பணப்புழக்கம் வீட்டில் குறைந்தால்! வெள்ளிக்கிழமையில் 8 மாவிலையை இப்படி செய்தால் மளமளவென பணம் சேரும் தெரியுமா?

maavilai-lakshmi
- Advertisement -

நன்றாக பணம் புழங்கிக் கொண்டிருந்த வீட்டில் கூட திடீரென பணப்புழக்கம் குறைய ஆரம்பிக்கும். ஏதாவது ஒரு செலவுகள் வந்து கொண்டே இருக்கும். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இந்த செலவுகள் பொருளாதார ரீதியாக நம்மை பின்னோக்கி செல்லுமாறு செய்து விடும். இத்தகைய இடர்களிலிருந்து மீண்டு சீரான நிலைக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன், உடல் உழைப்பை கொடுத்து முன்னேறி செல்ல மகாலட்சுமியை எப்படி வெள்ளிக்கிழமையில் வழிபடுவது? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பகுதியின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மாலை 4:45 மணி முதல் 5:45 மணி வரை நல்ல நேரம் நீடிக்கும். இந்த சமயத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து, மாவிலை தோரணம் கட்டி, மஞ்சள் தண்ணீர் தெளித்து மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வர சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி. அப்படிப்பட்ட இந்த நல்ல நேரத்தில் நீங்கள் மாவிலைகளால் அலங்கரித்த தட்டில் மாவிளக்கு ஏற்றி வர சகல சம்பத்துக்களும், குபேர யோகமும் உண்டாகும் என்பது தான் நம்பிக்கை.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில் பூஜை அறையை அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு தாம்பூல தட்டை எடுத்து நன்கு சுத்தம் செய்து மஞ்சள், குங்குமத்தை வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்பு அஷ்டலட்சுமிகளுக்கு இணையாக அஷ்ட அதாவது எட்டு மா இலைகளை அலசி சுத்தம் செய்து அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு வரிசையாக தாம்பூல தட்டின் மீது வட்ட வடிவில் அடுக்கி வையுங்கள்.

நடுப்புறத்தில் ஊற வைத்த பச்சரிசியை இடித்து மாவாக்கிய கலவையில் வெல்லம் சேர்த்து மாவிளக்கு தயார் செய்ய வேண்டும். இந்த மாவிளக்கில் நெய் வாசம் வீச செய்யுங்கள். நெய் வாசம் மகாலட்சுமிக்கு இஷ்டதொரு வாசம் ஆகும். இதனால் மகாலட்சுமி பரிபூரணமாக மாவிளக்கில் குடியேறுவாள் என்பது நம்பிக்கை. மாவிளக்கு தயார் செய்யும் பொழுது வட்ட வடிவில் தயார் செய்தாலும் அல்லது சதுர வடிவில் தயார் செய்தாலும் நான்கு திரிகள் போடுமாறு நான்கு திசைகளில் மேற்புறமாக சிறுசிறு நான்கு குழிகள் போல செய்து திரி போடுவதற்கு உகந்ததாக தயாரித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்பு நடுப்புறத்தில் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டுக் கொள்ளுங்கள். நான்கு புறமும் பஞ்சு திரிகளை இட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு திரியும் இரண்டு இரண்டாக இருக்க வேண்டும். எப்பொழுதும் பஞ்சு திரியை இரண்டு திரிகள் ஒன்றாக திரித்து போடும் பொழுது குடும்பத்தில் இருக்கின்ற அத்துணை பிரச்சனைகளும் நீங்கி சுப காரியங்கள் கைகூடி வரும், சுபீட்சமான யோகம் இருக்கும் என்பது நம்பிக்கை. இது போல ஒவ்வொரு திசையிலும் நான்கு திரியிட்டு தீபம் ஏற்றி மனதார மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
ஆடிப்பெருக்கில் (3/8/2023) செய்ய மறக்க கூடாத 5 விஷயங்கள்?

நைவேத்தியம் படைக்க கற்கண்டு வைத்தால் போதுமானது. உங்களால் முடிந்தால் சர்க்கரை பொங்கல் செய்து வையுங்கள், இன்னும் விசேஷமானது. பிறகு மனதார மகாலட்சுமி மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், அஷ்டோத்திரங்கள், நாமவளிகள் போன்றவற்றை உங்களுக்கு தெரிந்ததை உச்சரித்து உங்கள் குறைகளையும், நிறைகளையும் அம்பாளிடம் மனதார பிரார்த்திக்க வேண்டும். குறைகளை மட்டுமே சொல்லக்கூடாது. இது போல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு பணம் கையில் சரளமாக புழங்கும், வறுமை என்பதே இருக்காது.

- Advertisement -