பணம் சேர 12 ராசிக்காரர்களுக்கும் தனித்தனி மந்திரம்! பண பிரச்சனையிலிருந்து வெளிவர, உங்கள் ராசி படி, இந்த 1 வரி மந்திரத்தை, ஒருமுறை உச்சரித்து தான் பாருங்களேன்.

astro-cash1
- Advertisement -

பெரும்பாலும் பணம் சேருவதற்கு பொதுப்படையான பரிகாரங்களை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் நம்முடைய குறிப்பிட்ட ராசிக்கு எந்த மந்திரத்தை சொன்னால் பணம் சேரும் என்பதை பற்றிய ஒரு ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கடனை வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்படுபவர்கள், கடனை திருப்பித் தர முடியாமல் கஷ்டப்படுபவர்கள், வருமானம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், என்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக இந்த மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பணப்பிரச்சனையை தீர்க்க பனிரெண்டு ராசிக்காரர்களுக்கான மந்திரங்கள் இதோ உங்களுக்காக.

மேஷம்:
ஓம் ஐம் க்லீம் சௌம்

- Advertisement -

ரிஷபம்:
ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மிதுனம்:
ஓம் க்லீம் ஐம் சௌம்

- Advertisement -

கடகம்:
ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

சிம்மம்:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

- Advertisement -

கன்னி:
ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

துலாம்:
ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

விருச்சிகம்:
ஓம் ஐம் க்ளீம் சௌம்

தனுசு:
ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

மகரம்:
ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கும்பம்:
ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மீனம்:
ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

நீங்க எந்த ராசி. உங்களுக்கான மந்திரத்தை தெரிந்து கொண்டீர்களா. ஒவ்வொரு வரி மந்திரம் தான். மனப்பாடம் செய்ய சுலபமாக இருக்கும். இந்த மந்திரத்தை எப்போது எந்த நேரத்தில் உச்சரிப்பது. உங்களுடைய சௌகரியம்தான். எப்போதெல்லாம் உங்களுக்கான பணத்தேவை கழுத்தை நெரிக்கிறதோ அப்போதெல்லாம் உச்சரித்தால் அந்த பணத்தேவை சீக்கிரம் நிவர்த்தி ஆகிவிடும்.

அப்படி இல்லை என்றால் தினமும் அதிகாலை வேளையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தினமும் பணக்காரராக வேண்டும் என்ற குறிக்கோளை வைத்து இந்த மந்திரத்தை உச்சரித்துவிட்டு, பணக்காரர் ஆவதற்கான முயற்சியை மேற்கொண்டீர்கள் என்றால் முயற்சிகளில் வரும் தடைகள் விலகும்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாத ராசி பலன் 2023 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

இந்த மந்திரத்தை உச்சரிக்க கூடிய கணக்கும் உங்களுடைய நேரத்தை பொறுத்தது. தினமும் 108 முறை, 1008 முறை எந்த அளவுக்கு அதிக அளவில் இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்க தொடங்குகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களிடம் பணம் வசியம் ஆகும். நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு சில நாட்கள் இந்த பரிகாரத்தை உச்சரித்து பாருங்கள். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு கிடைக்கிறது என்பதை நீங்களே உணருங்கள். அப்போதுதான் மந்திரத்தில் இருக்கும் சக்தியை உணர்ந்து கொள்ள முடியும். பிறகு நீங்களே நினைத்தாலும் இந்த மந்திரம் உச்சரிக்க கூடிய பழக்கத்தை உங்களால் விட முடியாது. பிரபஞ்சத்தில் இருக்கும் நேர்மறை ஆற்றலை ஈர்த்து பண வரவை கொடுக்கும் இந்த எளிமையான மந்திரம் உங்களுக்கு பலன் தரும் என்று நினைத்தால் உச்சரித்து பயனடையலாம்.

- Advertisement -