பணம் உங்கள் வீடு தேடி வேகமாக வர வேண்டுமா? இந்த நம்பரை ஒரு முறை எழுதி தான் பாருங்களேன். நம்பமுடியாத அதிசயம் உங்கள் வாழ்வில் நடக்கும்.

gaja-lakshm
- Advertisement -

இந்த எண்களை எழுதினால் பணவரவு கிடைக்குமா, என்ற ஒரு துளி சந்தேகம் இருந்தாலும் பரிகாரத்தின் மூலம் நிச்சயமாக நமக்கு பலன் கிடைக்காது. இந்த எண்களை எழுதுவதன் மூலம் நம்முடைய பணத்தேவை பூர்த்தியாகும், நமக்கு வருமானத்திற்கு தேவையான வழிபிறக்கும், என்ற முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு, இந்த பிரபஞ்சம் நிச்சயமாக பண வருவை கொடுக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இந்த நம்பரை மட்டும் எழுதிவிட்டு, எதுவுமே செய்யாமல், சும்மாவே அமர்ந்து இருந்தால் பணம் வருமா என்று கேள்வி எழுப்புபவர்களும் நிச்சயமாக இருக்கத்தான் செய்வார்கள். எதுவுமே செய்யாமல் மேஜிக் போட்டு பணத்தை வர வைக்க நாம் ஒன்றும் மந்திரவாதிகளோ, தந்திர வாதிகளோ கிடையாது. வெறும் சாதாரண மனிதர்கள்தான். நம்பிக்கையோடு சேர்ந்த விடாமுயற்சி ஒன்று மட்டும் நம்மிடத்தில் இருந்தால் போதும், நாம் நினைத்த காரியம் ஈடேறும்.

உங்களுடைய முயற்சிகளை விடாமல் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். வருமானத்திற்கு வழியை தேடிக்கொண்டே இருங்கள். கடின உழைப்பை முதலீடாக போடுங்கள். கூடவே இந்த பரிகாரத்தை செய்யும் போது, உங்களுடைய முயற்சிகளில் இருமடங்கு வெற்றி கிடைக்கும். சரி, இப்போது பரிகாரத்தை பார்த்துவிடலாம். வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை சுக்கிர ஹோரை வருகின்றது. இந்த நேரத்தில் வீட்டில் எப்போதும் போல மகாலட்சுமியை நினைத்து வெள்ளிக்கிழமை பூஜையை முடித்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு மஞ்சள் நிற காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கடைகளில் கிடைக்கின்றது. மஞ்சள்நிற பேப்பர் வேண்டும் என்று கேட்டால் கொடுத்துவிடுவார்கள். சிவப்பு நிற பேனா வாங்கிக் கொள்ளுங்கள். பூஜை அறையில் அமர்ந்து 2 0 7 1 0 1 8 7 என்ற எண்களை 27 முறை எழுதுங்கள்.

எழுதிய இந்த பேப்பரை அப்படியே மடித்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். உங்களுக்கு பணவரவு இருக்க வேண்டும். கடன் பிரச்சனை தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு, இந்த நம்பரை நம்பிக்கையுடன் எழுத வேண்டும். அதாவது சில பேருக்கு நல்ல வேலை இருக்கும். அதில் கடின உழைப்பை போடுவார்கள். நல்ல முன்னேற்றமும் அடைவார்கள். ஆனால் செய்த வேலைக்கு உண்டான சம்பளம் கிடைக்காது. உங்கள் உழைப்புக்கு உண்டான ஊதியத்தை பெற வேண்டும் என்றாலும் இந்த எண்களை எழுதி பலனடையலாம்.

- Advertisement -

சில பேர் தொழில் தொடங்குவார்கள். தொடங்கிய தொழிலில் லாபத்தை எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த எண்களை எழுதினால் தொழிலில் நல்ல லாபத்தை பெறலாம். சிலபேருக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருக்கும். கடன் தொகைக்கு வட்டி கட்ட கூட வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவார்கள். இப்படிப் பட்டவர்களும் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று இந்த எண்களை எழுதினால் கடன் தொகையை திருப்பி கட்டுவதற்கு தேவையான வருமானம் எங்கிருந்தாவது நிச்சயமாக உங்கள் வீடு தேடி வரும்.

இத்தனை வாரங்கள் இந்த பரிகாரத்தை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. நம்பிக்கையோடு ஒருநாள் செய்து பார்த்து பலனை அனுபவியுங்கள். மீண்டும் தேவைப்பட்டால் நம்பிக்கை உள்ளவர்கள் வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் பரிகாரத்தை செய்யலாம். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய விடாமுயற்சியும் நம்பிக்கையும் சேர்ந்தது தான் இந்த பரிகாரம். பரிகாரம் என்பது இந்த நம்பரில் அடங்கி இருப்பது கிடையாது. நம்பிக்கையில் அடங்கி இருப்பது என்பதை மீண்டும் நினைவு கூர்ந்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -