கையிலும், பையிலும் பணப்புழக்கம் அதிகரிக்க கண்ணாடி தம்ளரை இப்படி செய்து வைத்தால் போதுமே!

glass-cash
- Advertisement -

போதிய அளவிற்கு உழைப்பு இருந்தாலும் பணவரவு வருவதில் சிக்கல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தால் அந்த இடத்தில் லட்சுமி கடாட்சம் குறைந்து காணப்படுகிறது என்பது தான் அர்த்தம். ஆன்மீக ரீதியாக ஒரு சில பொருட்களுக்கு லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணவும், பணப் புழக்கத்தை அதிகரிக்க செய்யவும் சக்திகள் உண்டு. அந்த வரிசையில் நம் உழைப்பிற்கு உரிய பண வரவு வர செய்யக் கூடிய மிக மிக எளிய பரிகாரம் தான் இது. அது என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

pachai-karpooram1

சுயமாக தொழில் செய்பவர்கள், கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள் அல்லது உத்தியோகத்தில் வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவரவர்களுக்கு ஏற்ற படி இந்த பரிகாரத்தை செய்து உங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும். எதையும் பன்மடங்காகப் பெருக்கும் சக்தி பச்சை கற்பூரத்திற்கு உண்டு என்பது ஆன்மீக ரீதியான உண்மை ஆகும்.

- Advertisement -

பச்சைக் கற்பூரம் அதீத சக்தி வாய்ந்த மகத்துவம் வாய்ந்த குணங்களை கொண்டுள்ள ஆன்மீக தெய்வீக பொருளாகும். இது இருக்கும் இடங்களில் எல்லாம் பண வரத்து பெருகிக் கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. நம்மை சுற்றி ஒரு தெய்வீக மணம் கமழ செய்து விட்டால், அங்கு மகாலட்சுமி ஓடோடி வந்து வாசம் செய்து விடுவாள். அந்த அற்புத தெய்வீக மணத்தை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம் தான் பச்சை கற்பூரம்.

ஒரு கண்ணாடி தம்ளரை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டம்ளர் முழுவதும் நிரம்பும் படி சுத்தமான பன்னீர் நிரப்பிக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிட்டிகை சுத்தமான மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு சிறிய அளவிலான பச்சை கற்பூர துண்டு ஒன்றை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை அப்படியே நீங்கள் உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொண்டால் வீட்டில் பண வரத்து அதிகரிக்கும். இதன் மணம் முழுவதும் வீட்டையே கோவில் ஆகிவிடும்.

- Advertisement -

நீங்கள் தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்கள் தொழில் ஸ்தாபனங்களில் இருக்கும் சுவாமி படத்திற்கு முன்பு வைத்துக் கொள்ளலாம். அதே போல வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் நீங்கள் பூஜை செய்யும் இடத்தில் வைத்து விடலாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களாக இருந்தால் நீங்கள் வேலை செய்யும் அலுவலக மேஜை மீது வைத்துக் கொள்ளுங்கள். இப்படி அவரவர் செய்யும் இடத்திற்கு ஏற்ப நீங்கள் இதனை வைத்து விட்டால் போதும்.

lemon-glass

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை நிரப்பி அதனுள் எலுமிச்சை பழத்தை போட்டு மிதக்க விடுவது உண்டு! இதனை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இது கண் திருஷ்டியை போக்கி, செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும் ஒரு எளிய பரிகாரம் ஆகும். அதே போல தான் இதுவும். பன்னீர், பச்சை கற்பூரம், மஞ்சள் இவை மூன்றும் தெய்வீக ஆற்றலை நமக்கு ஈர்த்து கொடுக்கக் கூடிய அற்புத படைப்பாகும். இம்மூன்றும் இணைத்து வைக்கும் பொழுது அங்கு தெய்வீக அதிர்வலைகள் ஏற்படும். அந்த அதிர்வலைகள் உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகளை விலக்கி, நேர்மறை ஆற்றல்களைப் பெருக செய்து அதன் மூலம் வருமான விருத்தி உண்டாக செய்துவிடும். இதனை வெள்ளிக் கிழமையில் செய்வது சிறப்பு. அடுத்த வெள்ளிக் கிழமையில் இதனை மாற்றி வைத்துக் கொள்ளலாம். வாரம் ஒருமுறை இதைச் செய்து வந்தாலே நல்லதொரு மாற்றம் நிகழும்.

- Advertisement -