கடன் தீர வாராகி வழிபாடு

varahi cash
- Advertisement -

இன்று ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் தினம் தினம் நடக்கும் சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் முக்கியமான காரணம் என்று பார்த்தால் பணப்பற்ற குறையாக தான் இருக்கும். பணம் இருந்தாலே பாதி பிரச்சனைகள் சரியாகி விடும். இந்த பண பற்றாக்குறையை சமாளிப்பதற்காகத் தான் நாம் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறோம்.

இப்படி பண பற்றாக்குறைக்கு கடன் வாங்கி கடனை அடைக்க மேலும் கடன் வாங்கி பெரும் துன்பத்திற்கு ஆளாகி விடுகின்றோம். இத்தகைய பெரும் பிரச்சனை நீங்கி பணத்தடை இல்லாமல் பணவரவு அதிகரித்து கடன் தொல்லை நீங்கி நிம்மதியாக வாழக் கூடிய வழியை வாராகி அன்னை வழிபாட்டின் மூலம் அடையலாம். அது எப்படி என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணத்தடை கடன் பிரச்சனை நீங்கி பணவரவு அதிகரிக்க

பக்தர்கள் மனம் உருகி கூப்பிட்ட குரலுக்கு கண்முன்னே வந்து நிற்கக்கூடிய அற்புதமான தெய்வம் வாராகி அன்னை. அத்தகைய அன்னையை நம்முடைய துன்பம் தீர நாம் வழிபடும் போது அவர் நிச்சயம் நமக்கு அருள் புரிவார். அந்த வகையில் நம்முடைய பணத்தடை நீங்க வாராகி அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

முதலில் பணவரவை அதிகரிக்க வாராகி அம்மனை எப்படி வழிபாடு செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். பண வரவு அதிகரித்தாலே பாதி பிரச்சனைகள் குறைந்து விடும் தானே. இதற்கு வாராகி அம்மனுக்கு ஏலக்காய் மாலையை சாற்றி வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை நீங்கள் வீட்டில் செய்யக் கூடாது ஆலயத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

இதை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வரை செய்யும் பொழுது பணவரவு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் பெருகும். இதனால் பணவரவு அதிகரித்து உங்கள் கடனை அடைக்க கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அடுத்து கடன் அடைய வராகியம்மனை எப்படி வழிபாடு செய்வது என்று பார்க்கலாம். பணம் வந்தாலே கடன் அடைந்து விடுமே பிறகு எதற்கு இதற்கென தனி வழிபாடு என யோசிக்கலாம்.

எத்தனையோ பேருக்கு கையில் பணம் இருந்து வாங்கிய கடனை அடைக்க முடியாது அதிலும் சில இடங்களில் வாங்கிய கடனை எப்போதும் அடைக்க முடியாமல் தொடரும் அப்படியான கடனிலிருந்து மேலே இந்த பரிகார முறை சிறந்த வழியாக அமையும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு இரண்டு சிகப்பு நிற சிறிய துணி எடுத்துக் கொள்ளுங்கள் ஒவ்வொரு துணியிலும் 27 மிளகை வைத்து கருப்பு நிற நூலால் கட்டிக் கொள்ளுங்கள். அடுத்து இந்த மிளகை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு இரண்டு அகல் விளக்கு நல்லெண்ணெய் இவற்றை எடுத்துக் கொண்டு வாராகி அம்மன் ஆலயத்திற்கு சென்று அவருக்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் ஏற்றி எரியும் போது தீபத்திற்கு முன்பாக நின்று நீங்கள் யாரிடம் பணம் வாங்கினீர்கள் எவ்வளவு தொகை கடனாக வாங்கினீர்கள் என்பதை சொல்லி அவை விரைவில் அடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் வீட்டின் அருகில் வாராகி அன்னை ஆலயம் இல்லாத போனால் பைரவருக்கு இந்த முறையில் தீபம் ஏற்றலாம். இந்த வழிபாட்டையும் ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தன வசியமாக தனலட்சுமி பூஜை

பண வரவு அதிகரிக்கவும் கடன் தீரவும் இந்த வழிபாட்டு முறை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் நிச்சயம் பெருகும். அதற்கு உங்களுடைய முயற்சியும் கட்டாயமாக தேவை என்ற இந்த கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -