பணத்தட்டுப்பாடு நீங்க பரிகாரம்

cash salt kirambhu
- Advertisement -

எப்போதும் நம்மை தொடரும் ஒரே பிரச்சினை எனில் அது பணம் தான் நம் வீடுகளில் தினம் தினம் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படையாக விளங்குவது பணம் தான். . பணம் இருந்தாலே பாதி பிரச்சனை சரியாகி விடும். ஆகையால் பணம் தடையில்லாமல் நம்மை வந்து சேரவும் வருமானத்திற்கு வழி தேடிக் கொள்ளவும் முதலில் முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியுடன் செய்ய வேண்டிய எளிய பரிகார வழியை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பணத்தட்டுப்பாடு நீங்க பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமது தேவையான முக்கிய பொருள் கல் உப்பு. கல் உப்பு வீட்டில் இருக்கும் தேவையற்ற எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி வீட்டில் நல்ல நேர்மறை ஆற்றல் பரவக் கூடிய சக்தி உண்டு. அதுமட்டுமின்றி இது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருளாக பார்க்கப்படுகிறது. இந்த பரிகாரத்திற்கு தேவையான மற்றொரு பொருள் கிராம்பு. கிராம்புவிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிக அளவில் உள்ளது. இதுவும் தாயாரின் அனுகிரகம் பெற்ற பொருள்.

- Advertisement -

இப்போது கண்ணாடி பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நிறைய கல் உப்பை கொட்டி நிரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் 5 கிராம்புகளை சொருகி இதை வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் மற்றவர் பார்வை படும்படி வைக்க வேண்டும். இதனால் வீட்டில் இல்ல பணம் பற்றாக்குறை தீர்ந்து பணவரவு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி இது வீட்டை நல்ல நறுமணத்துடன் வைத்திருக்கவும் உதவும். நறுமணம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி தாயார் நிச்சயம் வாசம் செய்வர்.

இதைத் தவிர இந்த கிராம்பையும் கல் உப்பையும் வேறு சில வழிகளில் பயன்படுத்தும் போதும் நம் வீட்டில் இருக்கும் தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் கண் திருஷ்டி போன்றவை நீங்கி வீடு செழிப்பாக மாறும் என்று சொல்லப்படுகிறது. ஏதேனும் பிரச்சனைகள், குழப்பங்கள் தலைதூக்கி துன்பப்படும் நேரத்தில் கொஞ்சம் சுத்தமான தண்ணீரில் கல் உப்பு, கிராம்பையும் சேர்த்து சிறிது நேரம் வைத்து விட்டு அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்து இதே போல் சிறிது கல்லுப்பை மற்றும் பவுலில் வைத்து உங்களின் கழிப்பறையில் யாரும் தொட முடியாத இடத்தில் யாரும் பார்க்காதபடி வைத்து விட்டால் வீட்டில் ஏற்படும் வாஸ்து தோஷங்கள் நீங்கும். அதாவது சில வீடுகளில் கழிப்பறை சரியான திசையில் இல்லாமல் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கும். அது போன்ற பிரச்சனைகளும் சரியாகும் என்று சொல்லப்படுகிறது. இதை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி விடுங்கள்.

பணப் பிரச்சனை அதிகரித்து பணத்தட்டுப்பாடு இருக்கும் சமயத்தில் ஒரு பவுலில் இதே போல் இரண்டு கல் உப்பு நான்கு கிராம்பை மட்டும் போட்டு வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் யாரும் பார்க்க முடியாத இடத்தில் வைத்து விட்டால் போதும். பணப்பிரச்சனைக்கு எளிதில் தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ராகு கேதுவால் ஏற்படும் தோஷம் நீங்க சந்தன பரிகாரம்.

பணத்தட்டுப்பாடு நீங்கவும், பணவரவு அதிகரிக்கவும், வீட்டில் உள்ள தேவையற்ற எதிர்மறை ஆற்றல் வெளியேறவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த பொருளை வைத்து எளிமையான முறையில் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -