கடன் பிரச்சனை, நகை பிரச்சனை, பண பிரச்சனை தீர்ந்து சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைத்திட செல்வத்திற்கு அதிபதியான இந்த தேவதையை கட்டாயம் வழிபட வேண்டும்

cash
- Advertisement -

பணம் படைத்தவர்களுக்கு மனதில் சந்தோஷம் என்ற ஒன்று இருக்காது. அல்லது அவர்களுக்கென்று சமூகத்தில் எந்தவித மதிப்பும் கிடைத்திருக்காது. ஒரு சிலருக்கோ இவற்றில் எதற்கும் வழியில்லாமல் இருக்கும். அதாவது என்னதான் ஓடிஓடி உழைத்தாலும் கையில் பணம் என்பது தங்கவே தங்காது. எவ்வளவு ஆசைப்பட்டாலும் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலைமை இருக்கும். இது போதாதென்று அவர்களை சுற்றி நிறைய கடன் பிரச்சினைகளும் இருக்கும். இவ்வாறு அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர்ந்து நலமான வாழ்வு கிடைத்திட நாம் வணங்க வேண்டிய செல்வ கடாட்சம் பொருந்திய தெய்வத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

gold3

நமது புராணங்களில் உள்ள கதைகள் அனைத்திலுமே தீயவர்களான அசுரர்கள் இறைவனிடம் வரம் வாங்கிய பின்பு முதலில் அவர்கள் கைப்பற்ற நினைக்கும் இடம் இந்திரலோகம் தான். ஏனென்றால் இந்திரலோகத்தில் தான் இந்த உலகத்தையும் ஆளும் அளவிற்கு பொன், பொருள், பொக்கிஷம் இவை அனைத்துமே நிறைந்து இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் அதிபதியாக இருப்பவர் இந்திரன் ஆவார்.

- Advertisement -

இவ்வாறான இந்திரலோகத்தில் தான் குபேரன் அவர்களும் நீதி அமைச்சராக இருக்கிறார். இன்று வரை நாம் செல்வத்திற்கு அதிபதியாக குபேரரை தான் வழிபட்டு வந்திருக்கிறோம். ஆனால் அப்பேர்ப்பட்ட குபேரனே இந்திரலோகத்தின் நிதி அமைச்சராக தான் இருந்திருக்கிறார். இவ்வாறான இந்திரலோகத்தின் அதிபதியான இந்திரன் அவர்களின் இல்லத்தரசி தான் இந்திராணி அவர்கள். இந்திராணி தேவியை நாம் பூஜித்து வணங்குவதன் மூலம் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வளமான வாழ்வு கிடைத்திடும்

kubera.

உதாரணமாக ஒரு ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்து பணம் சம்பாதித்து கொடுப்பது ஆணாக இருந்தாலும் அந்தக் குடும்பத்தைக் கட்டி ஆள்வதும், கணவன் கொடுக்கும் பணத்திலிருந்து பொன், பொருள், நகைகள் வாங்கி அனைத்தையும் அனுபவித்து அந்தக் குடும்பத்தின் மொத்த செல்வாக்கிர்க்கும் அதிபதியாக இருப்பது வீட்டில் இருக்கும் பெண்கள் தான். அவ்வாறு இந்திரலோகத்தின் ராணி தான் அங்கு இருக்கும் பொன், பொருள், செல்வம், பொக்கிஷம் இவை அனைத்திற்குமே அதிபதியாவார்.

- Advertisement -

பலரும் இதுவரை தங்களிடம் பணம் சேர்வதற்காகவும், தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும் மகாலட்சுமி தேவியையும், குபேரரையும் மட்டுமே வணங்கி இருப்போம். ஆனால் நமக்கான பொருளாதார பிரச்சினையை தீர்த்து சுகமான வாழ்வினை கொடுக்கும் சக்தி வாய்ந்த தேவி இந்த இந்திராணி தேவி தான்.

mahalakshmi1

இந்திராணி தேவி சப்த கன்னிகளில் ஒருவராக இருக்கிறார். சப்த கண்ணிகள் என்றால் ஆறு கண்ணிகள் மட்டுமே அதில் இடம் பெறுகின்றனர். ஆனால் இந்திராணி தேவியோ அனைவரிடமும் சண்டையிட்டு ஏழை, எளிய மக்களும் தன்னை வணங்கி பயன் பெறவேண்டும் என்பதற்காகவே ஏழாவது கண்ணியாக அவர்களுடன் தானும் சேர்ந்து கிராம தேவதையாக இருந்து வருகிறார்.

indhrani

இவர் ஏழு கண்ணிகளில் ஒருவராக இருப்பதனால் மட்டுமே பலரும் அவரை தனியாக வணங்குவதில்லை. ஆனால் இந்திராணி தேவியின் திரு உருவ படத்தை வாங்கி முறையாக பூஜை செய்தாலும் நமக்கான நல்ல பலன்கள் கிடைக்கும். இவ்வாறு இந்திராணி தேவியின் படம் கிடைக்காதவர்கள் இந்திராணியை கலச உருவத்திலும் செய்து வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். இவ்வாறு செய்வதால் நமக்கு இருக்கும் கடன் பிரச்சனை, பணப்பிரச்சனை, நகை பிரச்சனை இவற்றில் எதுவாக இருந்தாலும் அவை முழுவதுமாக தீர்ந்து சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைத்திடும்.

- Advertisement -