மகாலட்சுமி தாயாருக்கு படைத்த தேனை இந்த இடத்தில் ஊற்றினாலே போதும். பணத்தடைகளை அனைத்தையும் தகர்த்தெறிந்து பண வரவை தாராளமாக அள்ளி அள்ளி கொடுப்பார்.

mahalakshmi honey cash
- Advertisement -

பண வரவை அதிகரிக்க வேண்டும் பணத்தடைகளை உடைக்க வேண்டும். பணம் எப்போதும் கையில் தாராளமாக புழங்க வேண்டும் இப்படி படம் தொடர்பான அனைத்து வேண்டுதலுக்கும் உரிய தெய்வமெனில் அவர் மகாலட்சுமி தாயார். அப்படியான அந்த தெய்வத்தை அவருக்கு பிடித்த நெய்வேத்தியங்களையும் அவருக்கு பிடித்த பொருட்களையும் வைத்து வணங்கினால் அதற்குரிய பலனை தனியாக கிடைக்கும். அந்த வகையில் மகாலட்சுமி தாயாருக்கு பிடித்த நெய்வேத்தியங்களை வைத்து அதை எப்படி கையாண்டால் பணத்தடைகளை தகர்த்தெறிந்து நாம் பணவரவை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

பணத்தடைகளை தகர்த்தெறிய பரிகாரம்
வாசம் நிறைந்த இடத்தில் வீற்றிருப்பவர் மகாலட்சுமி தாயார் இது அனைவரும் அறிந்த ஒன்று. எந்த ஒரு வீடு எப்பொழுதும் நறுமணத்துடன் தெய்வீகத் தன்மையுடன் உள்ளதோ அந்த வீட்டில் நிச்சயம் லட்சுமி கடாட்சம் இருக்கும். மகாலட்சுமி தாயார் நிரந்தரமாகவே அங்கிருந்து அருள் புரிவார். அதனால்ஸதான் மலர்களிலே அதிக வாசம் மிக்க மல்லிகை மலரை அவருக்கு நாம் படைத்து வணங்குகிறோம். அப்படியான மலரையும் எந்த சூழ்நிலையிலும் கெட்டுப் போகாத தன்மை உடைய தேனையும் வைத்து தான் இப்போது இந்த பரிகாரத்தை செய்யப்போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை தொடங்கும் நாள் வெள்ளிக்கிழமையாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பௌர்ணமி அன்றும் இந்த பரிகாரத்தை தொடங்கலாம். இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு மல்லிகை மலரும், சுத்தமான தேனும் தேவை மல்லிகை மலரை நீங்கள் வாங்கி உங்கள் கைகளாலே தொடுத்து வீட்டில் இருக்கும் மகாலட்சுமி தாயார் படத்திற்கு அல்லது விக்கிரகத்திற்கும் மாலையாக போட்டு விடுங்கள்.

அதன் பிறகு தாயாருக்கு முன்பு இரண்டு அகல்விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றிய பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரே ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேனை ஊற்றி அன்னைக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அதில் இரண்டு மல்லிகை மொட்டுக்களை போட்டு வைத்து அம்பிகையை மனதார நினைத்து உங்களுக்கு இருக்கும் பணத்தடைகள் அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அம்பிகைக்கு படைத்த இந்த தேனையும் மல்லிகை மலரையும் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் இருக்கும் இடத்தில் எறும்புகளுக்கு இந்த தேனை தானமாக படைக்க வேண்டும். இந்த தேனை ஏன் அங்குதான் படைக்க வேண்டுமா என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். பொதுவாக புற்று மண் தெய்வீக தன்மை உடையது. மனிதன் காலடி படாத மண்ணிற்கு இயற்கையான முறையில் ஒரு சக்தி உண்டு. அந்த இடத்தில் இருக்கும் எறும்பிற்கு இந்த தேனை கொடுக்கும் பொழுது பலன் பல மடங்கு அதிகமாக கிடைக்கும்.

அதுமட்டுமின்றி இந்த பணத்தடைகள் உங்களுக்கு எந்த வித காரணத்தினால் ஏற்பட்டிருந்தாலும் அந்த சாபமோ, தோஷமோ எதுவாக இருப்பினும் எறும்பு அதை உண்ணும் போது அதிலிருந்தும் நிவர்த்தியாகும். ஆகையால் இந்தத் தேனை பாம்பு புற்று இருக்கும் இடத்திற்கு அருகில் ஊற்றுங்கள். (இதை செய்யும் போது கவனமாக செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது).

இதையும் படிக்கலாமே: தொழிலில் வரும் முட்டுக்கட்டைகள் எல்லாம் சுக்குநூறாக உடைந்து போகும். எதிர்பார்க்காத அளவுக்கு லாபம் பெருகும். கல்லாப்பெட்டியில் இந்த ஒரு இலையை மட்டும் வைத்தால்.

இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் அன்னையை மனதார வேண்டிக் கொண்டு இந்த இரண்டு நெய்வேத்தியத்தை படைத்து எறும்புகளுக்கு தானமாக கொடுத்து, உங்களுடைய சாபம் தடைகள் அனைத்திலிருந்தும் வெளிவந்து நல்லதொரு செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ வழி தேடி கொள்ளலாம் என்று இந்த கருத்தோடு பதிவினை முடிவு செய்து கொள்வோம்.

- Advertisement -