நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வந்தராய் வாழ தன ஆகர்சனம் மிக்க கருமஞ்சளை இந்த இடத்தில் வைத்து விடுங்கள் போதும். பணம் உங்களை நோக்கி வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்.

cash karumanjal
- Advertisement -

பணம் என்பது எப்போதும் ஓர் இடத்தில் நிலையாக நிற்பது கிடையாது. அது திடீரென அதிர்ஷ்டம் போல் வரும். அதே போல் வந்த வழி தெரியாமல் சென்று விடும். ஆனால் எப்போதுமே பணவரவு நமக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் வெறும் அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் போதாது. அதற்கான சில ஆன்மீக பரிகாரங்களையும் செய்து பண ஈர்ப்பை நாம் அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்படி பணத்தை ஈர்க்கும் தன ஆகர்ஷணம் மிக்க ஒரு அருமையான பொருள் தான் இந்த கருமஞ்சள். அதை வைத்து இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பணம் கையில் தாராளமாக புழங்க:
இந்த பரிகாரத்தை செய்வதற்கு சிகப்பு நிறத்திலான சிறிய பட்டு துணி ஒன்று வேண்டும். அத்துடன் ஒரே ஒரு துண்டு கருமஞ்சள் இவை மட்டும் தான் தேவை. இந்த பரிகாரத்தை நாம் தொடங்க வேண்டிய நாட்கள் எதுவானாலும் இருக்கலாம். எனவே உங்களுக்கு ராசியான நாளாக ஒரு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் பரிகார செய்யப் போகும் அந்த நாளில் காலையில் எழுந்து குளித்து முடித்து பிரம்ம முகூர்த்த வேளையில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பட்டு நிற சிகப்பு துணியை பூஜை அறையில் வைத்து விட்டு அதன் மேல் இந்த கருமஞ்சளை வைத்து விடுங்கள். அதன் பிறகு சிகப்பு நிறத்திலான மை அல்லது செந்தூரத்தை கலந்து வைத்துக் கொள்ளலாம் அல்லது குங்குமத்தை பேஸ்ட் போல குழைத்து கொள்ளலாம். இவற்றில் ஏதாவது ஒன்று ஆனால் அது சிகப்பு நிறத்தில் மை போல இருக்க வேண்டும். இதை உங்கள் விரலால் தொட்டு அந்த கருமஞ்சள் மீது வைக்க வேண்டும்.

இதைத் பரிகாரத்தை தொடர்ந்து 11 நாட்கள் செய்ய வேண்டும். 11 நாட்களும் காலையில் தீபம் ஏற்றி பூஜை அறையில் சிறிது நேரம் அமர்ந்து உங்கள் விரலால் மையை தொட்டு கருமஞ்சலில் வைத்த பிறகு பண வரவு உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்றும், செல்வ செழிப்புடன் அந்தஸ்தான வாழ்வை வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் 11 நாட்களும் உங்களால் முடிந்த எளிமையான பூஜை ஒன்றை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

11 நாட்கள் கழித்து இந்த சிகப்பு துணியில் இருக்கும் மஞ்சளுடன் கொஞ்சம் சில்லறை காசுகளை வைத்து அன்றும் பூஜை செய்து பரிகாரத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த துணியை ஒரு மூட்டையாக கட்டி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். தன ஆகர்ஷம் மிக்க இந்த கருமஞ்சளை நாம் பூஜை அறையில் வைத்து பூஜை செய்த பிறகு அதன் சக்தி பல மடங்காக அதிகரிக்கும். அந்த பொருள் நம் பணம் வைக்கும் இடத்தில் இருக்கும் போது பணத்தை ஈர்த்து அங்கு தக்க வைத்துக் கொள்ளும்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த கடன் திரும்ப வசூலாக, வராத பணம் வர, இழந்த செல்வம் மீண்டும் பெற செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன தெரியுமா?

பணம் எப்போதும் கையில் தாராளமாக புழங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

- Advertisement -