சொந்த நிலம் வாங்க பரிகாரம்

murgan
- Advertisement -

ஒருவர் சீக்கிரமாக நிலம் வாங்கி வீடு கட்டக்கூடிய யோகத்தை பெறுவதற்கும், இருக்கின்ற நிலம் வீடு எல்லாவற்றையும் இழந்து கஷ்டத்தில் வீழ்வதற்கும் காரணம், அவரவருடைய கர்மவினைகள் தான். இந்த கர்ம வினைகளால் வரக்கூடிய கஷ்டங்களை போக்குவதற்காக தான் ஆன்மீகத்தில் நிறைய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

உங்களுடைய கர்மவினை உங்களை நிலம் வாங்க விடாமல், வீடு வாங்க விடாமல் தடுக்கிறதா. பணக்கஷ்டம் இருக்கிறதா. அதை சரி செய்ய ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிமையான பரிகாரத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

நிலம் வீடு வாங்க செல்ல வேண்டிய கோவில்

இந்த பரிகாரத்திற்கு எளிமையான ஒரு வழிபாட்டு முறையை தான் பார்க்கப் போகின்றோம். வியாழக்கிழமை நீங்கள் மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். வியாழக்கிழமை அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் தரிசனம் செய்து மனம் உருகி உங்கள் வேண்டுதலை அவர்களிடம் வைத்தால் நிச்சயம் அந்த வேண்டுதல் நிறைவேறும். குறிப்பாக வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க இந்த வழிபாடு கை கொடுக்கும்.

முதலில் ஒரு மாதத்தில் வியாழக்கிழமை மதுரைக்கு போயிட்டீங்க. திரும்பவும் வீடு திரும்பியதும், அடுத்து ஒரு சில நாட்கள் கழித்து குறைந்தபட்சம் ஒரு மாதம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சனிக்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த சனிக்கிழமையில் திருச்செந்தூர் முருகப்பெருமானை சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு வியாழக்கிழமை மதுரைக்கு சென்று, மீனாட்சி சுந்தரேஸ்வரர் வழிபாடு செய்ய வேண்டும். ஒரு சனிக்கிழமை திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இந்த இரண்டு கிழமைகளில் இந்த இரண்டு வழிபாட்டை நீங்கள் மனநிறைவோடு நம்பிக்கையோடு செய்து விட்டாலே போதும்.

அடுத்த ஒரு வருடத்திற்குள் நீங்கள் சொந்தமாக நிலமோ அல்லது வீடோ வாங்கிடுவீங்க. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. சில பேருக்கு விதியின் பயனால் இந்த பரிகாரத்தை செய்தும் பலன் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் முயற்சியை கைவிடாதிங்க முயற்சி செஞ்சுகிட்டே இருங்க.

- Advertisement -

மேலே சொன்ன இந்த இரண்டு வழிபாட்டையும் நீங்கள் செய்து முடித்த பிறகும், செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதை நிறுத்தக்கூடாது. செவ்வரளி பூக்களை வாங்கி கொடுத்து முருகனை வழிபாடு செய்ய வேண்டும். அது கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலும் சரி, அல்லது வீட்டில் இருந்தே வழிபாடு செய்தாலும் சரி, செவ்வாய்க்கிழமை உங்கள் வாயிலிருந்து ‘முருகா, அரோகரா, பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு அரோகரா அரோகரா’ என்ற மந்திரத்தை சொல்லி பூஜை செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: காரியத் தடை நீங்க நரசிம்மர் வழிபாடு

உங்களுக்கு கிடைக்க கூடிய மன நிறைவே தனி. உங்களை தேடி செல்வ வளம் வந்து கொண்டே இருக்கும். ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் அந்த முருகப்பெருமான் உங்களுக்கு சொந்த வீடும் நிலம் வாங்கும் யோகத்தை நிச்சயம் தருவார் என்ற நம்பிக்கையோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -