பணத்தேவையை பூர்த்தி செய்யும் பரிகாரம்

cash2
- Advertisement -

எல்லோருக்கும் பண தேவை இருக்கிறது. அதற்காக எல்லோருக்கும் கோடிக்கணக்கில் பணத்தை இந்த பிரபஞ்சத்தினால் கொடுக்க முடியுமா. நிச்சயம் அது முடியாது. நீங்கள் வேண்டுதல் வைக்கும் போது, அளவுக்கு மீறி பேராசை பட்டு வேண்டுதலை வைக்காதீர்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப, உங்கள் திறமைக்கு ஏற்ப, உங்கள் தகுதிக்கு ஏற்ப எவ்வளவு பணத்தை உங்களால் சம்பாதிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியும்.

அந்த அளவுக்கு தேவையான பணத்தை மட்டும் பிரபஞ்சத்திடம் கேட்டால், நிச்சயம் அந்த பணம் உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தகுதியை வைத்து பேசுவதாக நினைக்க வேண்டாம். நமக்கே தெரியும். நம்மால் மாசம் குறிப்பிட்ட இவ்வளவு தொகையை மட்டும் தான் சம்பாதிக்க முடியும் என்று. அதை மறந்து, லச்சம் வேணும், கோடி வேண்டும் என்று கேட்டால், கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடும். இது நாம் சொல்கின்ற கருத்து அல்ல.

- Advertisement -

சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்ட வாக்கு. இனிமே வேண்டுதல் வைக்கும்போது பணத்தேவைக்கா பேராசைப்படாதீங்க? தேவைக்கு ஏற்ப பணத்தை கேட்டு பாருங்க. என்ன நடக்குதுன்னு உங்களுக்கே தெரியும். சரி இப்போது பண தேவை இருக்கிறது. இதை பூர்த்தி செய்ய, பணத்தை ஈர்க்க வந்த பணம் நம் கையை விட்டு வீண்விரயமாகாமல் இருக்க என்ன பரிகாரம் செய்யலாம். ஆன்மீகம் இதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை சொல்லி வைத்திருக்கிறது. இந்த பரிகாரமும் சித்தர்களால் சொல்லப்பட்டது தான்.

பணத்தைவையை பூர்த்தி செய்யும் பரிகாரம்

சின்னதா புதுசா ஒரு பச்சை நிற சதுர துணி எடுத்துகோங்க. காட்டன் துணியா இருக்கட்டும். அதில் இலவங்கத்தூள், பட்டை தூள், இரண்டையும் ஒன்றாக ஒவ்வொரு ஸ்பூன் அளவு வைத்து, இரண்டு தூளையும் கலந்து சின்ன முடிச்சாக கட்டி இதை எப்போதுமே உங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள். கையில் என்றால் மணி பர்ஸில், பாக்கெட்டில், ஹேண்ட் பேக்கில், இப்படி ஏதோ ஒரு வகையில் இந்த முடிச்சு உங்களிடம் இருந்தால் பண ஈர்ப்பு அதிகரிக்கும்.

- Advertisement -

இதே முடிச்சை பீரோவில் வைக்கலாம். வீட்டில் உண்டியல் பக்கத்தில் வைக்கலாம். நகை வைக்கும் பெட்டியில் வைக்கலாம். பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். இப்படி எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தில் பண ஈர்ப்பு விதி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இந்த முடிச்சுக்கு உள்ளே இருக்கும் பொடி எளிதில் கெட்டுப் போகாது.

இதையும் படிக்கலாமே: சொந்த நிலம் வாங்க பரிகாரம்

மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றினாலும் போதும். எளிமையான இந்த ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். பண வசியம் உங்களுக்கு ஏற்படும் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -