பணம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேற இந்த முத்திரையை உபயோகித்து பாருங்கள்.

mudra pana thevai
- Advertisement -

பணத்தை சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வது தான் மிகவும் கடினமாக இருக்கிறது. அதற்கு தான் நாம் பல பரிகாரங்களை மேற்கொள்கின்றோம். பல பூஜைகளையும், வழிபாட்டு முறைகளையும் செய்கிறோம். மிகவும் எளிமையான முறையில் ஒரு முத்திரையை பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய பணம் சம்பந்தப்பட்ட அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்றால் அந்த முத்திரையை செய்வதில் என்ன சிரமம் இருக்க போகிறது. ஆம், எந்த முத்திரையை நாம் உபயோக படுத்தினால் நம்முடைய பணம் சம்பந்தப்பட்ட அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

முத்திரைகளுக்கு என்று தனி மகத்துவம் இருக்கிறது. நம் கைவிரல்கள் அனைத்தும் பஞ்சபூதங்களுக்கு சமமானவை. அந்த விரல்களை இணைத்து நாம் செய்யக்கூடிய முத்திரைகளால் நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு ஆற்றல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாம் அதை முறையாக பயன்படுத்துவதற்கு மூலம் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

- Advertisement -

அந்த வகையில் இங்கே நாம் பார்க்க போகும் முத்திரை குபேர முத்திரை. குபேரர் என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடியது செல்வம்தான். அந்த செல்வத்திற்கு அதிபதியாக எண்ணக்கூடிய குபேர பகவானின் முத்திரையை நாம் தினமும் செய்வதன் மூலம் பண தேவைகள் அனைத்தும் பூர்த்தியடையும் என்று சொல்லப்படுகிறது.

நம்முடைய ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும், நடு விரலையும் இணைத்து மற்ற இரண்டு விரல்களை மடக்கி வைத்திருப்பது தான் குபேர முத்திரை. இந்த குபேர முத்திரையை நாம் உபயோகப்படுத்துவதற்கு சில வழிமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

குறைந்தது 15 நிமிடமாவது இந்த முத்திரையில் நாம் நிலைத்து இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுது நம் வாயில் சிறிதளவு இனிப்பை குறிப்பாக டைமண்ட் கல்கண்டை வைத்துக் கொண்டு, நம் கண்களை மூடி நம் புருவம் மத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.

பிறகு நம்முடைய பணம் தொடர்பான வேண்டுகோள் நடந்தவாறு நினைத்து பார்க்க வேண்டும். அதாவது யாரிடமிருந்தாவது பணம் வர வேண்டியது இருந்தால் அவர் நம்மிடம் அந்த பணத்தை கொண்டு வந்து கொடுப்பது போல் நினைத்து பார்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நினைத்தபடி நடந்து வெற்றி மேல் வெற்றி பெற விநாயகருக்கு இந்த மாலையை சாற்றி வணங்கினால் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும்.

இவ்வாறு நாம் தினமும் செய்து வர நாம் என்ன வேண்டுதலை வைத்தோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -