பண தேவையை பூர்த்தி செய்ய பரிகாரம்

panathevai
- Advertisement -

பணம் பத்தும் செய்யும் என்று கூறுவார்கள். இந்த காலத்தில் பணம் இல்லாமல் எதுவும் நம்மால் செய்ய முடியாது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு பணத்தின் மதிப்பு அதிகரித்து விட்டது. அப்படிப்பட்ட பணம் நம்முடைய வாழ்க்கையில் பலதரப்பட்ட விஷயங்களுக்கு தேவைப்படுகிறது. தேவைப்படும் நேரத்தில் பணம் கிடைத்து விட்டால் அந்த தேவைகள் நிறைவேறிவிடும். கிடைக்காத பட்சத்தில் அதனால் பல பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பணத்தேவையை பூர்த்தி செய்ய மகாலட்சுமி புகைப்படத்திற்கு பின்னால் எதை வைக்க வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு பல வழிகளில் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியுடன் சேர்ந்து மகாலட்சுமியின் அருள் இருந்தால்தான் நம்முடைய தேவை பூர்த்தி அடையும் என்பது நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்ட மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கும் நம்முடைய பணத்தேவை பூர்த்தி அடையவும் செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நமக்கு பணம் தேவைப்படும் நேரத்தில் செய்ய வேண்டும். அந்த தேவை நியாயமான கோரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர்த்து ஆடம்பரமான வாழ்க்கைக்குரிய பணத் தேவையாக இருக்கக் கூடாது. மேலும் இந்த பரிகாரத்தை விடியற்காலையில் செய்வது மிகவும் நன்மை தரும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு புதிய ரூபாய் நோட்டும் சிவப்பு நிற நூலும் தேவைப்படும்.

விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் இருக்க கூடிய மகாலட்சுமி புகைப்படத்திற்கு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு அம்பாளுக்கு நெய்வேத்தியமாக நம்மிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும். அடுத்ததாக நம்மிடம் இருக்கக்கூடிய புதிய ரூபாய் நோட்டு, அது பத்து ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை அந்த ரூபாய் நோட்டை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பழைய அழுக்கான ரூபாய் நோட்டை இதற்கு உபயோகப்படுத்த கூடாது.

- Advertisement -

இந்த புதிய ரூபாய் நோட்டை இரண்டு கைகளிலும் பிடித்த வண்ணம் மகாலட்சுமி தாயாரை பார்த்தவாறு நம்முடைய பணத் தேவை என்னவோ எதற்காக அந்த பணம் தேவைப்படுகிறதோ அதை மனதார கூறி வழிபட வேண்டும். பிறகு அந்த ரூபாய் நோட்டை கசக்காமலும் சுருட்டாமலும் அதற்கு மேல் சிவப்பு நிற நூலை வைத்து ஏழு முறை சுற்ற வேண்டும். சுற்றிய பிறகு இந்த ரூபாய் நோட்டை அப்படியே எடுத்து மகாலட்சுமியின் படத்திற்கு பின்னால் வைத்து விட வேண்டும்.

நம் முன்னோர்கள் ஏதாவது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் மஞ்சள் துணியில் நாணயங்களை காணிக்கையாக முடிந்து வைப்பார்கள் அல்லவா அதற்கு இணையான பலன் தான் இதற்கும் கிடைக்கும். 48 நாட்கள் இந்த பணம் அப்படியே மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு பின்னால் இருக்கட்டும். 48 நாட்களுக்குள் நம்முடைய பண தேவைகள் பூர்த்தி அடைவதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: ஸ்வர்ண தோஷம் நீங்க முருகன் வழிபாடு.

48 நாட்கள் கழித்து அந்த சிவப்பு நிற நூலை கால்படாத இடத்தில் போட்டு விட்டு ரூபாய் நோட்டை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பண தேவையை மட்டுமே கோரிக்கையாக மகாலட்சுமி தாயாரிடம் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -