வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாருக்கு ஏழு ரோஜா மலரை வைத்து இப்படி பூஜை செய்தால் போதும். பண தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து பணம் பல வழிகளில் உங்களை வந்தடைந்தே தீரும்.

panam sera
- Advertisement -

இன்று திரும்பும் திசையெல்லாம் கேட்கும் ஒரே வார்த்தை பணம். பணம் இல்லாத வாழ்க்கை பிண வாழ்க்கைக்கு சமம் என்றும் சொல்லலாம். இது இந்த காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் பணத்தின் தேவை அப்படியானதாக தான் உள்ளது. அதனால் தான் அந்த காலத்தில் பணம் பத்தும் செய்யும் என்பன போன்ற பல பழமொழிகள் பணத்தை பற்றி சொல்லி வைத்தார்கள். இப்படியான பணம் வரவு நமக்கும் தாராளமாக கிடைக்கவும் பண தடைகளை தகர்த்தெறியவும் ஆன்மீகம் எளிமையான ஒரு பரிகாரத்தை நமக்கு தந்திருக்கிறது. அது குறித்த ஒரு விளக்கத்தை இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

பண வரவு தாராளமாக இருக்க
பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றாலும் பணத்தடைகள் நீங்க வேண்டும் என்றாலும் நாம் மகாலட்சுமி தாயாரை வணங்க வேண்டும். மகாலட்சுமி தாயார் வெள்ளிக்கிழமை தோறும் அவருக்கு அர்ச்சனை ஆராதனைகள் தொடர்ந்து செய்து வந்தாலே வீட்டில் இருக்கும் பணத்தடைகள் அனைத்தும் நீங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த ஒரு எளிய வழிபாட்டையும் செய்து வரும் பொழுது தடைகள் நீங்கி பணவரவு பல மடங்கு பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு ஏழு ரோஜா மலர் பன்னீர் ரோஜா கலைதான் இதற்கு பயன்படுத்த வேண்டும். மற்ற ரோஜா மலர்களை பயன்படுத்தக் கூடாது. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயார் ஆலயத்திற்கு சென்று இந்த ஏழு ரோஜா மலர்களை உங்கள் கைகளில் வைத்துக் கொண்டு உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனைகளும் அல்லது உங்களுக்கு வரவேண்டிய பணமும் உங்களுடைய பணத்தேவைகள் பணம் தொடர்பான எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் ஒரே ஒரு பிரச்சனையை மட்டும் மகாலட்சுமி தாயாரிடம் சொல்லி மனதார வேண்ட வேண்டும்.

இப்படி நீங்கள் வேண்டும் போது தாயாரின் முன் அமர்ந்து இந்த மலர்கள் உங்கள் கைகளில் இருக்க வேண்டும். அவ்வாறு வேண்டிய பிறகு இந்த மலர்களை தாயாரின் பாதத்தில் வைத்து விட்டு வந்து விடுங்கள். இதே போல ஏழு வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். ஏழு வாரங்களும் நீங்கள் முதல் வாரத்தில் எந்த வேண்டுதலை வைத்தீர்களோ அதையே தான் செய்ய வேண்டும். இந்த வேண்டுதல் நிறைவேறி விட்டாலும் ஏழு வாரங்கள் இதைத் தொடர்ந்து செய்த பிறகு தான் முடிக்க வேண்டும்.

- Advertisement -

இந்த முறையில் மகாலட்சுமி தாயாரை வணங்கும் வணங்கும் போது பணத்தடைகள் முற்றிலுமாக நீங்கும் என்றும், பணவரவு தாராளமாக இருக்கும் என்றும் பணவரவிற்கான வழி உங்களுக்கு பிறக்கும். அது வேலையாக இருக்கலாம், உங்களுக்கு வர வேண்டிய பணமாக இருக்கலாம், தொழில் வளர்ச்சி ஆக இருக்கலாம் எதுவாக இருப்பினும் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் நல்ல முறையில் முடித்து தரக் கூடிய பலன் இந்த பரிகாரத்தின் மூலம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர 12 ராசிக்காரர்களுக்கும் தனித்தனி மந்திரம்! பண பிரச்சனையிலிருந்து வெளிவர, உங்கள் ராசி படி, இந்த 1 வரி மந்திரத்தை, ஒருமுறை உச்சரித்து தான் பாருங்களேன்.

இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை இப்படி ஏழு வாரங்கள் தொடர்ந்து வணங்கி தாராளமான பண வரவை பெற்று நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -