மனக்குழப்பத்திலிருந்து விடுபட பரிகாரம்

thulasi
- Advertisement -

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பிரச்சனை சின்னதாக தான் தெரியும். ஆனால் அந்த பிரச்சனையில் சிக்கித் தவிப்பவனுக்கு தான் அதில் இருக்கும் உண்மையான கஷ்டம் புரியும். அதாவது அடுத்தவர்களுக்கு பிரச்சனை என்றால் கருத்து சொல்ல ஆயிரம் பேர் வருவாங்க. அந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லவும் ஆயிரம் பேர் வருவார்கள்.

ஆனால் அதே பிரச்சனை தனக்கு வந்தால், சின்ன விஷயத்துக்கு கூட தெளிவு இல்லாமல், குழம்பி போய் நிப்பாங்க. உங்களுக்கும் இதே போல சூழ்நிலை உள்ளதா. ஒரு சின்ன குழப்பம் தான். ஆனால் இந்த குழப்பத்தை சரி செய்ய, இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட தெரியாமல், தவித்து வருகிறீர்களா. மன குழப்பத்தால் சாப்பிடாமல் தூங்காமல் தவிப்பவர்களுக்கு, மனதை தெளிவுபடுத்த இதோ ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரம்.

- Advertisement -

என்ன குழப்பம் நீங்க

குழப்பம் வந்திருச்சு தெளிவா முடிவு எடுக்க முடியல. ஆயிரம் பேர் கிட்ட பேசிட்டீங்க. ஆனாலும் நிலையான ஒரு முடிவை எடுக்க முடியவில்லை பிரச்சனை என்னமோ ரொம்ப சின்னது. என்ன செய்வது. கருந்துளசி எப்படியாவது தேடி கண்டுபிடித்து எடுத்துக்கோங்க. ஐந்திலிருந்து ஆறு இலைகள் இருந்தால் கூட போதும். சின்னதாக படிகார கல் தேவை.

ஒரு மஞ்சள் துணியில் இந்த இரண்டு பொருட்களையும் வைத்து முடித்தாக கட்டி இரவு தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். உங்களுடைய மனது மறுநாள் காலை எழும்போது தெளிவு பெறும். குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள் பிரச்சனைக்கு உண்டான தீர்வை சீக்கிரமாக எடுத்து விடுவீர்கள்.

- Advertisement -

எளிமையான பரிகாரம் தான் மூன்று நாட்கள் இந்த இரண்டு பொருட்களையும் தலையணையில் வைத்து தூங்கும் போது நல்ல வித்தியாசம் தெரியும். பிரச்சனை சரியாகிவிட்டது என்றால் அந்த இரண்டு பொருட்களை முடிச்சோடு கொண்டு போய் கால் படாத இடத்தில் போட்டு விட்டு வந்து விடவும்.

அடுத்தபடியாக உங்களுக்கு இந்த கருந்துளசியானது இன்னும் கொஞ்சம் அதிகமாக கிடைக்கிறது எனும் பட்சத்தில் அதைக் கொண்டு வந்து உள்ளங்கைகளில் வைத்து நன்றாக கசக்குங்கள் அதிலிருந்து அந்த துளசி சாறு வாசத்தோடு வெளிவரும் அதை அப்படியே உங்களுடைய நெற்றியின் மேல் பூசிக்கொள்ளவும். கடவுளே என்னுடைய குழப்பம் தெளியணும் அப்படின்னு வேண்டிக்கோங்க. அவ்வளவுதான்.

- Advertisement -

இரவு அப்படியே படுக்கச் செல்லவும் இந்த துளசியின் வாசம் உங்களுடைய மனதை நிம்மதியாக்கும் மனதை தெளிவுபடுத்தும். ஒரு 3 நாள் இந்த பரிகாரத்தை செய்றீங்க. நாலாவது நாள் என்னடா பிரச்சனை இது ஒரு சின்ன விஷயம் தான். இதற்கு, இந்த முடிவு தான் சரியானது என்று சுலபமாக அந்த குழப்பத்திலிருந்து வெளிவருவீர்கள்.

இதையும் படிக்கலாமே: பஞ்சத்தைப் போக்கும் ஏலக்காய் பரிகாரம்

கருந்துளசி கிடைக்கவே இல்லை எனும் பட்சத்தில் சாதாரண துளசியை பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். உங்கள் பிரச்சினையை தீர்க்க ஒரு நல்ல முடிவை எடுத்து விடுவீர்கள். இது ஒரு எளிமையான பரிகாரம் தான் ஆனால் உங்களை குழப்பத்தில் இருந்து வெளிவர உங்கள் மனதை தெளிவுபடுத்தக் கூடிய சக்தி வாய்ந்த பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -