கொடுத்த கடன் திரும்ப வசூலாக, வராத பணம் வர, இழந்த செல்வம் மீண்டும் பெற செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன தெரியுமா?

cash-rice-tamil
- Advertisement -

இன்று பலரும் காசை ஒருவரிடமிருந்து வாங்கிவிட்டு அதை திரும்ப கொடுக்க வேண்டும் என்கிற அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் கொடுத்தவர்களோ பணத்தை இழந்து விட்டோம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிலைமை மாறிவிட்ட நிலையில் இழந்த பணம், செல்வம் மீண்டும் பெறுவதற்கு என்ன செய்யலாம்? என்பதை தான் ஆன்மீகம் சார்ந்த எளிய குறிப்புகளின் மூலம் நாம் இனி தொடர்ந்து இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை மற்றவர்கள் எடுத்துக் கொள்ள நினைத்தாலும், அவர்களுடைய செல்வங்களையும், சொத்துக்களையும் சுருட்டிக் கொள்ள நினைத்தாலும் அதற்குரிய கர்ம பலன்களை அவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பது நியதி! பெற்றவர்கள் சொத்தில் எப்படி பிள்ளைகளுக்கு பங்கு சேர்கிறதோ, அதே போல அவர்களுடைய பாவங்களிலும் பிள்ளைகளுக்கு பங்கு சேரும் என்பது தவிர்க்க முடியாதது. எனவே ஒருவரை ஏமாற்றும் முன்பு தன்னுடைய குழந்தைகளுக்கு அந்த பாவம் போய் சேர்ந்து விட்டால் என்ன செய்வது? என்பதை நினைத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தவர்களுடைய உழைப்பை திருடுபவர்களுக்கு என்னதான் நல்ல நிலைமை என்று இருந்தாலும் எப்போதும் இந்த நிலை நீடிப்பதில்லை! அடுத்தடுத்த சந்ததியினர் வரை இப்பாவம் தொடர்ந்து உங்களை துன்புறுத்தும். செல்வ சேர்க்கையும், வம்ச விருத்தியும் உண்டாகாமல் போகும்.

அயராத உழைப்பினால் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் சொத்துக்கள், பணம் போன்றவை மீண்டும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் தென்மேற்கு திசையில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். ரொம்பவே எளிய பரிகாரமான இவை ஆன்மீகத்தில் சக்தி வாய்ந்த பரிகாரமாகவும் கருதப்படுகிறது. எப்பொழுதும் பூஜை அறையில் பூஜை செய்யும் போது ஒரு தாம்பாள தட்டில் பச்சரிசியை பரப்பி அதன் மீது காசுகளை போட்டு வைக்க சொல்லுவார்கள். சில்லரை நாணயங்களை இப்படி போட்டு வைக்கும் பொழுது தனமும், தானியமும் சேர்ந்து பெருகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

அதே போல ஒரு சிறிய அளவிலான செம்பு கலசம் அல்லது பித்தளை செம்பு, கண்ணாடி பாத்திரம் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கை நிறைய பச்சரிசியை எடுத்து போடுங்கள். அதன் மீது சில்லறை நாணயங்களை வையுங்கள். பின்பு மீண்டும் பச்சரிசியை பரப்பி மூடி வையுங்கள்.

இந்த பாத்திரத்தை தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். கடன்களை தீர்க்கும் அத்திசையானது ரொம்பவும் முக்கியம். இழந்தவற்றை மீட்டுக் கொடுக்கக்கூடிய சக்தி அந்த திசைக்கு உண்டு. மேலும் இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். அதுவும் வளர்பிறை வெள்ளிக்கிழமை செய்வது ரொம்பவே விசேஷமானது. அப்பொழுது தான் மீண்டும் மீண்டும் செல்வ சேர்க்கையானது வளர துவங்கும். இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:
நாளை வைகாசி மாத தேய்பிறை பிரதோஷம்! இந்த 5 ராசிகாரர்கள் நாளை சிவன் கோவிலுக்கு சென்றால் உங்களுக்கான அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்.

தொடர்ந்து ஒவ்வொரு வளர்பிறை வெள்ளியிலும் இதை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த அரிசியை வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை. எவருக்கேனும் நீங்கள் தானம் கொடுத்து விடலாம். கோவிலுக்கு செல்லும் போது இதை அங்கு வரும் பக்தர்களுக்கு அல்லது யாசகர்களுக்கு தானமாக கொடுக்கலாம். ஆனால் நீங்கள் வீட்டில் மீண்டும் இந்த அரிசியை பயன்படுத்தாதீர்கள். மாதம் இருமுறை வளர்பிறையில் இதை செய்து பாருங்கள். தீராத துன்பமெல்லாம் தீரும், வராத வரவு எல்லாம் வந்து சேரும்.

- Advertisement -