தன வசியமாக தனலட்சுமி பூஜை

dhanalakshmi kalasam
- Advertisement -

இன்று ஒவ்வொரு வீட்டிலும் பலவிதமான சண்டைகளையும் சச்சரவைகளையும் பார்க்கிறோம். இதற்கு பெரும்பாலான காரணம் எனப் பார்த்தால் பணம் பற்றாக் குறையாக தான் இருக்கும். எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும் பணம் என்ற ஒன்று அங்கு நிறைவாக இருந்தால் பாதிக்கு மேல் பிரச்சனைகள் சரியாகி விடும்.

இந்த பணப் பிரச்சனை தீர வேண்டுமெனில் நமக்கு தனலட்சுமி தாயார் அதாவது மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் முழுவதுமாக தேவை. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் மகாலட்சுமி தாயார் மட்டும் இன்றி அஷ்ட லட்சுமிகளின் அனுகிரகத்தையும் ஒரே நேரத்தில் பெறக் கூடிய ஒரு அருமையான வழிப்பாட்டு முறை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தன வசியமாக வழிபாடு

இந்த வழிபாட்டை நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று துவங்குங்கள். மகாலட்சுமி தாயாருக்கு உகந்த தினமெனில் அது வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி இது போன்ற நல்ல நாட்களில் தொடங்கலாம். இவை தவிர்த்து உங்களுக்கு உகந்த நாட்கள் என ஏதேனும் இருந்தால் அந்த நாட்களில் இதை தொடங்குங்கள். இந்த வழிபாட்டை தொடங்கும் அன்று உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் மட்டும் இருக்கக் கூடாது.

இந்த வழிபாடு செய்வதற்கு ஒரு சிறிய சொம்பு வேண்டும். அது வெள்ளி அல்லது பித்தளையால் ஆனதாக இருக்க வேண்டும். அது முழுவதுமாக நிரப்பும் அளவு சில்லறை நாணயங்களை அதில் நிரப்பி கொள்ளுங்கள். இத்துடன் வசதி உள்ளவர்கள் ஒரு தங்க நாணயத்தையும் அதில் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை உங்களிடம் தங்க நாணயம் இல்லை என்றாலும் பரவாயில்லை.

- Advertisement -

இந்த வழிபாடு துவங்குவதற்கு முன்பு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு சில்லறை நாணயங்களை முழுவதுமாக அதில் நிரப்புங்கள். அதற்கு மேல் வாங்கி வைத்திருக்கும் தங்க நாணயத்தை வையுங்கள். தாயாருக்கு நல்ல மணம் மிக்க மலர்களை சாற்றுங்கள். அதே போல் நல்ல வாசம் மிக்க ஊதுபத்தி ஏற்றி வையுங்கள்.

இந்த வழிபாட்டிற்கு பஞ்சாமிர்தம் சர்க்கரை பொங்கல் அல்லது பாலில் கற்கண்டு சேர்த்து ஏதேனும் நெய்வேத்தியம் செய்து வைக்கலாம். இப்போது ஒரு சிறிய கிண்ணத்தில் குங்குமம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த குங்குமத்தை நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கலசத்தின் மேல் உள்ள நாணயத்தில் ஓம் தனலட்சுமி நமஹ என்ற நாமத்தை சொல்லி குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

இதே போல் 108 முறை செய்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜை முடித்துக் கொள்ளுங்கள். இதை வழிபாட்டை காலை மாலை இரு வேளையும் 90 நாட்கள் செய்ய வேண்டும். இந்த பூஜை செய்யும் போது முடிந்த அளவுக்கு வீட்டின் உள்ள நபர்கள் தவிர வெளியில் இருக்கும் யாரும் இல்லாதவாரு பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் நீங்கள் பூஜை செய்து வைத்து இந்த கலச சொம்பையும் வெளியில் இருக்கும் யார் கண்ணிலும் படாமல் வைத்திருக்க வேண்டும்.

90 நாட்கள் இந்த பூஜையை செய்த பிறகு சொம்பில் இருக்கும் நாணயத்தை ஒரு வெள்ளை நிறத் துணியில் முடிச்சாக கட்டி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த முடிச்சு இருக்கும் இடத்தில் தன வரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். என்றென்றைக்கும் பண பற்றாக் குறை வறுமை இல்லாமல் சுபிட்சமாக வாழ்வீர்கள் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தெய்வ வசியம் ஏற்பட பரிகாரம்

அஷ்டலட்சுமிகளையும் வசமாக்கி வசதியாக வாழக்கூடிய இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நல்ல முறையில் இந்த வழிபாட்டை செய்து செல்வ செழிப்புடன் வாழ வழி தேடி கொள்ளுங்கள்.

- Advertisement -