தொழிலில் வரும் முட்டுக்கட்டைகள் எல்லாம் சுக்குநூறாக உடைந்து போகும். எதிர்பார்க்காத அளவுக்கு லாபம் பெருகும். கல்லாப்பெட்டியில் இந்த ஒரு இலையை மட்டும் வைத்தால்.

pillaiyar4
- Advertisement -

சொந்தத் தொழிலை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திச் செல்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இன்று சொந்த தொழிலில் ஜெயித்தவர்கள் எல்லாம் தொழிலை ஆரம்பித்த காலகட்டத்தில் தோல்வியை சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள். தொழிலில், எடுத்த உடனேயே இலட்சக்கணக்கில் லாபத்தை பார்க்க முடியாது. சொல்லப் போனால் ஆயிரக்கணக்கில் லாபத்தை பார்ப்பது கூட ரொம்ப ரொம்ப கஷ்டம். ஆகவே சொந்தத் தொழிலை தொடங்கி விட்டால் நாளைக்கு லட்சாதிபதி ஆகிவிடலாம். கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தை யாரும் மனதில் விதைக்காதிங்க. தொழிலில் நீங்கள் முதல் போட்டு முதலாளியாகவே இருந்தாலும், ஒரு தொழிலாளி என்ன கஷ்டப்படுகின்றானோ, அந்த கஷ்டத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலாளி என்று கல்லாப்பெட்டியிலேயே உட்கார கூடாது.

தொழிலில் இருக்கக்கூடிய கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு, கடின உழைப்பையும் முதலீட்டாக போட்டு தொழிலில் முன்னேறி வருபவன் தான், நீண்ட நாட்கள் அந்த தொழிலை வெற்றிகரமாக நடத்திச் செல்ல முடியும். இதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சரி, தொழிலில் நல்ல லாபத்தை பெற நம்முடைய முயற்சி ஒரு பக்கம் இருந்தாலும் அதிர்ஷ்டம் கொஞ்சம் தேவை. இதற்கு ஏதாவது தாந்திரீக ரீதியாக பரிகாரம் செய்ய முடியுமா என்று கேட்பவர்களுக்காக இன்று ஒரு எளிமையான பரிகாரத்தை தான் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

தொழிலில் லாபம் பெறுக கல்லாப்பெட்டியில் வைக்க வேண்டிய இலை:
நீங்கள் சின்ன கடை வைத்திருந்தாலும் சரி, பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைத்திருந்தாலும் சரி, அல்லது சின்ன குடிசை தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தபடியே சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, நீங்க சின்னதா டெய்லரிங் தொழில் செய்யும் பெண்களாக இருந்தாலும் சரி. உங்களுக்கு வரக்கூடிய லாபத்தை பெருக்குவதற்கு இந்த பரிகாரம் கை கொடுக்கும். அது என்ன பரிகாரம் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இது தாந்த்ரீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள பரிகாரம் என்றாலும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பரிகாரம் தான். அந்த விநாயகப் பெருமானை நினைத்து இந்த பரிகாரத்தை படிக்க தொடர்வோம். திங்கட்கிழமை சனிக்கிழமை இந்த இரண்டு நாட்களும் நீங்கள் அரச மரத்தடி பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும். அரச மரத்துக்கு அடியில் இருக்கக்கூடிய பிள்ளையாரை வணங்கி விட்டு அரச மரத்தை மூன்று முறை சுற்றி அரச இலை ஒன்றை எடுத்து வந்து உங்கள் கல்லாப்பெட்டியில் வைக்க வேண்டும். பரிகாரம் அவ்வளவுதான். இதை சனிக்கிழமை திங்கட்கிழமை செய்யலாம்.

- Advertisement -

உங்களால் தினமும் அந்த பிள்ளையார் கோவிலுக்கு செல்ல முடியும். அரச இல்லையே எடுக்க முடியும் என்றால் தினமும் ஒரு அரச இலையை கொண்டு வந்து கல்லாப்பட்டியில் வைக்கலாம். தவறு கிடையாது. பழைய அரச இலையை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு, புது அரச இலையை மாற்றிக் கொள்ளுங்கள். புது அரசியிலையை வைக்கும் வரை அந்த கல்லாபட்டியில் பழைய அரச இலை இருக்கலாம். இரண்டு மூன்று நாட்கள் கோவிலுக்கு செல்ல முடியவில்லை மரத்திலிருந்து புது இலைகளை எடுக்க முடியவில்லை என்றாலும் தவறு ஒன்றும் கிடையாது.

உங்க வீட்டு பக்கத்தில் அரசமரம் இருக்கு. ஆனா அதற்கு அடியில் பிள்ளையார் இல்லை என்றாலும் பரவாயில்லை. பிள்ளையாரை நினைத்துக் கொண்டு அந்த அரச மரத்திலிருந்து இலையை மட்டும் கொண்டு வந்து கல்லாப்பட்டியில் வைத்தாலும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். பண இருப்பு அதிகரிக்கும். நீங்கள் செய்யும் சொந்த தொழிலில் நிறைய லாபம் பெருகும். இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீங்கள் அரச வாழ்வை வாழ்வீர்கள். அந்த அளவிற்கு உங்களுடைய பண பலம் மடங்கு பெருகும். இந்த ஒரு அரச இலைக்கு அவ்வளவு மகத்துவம் இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் வற்றாத செல்வ வளம் ஊற்றெடுத்து பல மடங்காக பெருக, விளக்கு ஏற்றும் போது இந்த 1 வார்த்தையை மனதார சொல்லுங்கள். பெண்கள் இதை செய்தால் வீட்டில் பணக்கஷ்டம் என்பதே வராது.

தொழிலை நடத்திச் செல்ல முடியாமல் நஷ்டத்தில் கடையை இழுத்து மூடக்கூடிய நிலைமையில் இருப்பவர்கள் நம்பிக்கையோடு தொடர்ந்து 48 நாட்கள் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் செய்யக்கூடிய தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல என்னென்ன வழி இருக்குதோ அதை எல்லாம் அந்த பிள்ளையார் உங்களுடைய கண்களில் காட்டிக் கொடுப்பார். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெரலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -