ஜன வசியம் பண வசியம் ஏற்பட பரிகாரம்

cash
- Advertisement -

தொழில் செய்பவர்களுக்கு முதலில் முக்கியமாக தேவைப்படக்கூடிய விஷயம் என்ன தெரியுமா. வசியம். தொழில் செய்பவர்களுடைய முகம் வசீகரத் தோற்றத்தோடு இருக்க வேண்டும், அவர்களுடைய பேச்சு திறமையாக இருக்க வேண்டும். அந்த பேச்சு அடுத்தவர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும். நம்முடைய கடைக்கு ஒரு வாடிக்கையாளர் வராங்க.

பணம் கொடுத்து பொருளை வாங்கி செல்கிறார்கள். அந்த நபர் மீண்டும் மீண்டும் நம் கடைக்கு தான் வந்து வியாபாரம் செய்ய வேண்டும். கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை கடையின் முதலாளி எப்படி பேசி அந்த வாடிக்கையாளரை தக்க வைத்துக் கொள்கிறார் என்பதில் தான் சூட்சமமே இருக்கின்றது. இரண்டு மளிகை கடை, ஒரே இடத்தில் பக்கத்தில் பக்கத்தில் இருக்கும்.

- Advertisement -

ஒரு கடைக்கு மட்டும் தான் வியாபாரம் நடக்கும். இன்னொரு கடைக்கு வியாபாரம் நடக்காது. இப்படிப்பட்ட பிரச்சனையை இன்று நாம் நிறைய சந்தித்து வருகின்றோம். அதுவும் போட்டி பொறாமை நிறைந்த இந்த உலகத்தில் ஒருவர் ஒரு கடையை வைத்து சம்பாதித்தால், எதிராளிக்கு பொறுக்காது. அதேபோல ஒரு கடையை பக்கத்திலயே வைத்து, அந்த வியாபாரத்தை எல்லாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து விடுவார்கள்.

சரி அது அவரவர் விருப்பம். இதை ஒன்றும் செய்ய முடியாது. உங்களுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை நீங்கள் தக்க வைத்துக் கொள் வேண்டும், உங்களுடைய விற்பனையை அதிகரிக்க வேண்டும் நீங்கள் நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. ஆன்மீகம் சார்ந்த இரண்டு எளிய பரிகாரங்கள் உங்களுக்கு இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பயன்படுத்தி பலன் பெறலாம்.

- Advertisement -

தொழிலில் வெற்றி பெற

தொழிலில் வெற்றி பெற, வசிய தன்மை வேண்டும் என்று சொன்னோம் அல்லவா. இதற்கும் பல் தேய்ப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. நாயுருவி வேர், நாட்டு மருந்து கடைகளில் இது கிடைக்கும் வாங்கிக்கோங்க. சின்ன குச்சிகளாக அதை பாக்கெட் பண்ணி விற்பார்கள். இந்த நாயுருவி வேரை கொண்டு ஒருவர் 48 நாள் காலையில் எழுந்ததும் பல் தேய்த்தால் அவர்களுக்கு முகவசியம் ஜன வசியம் வாக்கு வசியம் ஏற்படும்.

இப்படி தொடர்ந்து 48 நாள் இந்த வேரில் நீங்கள் பல் தேய்த்து வந்தால், அடுத்தவர்களை நீங்கள் பேச்சின் மூலம் கவர்ந்து விடலாம். உங்களுக்கு முக வசியமும் ஏற்படும். வியாபாரத்தை பொருத்தவரை வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்று சொல்லுவார்கள். நீங்கள் வாயை திறந்து வரக்கூடிய வாடிக்கையாளர்களிடம் பேசினாலே போதும் அதில் அவர்கள் ஒரு வசியத்தன்மை ஏற்பட்டு உங்களிடம் நிறைய பொருட்களை வாங்க ஆரம்பித்து விடுவார்கள்.

- Advertisement -

ஏதாவது காண்ட்ராக்ட் விஷயமா வெளிய போறீங்க. அங்க அந்த தொழில் சார்ந்த விஷயங்களை திறமையா பேசி அந்த காண்ட்ராக்டை உங்கள் பெயரில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் முதல் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் வரை இந்த பரிகாரம் நல்லாவே வேலை செய்யும் முயற்சி செய்து பாருங்கள்.

அதேபோல ஒரு நாயுருவி வேரை வாங்கி ஒரு மஞ்சள் துணியில் கட்டி உங்கள் கடையின் நிலை வாசல் படியில் மாட்டி தொங்கவிட வேண்டும். இந்த நாயுருவி வேர் உங்களுடைய கடைக்கு நிறைய வாடிக்கையாளர்களை ஈர்த்துக் கொண்டு வந்து கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நாட்டு மருந்து கடைகளில் கேட்டாலே கொடுப்பாங்க.

இதையும் படிக்கலாமே: மனக்குழப்பத்திலிருந்து விடுபட பரிகாரம்

சாதாரண நாய் உருவி வேர், அல்லது செந்நாயுருவி வேர் இந்த இரண்டில் எது கிடைத்தாலும் நீங்கள் பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -