வாஸ்து குறைபாடு நீங்க இனி நீங்கள் ஆயிரம் ஆயிரமாக செலவு செய்ய வேண்டாம். வாஸ்து நாளில் மிக எளிமையாக இந்த மூன்று தெய்வத்தை வணங்கினாலே போதும். சொந்த வீடு வாங்கும் யோகமும் விரைவில் வரும்.

murugan house vasthu bhagavan
- Advertisement -

வீட்டை கட்டி முடிப்பதே ஒரு பெரிய பாடு என்றால் கட்டி முடித்த வீட்டில் வாஸ்து குறைபாடு வந்து விட்டால் அது அதைவிட பெரிய பிரச்சனையாக மாறி விடும். பொதுவாக வீடு கட்டும் போது நாம் இதையெல்லாம் பார்த்து தான் கட்டுவோம். ஆனால் சில சமயங்களில் கட்டிய வீட்டை வாங்கும் போது அல்லது தெரியாமல் நாம் சில விஷயங்களை கவனிக்காமல் விட்டு விட்டாலோ இது போன்ற வாஸ்து குறைபாடுகள் வந்து விடுகிறது. முன்பெல்லாம் இந்த வாஸ்து என்பது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் இது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆகையால் ஏதேனும் ஒரு சின்ன விஷயம் என்றாலும் நாம் உடனே வாஸ்து குறையாக இருக்குமோ என்று நிலைக்கு ஆளாகி விட்டோம்.

நாம் இந்த வாஸ்து குறைபாடுகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு வீட்டில் வாஸ்து என்பது சரியாக அமைந்தால் தான் அந்த வீடு எப்போதும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் அதில் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் வாழ முடியும். அப்படி இல்லாமல் போனால் ஏதேனும் மன குழப்பம், ஆரோக்கிய குறைபாடு, தொழில் வளர்ச்சி இல்லை, என்பன போன்ற பல இன்னல்களை சந்திக்க நேரிடும். இந்த வாஸ்து பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு எளிய வழிபாட்டு முறையை தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

வாஸ்து குறைபாடு நீங்க வழிபாட்டு முறை
பொதுவாக வாஸ்து குறைகள் நீங்க வேண்டும் எனில் நாம் வாஸ்து பகவானுடைய பூஜையை முறையாக செய்ய வேண்டும். இத்துடன் வீடு வாசல் போன்றவை அமைவதற்கு காரணமான செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டும் அத்துடன் அந்த கிரகத்தின் அதிபதியான முருகப்பெருமானையும் வழிபடுவது மிகவும் முக்கியம்.

இந்த வழிபாட்டை நாம் வாஸ்து நாளில் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் வாஸ்து நாள் என்று காலண்டரில் குறிப்பிட்டிருக்கும். அந்த நாளில் இந்த பூஜையை செய்ய வேண்டும். அன்று உங்கள் பூஜை அறையில் சுத்தம் செய்து படங்களுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு பூ என பூஜை வேலைகள் அனைத்தையும் முடித்துப் பிறகு முருகப்பெருமானுக்கு செவ்வரளி பூக்களால் மாலை தொடுத்து போட்டு அவருக்கு முன் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

அந்த தீபத்தையே நீங்கள் வாஸ்து பகவானுக்குரியதாகவும், செவ்வாய் கிரகத்திற்குரியதாகவும், மனதார நினைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தீபத்திற்கு முன்பாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைத்து ஓம் வாஸ்து புருஷாய நமஹ என்ற இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லிய பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு நீங்கள் நெய்வேத்தியமாக படைத்த இந்த வெற்றிலை பாக்கு பழங்களை உங்கள் வீட்டிற்கு வெளியில் சென்று மண் தோண்டி இதையெல்லாம் போட்டு புதைத்து விடுங்கள். இது வாஸ்து பகவானுக்கு நீங்கள் படைக்கும் நெய்வேத்தியமாகும். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது அந்த இல்லத்தில் எந்தவித வாஸ்து குறைபாடு இருந்தாலும் அது சரியாகும் என்பதோடு வாஸ்துவினால் ஏற்படும் பாதிப்புகளும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: அக்கம் பக்கம் கண்ணு யாரு கண்ணும் படாமல் இருக்க ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் தவறாமல் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

இதே வழிபாட்டு முறைகளை புதிதாக வேறு வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களும், வாடகை வீட்டிலிருந்து புதிய வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் கூட செய்யலாம். நிச்சயம் இது நல்ல பலனை கொடுக்கக் கூடிய வழிபாடுகளில் ஒன்று. வாஸ்து தோஷத்தில் இருந்து வெளிவர பல லட்சங்களை செலவு செய்வதை காட்டிலும் இந்த தெய்வங்களை சரணடைந்து அதிலிருந்து நம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது எளிய வழி தானே.

- Advertisement -