செலவு எப்போதும் வந்து கொண்டே தான் இருக்கிறது. செலவை நம்மால் கட்டுப்படுத்த முடியாது ஆனால் வருமானத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கலாம் அல்லவா அந்த வருமானத்தை அதிகரிக்க கூடிய ஒரு எளிய பரிகாரத்தை தான் இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வருமானம் அதிகரிக்க வெல்லம் பரிகாரம்

பொதுவாக நாம் பணம் சேர வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும் வீட்டில் பொருள் சேர வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயார் சுக்கிரன் போன்றவரை தான் வழிபடுவோம். ஏனெனில் இவர்கள் தான் பணத்திற்கான அதிபதி கடவுளாக இருக்கிறார்கள். இதில் மாற்றம் ஒன்றும் இல்லை.

- Advertisement -

இந்த பணம் பொருள் நம்மிடம் வந்து சேரவும் வருமானம் அதிகரிக்கவும் நம்முடைய மனமானது அதற்கேற்ற நிலையில் தயாராக இருக்க வேண்டும். அதற்கேற்ற உழைப்பை செலுத்தவும் நாம் தயாராக இருக்க வேண்டும். உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் அதற்கு ஏற்ற உத்வேகத்தையும் அறிவையும் கொடுக்கக் கூடியவர் சூரிய பகவான். அவரை நினைத்து தான் இப்போது இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகிறோம்.

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று செய்யுங்கள் வியாழக்கிழமையில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். பெண்கள் மாதவிலக்கான நாட்களில் மட்டும் இதை செய்யாமல் இருப்பது நல்லது. இந்த பரிகாரத்திற்கு ஒரு சிறிய துண்டு வெல்ல கட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஆரஞ்சு நிற பட்டு துணியில் மூட்டையாக கட்டி கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த மூட்டையை உங்கள் கையில் வைத்து வேலை செய்பவர்களாக இருந்தால் வருமானம் அதிகரிக்க வேண்டும் அல்லது சம்பள உயர்வு வேண்டும். வீட்டில் இருப்பவர்களாக இருந்தால் தங்கள் கணவருக்கு வருமானம் உயர வேண்டும். இப்படியான வருமானத்தை பெருக்கக் கூடிய ஒரே ஒரு வேண்டுதலை மனதில் கொண்டு கீழ் வரும் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

ஓம் காமநியாகராய நமஹ

என்று இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு இந்த முடிச்சை வடகிழக்கு மூலையில் உங்கள் கைப்படும் தூரத்தில் கட்டி தொங்க விடுங்கள். தினந்தோறும் காலையில் குளித்து முடித்த பிறகு உங்களுடைய மோதிர விரலை இந்த முடிச்சின் மேல் வைத்து இதே மந்திரத்தை 10 முறை சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் உங்கள் சங்கல்பத்தில் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: துன்பங்களைப் போக்கும் வேப்பிலை தீபம்

இந்த முடிச்சிலுள்ள வெல்லம் கரைந்து விட்டால் அந்த வாரத்தில் உள்ள வியாழக்கிழமை இதே போல் புதிதாக வேறு மாற்றிக் கட்டி விடுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து சிறிது நாட்களில் கொள்ளாகவே உங்களுடைய வருமானம் பல வகைகளில் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கான வாய்ப்பு வரும் பொழுது நீங்கள் அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -