கோடீஸ்வர்ராக அமாவாசையில் செய்ய வேண்டிய பரிகாரம்

amavasai jathikaki man
- Advertisement -

பெரிய பணக்காரராக மாறி நிறைய பணம் சேர்க்க வேண்டும். வீடு, கார், நிலம் சொத்து என்று சேர்த்துக் கொண்டே போக வேண்டும். இப்படி எல்லாம் ஆசைப்படுவது மனித இயல்பு தான். இந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்றால் நம்முடைய உழைப்பு முயற்சி சேர்த்து அதற்கான யோகமும் வேண்டும்.

இதை அனைத்தும் ஒன்று சேரும் நேரத்தில் தான் நம்முடைய இந்த கனவு நினைவாகும். ஆகையால் தான் ஆன்மீகத்தில் இது போல பணம் சார்ந்த பிரச்சினைகளுக்கு உதவி புரியும் வண்ணம் எளிய பல பரிகாரங்களை நமக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்போது நாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கோடீஸ்வர்ராக பரிகாரம்

இந்த பரிகாரத்தை நீங்கள் அமாவாசை அன்று தான் செய்ய வேண்டும். அமாவாசை அன்று பிரம்ம முகூர்த்த வேளையில் செய்ய வேண்டிய ஒரு எளிய பரிகாரம். ஆனால் இந்த பரிகாரத்திற்கான பலன் பல மடங்காக கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இந்த பரிகாரம் செய்ய நமக்கு மூன்று ஜாதிக்காய், மூன்று நாணயம் தேவை. அது எந்த நாணயமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதே போல மூன்று ரூபாய் நோட்டுகள் இதிலும் உங்களிடம் எந்த ரூபாய் நோட்டு இருக்கிறதோ அதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவற்றையெல்லாம் சேர்த்து முடிச்சாக கட்ட மஞ்சள் நிற துணி மஞ்சள் நிற நூல் இவை எல்லாம் அமாவாசைக்கு முதல் நாளிலே தயாராக வைத்து விடுங்கள்.

- Advertisement -

அமாவாசை அன்று காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்து முடித்த பிறகு வீட்டின் பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு உங்களுடைய குலதெய்வம் இஷ்ட தெய்வம் அவர்களை மனதார வேண்டிக் கொண்டு இந்த முடிச்சை தயார் செய்யுங்கள். மஞ்சள் நிற துணியில் ஜாதிக்காய், ரூபாய் நோட்டு, நாணயம் இவை மூன்றையும் ஒன்றாக வைத்து மஞ்சள் நிற நூலால் முடிச்சாக கட்டி கொள்ளுங்கள்.

இந்த முடிச்சை பீரோவில் கொண்டு வைத்து விடுங்கள். ஆனால் அதை வைக்கும் நேரம் சூரிய உதயத்திற்கு முன்பாக இருக்க வேண்டும். சூரிய உதயம் ஆன பிறகு இதை செய்தால் பலன் இருக்காது. இத்துடன் சேர்ந்து உங்களுடைய கனவை நினைவாக கூடிய முயற்சிகளை தவறாமல் மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்ததை விட விரைவிலேயே உங்கள் இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பு அதிகரிக்க மகாலட்சுமி தாயாரை வணங்கும் முறை

இந்த முடிச்சசை அடுத்த அமாவாசை அன்று மாற்றி விட்டு, புதிதாக இதே போல மாற்றி வைத்து விடுங்கள். அப்போது புதிய ஜாதிக்காய், ரூபாய் நோட்டுகளையும் புதிதாக வையுங்கள். ஏற்கனவே வைத்து இந்த நோட்டுகளை நீங்கள் ஏதேனும் தெய்வ காரியத்திற்கு அல்லது தான தர்மத்திற்கு பயன்படுத்துங்கள். பணவரவிற்காக செய்யப்படும் இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் முயற்சி செய்து பலன் அடையலாம்.

- Advertisement -