தினம் தினம் இந்த தண்ணீரில் குளித்தால், தினம் தினம் பண மழையிலும் நனையலாம்.

mahalashmi3
- Advertisement -

தினம் தினம் பண மழையில் நனைவதற்கு யாருக்குத்தான் ஆசை இருக்காது. எல்லோருக்கும் பண தேவை இருக்கிறது. எல்லோருக்கும் பண கஷ்டமும் இருக்கிறது. அதை முழுமையாக சரி செய்ய முடியவில்லை என்றாலும் தேவைக்கு ஏற்ப, தேவையான சமயங்களில், தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தினம் தினம் போராடிக் கொண்டதன் இருக்கின்றோம். இந்த பண பிரச்சனையிலிருந்து தப்பிக்க தினம் தினம் தேவையான செலவுகளை சமாளிக்க வருமானத்தை எப்படி பெருக்கிக் கொள்வது. ஆன்மீகம் சொல்லும் எளிமையான ஒரு பரிகாரம் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

தினம் தினம் பண தேவையை சமாளிக்க செய்ய வேண்டிய பரிகாரம்:
முதலில் தினமும் எழுந்து காலையில் குளிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இது நிறைய பேரிடம் இப்போது கிடையாது. வேலைக்கு செல்ல வேண்டும். பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்றால் மட்டும்தான் வீட்டில் இருப்பவர்கள் குளிக்கிறார்கள். வீட்டில் இருக்கும் சமயத்தில், சாயங்கால நேரம் குளித்துக் கொள்ளலாம் என்று ஆண்களும் சரி, பெண்களும் சரி, காலை நேர குளியலை தவற விடுகிறார்கள். இது முதல் தவறு.

- Advertisement -

காலையில் எழுந்தவுடன் குளிப்பதே சரியான முறை. நீங்கள் குளிக்கின்ற அந்த தண்ணீரில் 2 ஸ்பூன் பால் ஊற்றி கலந்து அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். பாக்கெட் பாலோ பசும்பாலோ உங்களுடைய வீட்டில் எந்த பால் இருக்கிறதோ, காய்ச்சாத பாலாக அதை இரண்டு ஸ்பூன் அந்த தண்ணீரில் ஊற்றி குளித்து விட்டால் ஐஸ்வர்ய கடாட்சம் பெருகும். காய்ச்சாத பால் இல்லாத சமயத்தில் இன்னொரு பொருளை இதற்கு பதில் சேர்க்கலாம். ஏலக்காய். இரண்டு ஏலக்காய்களை ஒரு கல்லில் வைத்து நன்றாக நசுக்கி குளிக்கின்ற தண்ணீரில் போட்டுவிட்டு ஐந்து நிமிடம் கழித்து அந்த தண்ணீரில் குளித்து விடுங்கள். இந்த இரண்டு பொருட்களை சேர்த்து குளிக்கும் போது நமக்கு ஐஸ்வர்ய கடாட்சம் பெருகும். தினம் தினம் பணவரவு அதிகரிக்கும்.

அதேபோல தண்ணீரை வீட்டில் வீணாக செலவழிக்க கூடாது. தண்ணீரை பழித்துப் பேசக்கூடாது. தண்ணீரை எந்த அளவுக்கு புனிதமாக மதித்து அதற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய வீட்டில் பணம் சேரும். குறிப்பாக சமையலறையில் சிங்கில் தண்ணீர் சொட்டி கொண்டே இருக்கக் கூடாது. அதை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். இப்படி சமையல் அறையில் தண்ணீர் கசிந்தால் கையில் நிச்சயம் பணம் தாங்காது. எந்த ரூபத்திலும் தண்ணீர் லீக்காகக் கூடாது. ஆர். ஓ வாட்டர் போட்டு இருந்தாலும் அதிலிருந்து வெளிவரக்கூடிய தண்ணீரை ஒரு குடத்தில் தான் பிடித்து வைக்க வேண்டுமே தவிர, அனாவசியமாக அதை சாக்கடையில் விடாதீங்க.

- Advertisement -

அதேபோல என்னதான் வாட்டர் கேனில், ஆர்.ஓ வாட்டரில் தண்ணீர் இருந்தாலும் எப்போதும் ஒரு நிறை குடத்திலோ அல்லது சொம்பிலோ முழுமையாக தண்ணீரைப் பிடித்து மூடி சமையலறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சமையலறையில் நிறைகுடம் தண்ணீர் இருந்தால் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சமும் நிறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இரவு நேரத்தில் ஒரு சொம்பில் தண்ணீரை ஊற்றி திறந்தபடி சமையல் அறையில் வைக்கவும்.

இதையும் படிக்கலாமே: வாஸ்து குறைபாடு நீங்க இனி நீங்கள் ஆயிரம் ஆயிரமாக செலவு செய்ய வேண்டாம். வாஸ்து நாளில் மிக எளிமையாக இந்த மூன்று தெய்வத்தை வணங்கினாலே போதும். சொந்த வீடு வாங்கும் யோகமும் விரைவில் வரும்.

மேலே சொன்ன எளிமையான இந்த சின்ன சின்ன பரிகாரங்களே போதும். உங்களுடைய வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சத்தை தங்க வைப்பதற்கு. பண வருவாயை பெருக்கிக் கொள்வதற்கு. இப்படி சின்ன சின்ன விஷயங்களை முறையாக செய்து வந்தாலே பெரிய அளவில் நன்மையை அடைய முடியும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -