கார்த்திகை மாதத்தில் நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்றி வந்தால் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் மறைந்து ஐஸ்வர்யம் உண்டாகும்

vilakku-uppu-lakshmi
- Advertisement -

ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ இந்த காலகட்டத்தில் முக்கியமாக தேவைப்படும் ஒன்று பணம். பணம் இல்லா வாழ்க்கை நிம்மதியாக இருக்காது. பணத்தை சம்பாதிக்க மனிதன் தினம் தினம் தனது வாழ்க்கையில் அதிக போராட்டங்களை சந்திக்கின்றான். புதிய வேலைக்கு செல்ல முதலில் தேர்வாக வேண்டும். அப்படி வேலை தேடி அலைந்து அந்த வேலையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எத்தனையோ போராட்டங்களை கடந்து வருகிறான். அப்படி வேலை செய்து கொண்டு வரும் வருமானம் தனது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லாத நிலை வரும்பொழுது கடன் வாங்குகிறான். இப்படி வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மற்றவர் முன் தலைகுனிந்து நின்றான். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபட இந்த தீபத்தை மட்டும் நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து ஏற்றி வழிபடுங்கள். பணப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நல்ல வழி பிறக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

panjakavya-vilakku0

கார்த்திகை மாதம் முருகனுக்கு விசேஷமான மாதமாகும். இந்த மாதத்தில் முருக பக்தர்கள் அனைவரும் மாலையிட்டு, விரதமிருந்து முருகனின் அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனை தரிசனம் செய்து தனது வேண்டுதல்களை நிறைவேற்றி வருவார்கள். அவ்வாறு புனிதமான இந்த மாதத்தில் நாம் இந்த பூஜையைச் செய்தால் அது நமக்கு நல்ல பலனைக் கொடுக்கிறது. குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள், கஷ்டங்கள் தீர்ந்து பண வரவு உண்டாகும். மன நிம்மதி கிடைக்கும்.

- Advertisement -

அதற்காக செய்ய வேண்டிய ஒரு சிறப்பு பரிகாரம் என்னவென்றால் வாரம்தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையுமாக 16 வாரங்கள் இந்த பூஜையை செய்ய வேண்டும். அல்லது தொடர்ந்து 48 நாட்கள் இந்த பூஜையை செய்து வரலாம். அதற்கு முதலில் ஒரு தாம்பூலத் தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மஞ்சள், குங்கும பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அது வட்ட வடிவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

friday

பின்னர் அந்த அகல் விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக்கொண்டு, அது முழுவதும் கல்லுப்பு வைத்து நிறைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பிறகு இரண்டு சிறிய அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றிற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக்கொண்டு, ஒரு அகல் விளக்கில் சிறிதளவு பச்சரிசியை மஞ்சளில் கலந்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை உப்பு வைத்துள்ள விளக்கின் மீது வைத்து விட வேண்டும்.

uppu

பிறகு மற்றொரு விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி கொண்டு, பஞ்சுத்திரி போட்டு அதனை அந்த சிறிய அகல் விளக்கின் மீது வைத்து தீபம் ஏற்றவேண்டும். இந்த தீபத்தை பூஜை அறையில் வைத்து நமது குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். எனக்கு இருக்கும் பண கஷ்டங்கள் தீர்ந்து, கடன்கள் அடைந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். கல்லுப்பு மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த உப்பு தீபத்தை நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து ஏற்றி வழிபட்டு வாருங்கள். நல்ல பலனை பெறுவீர்கள்.

- Advertisement -