இந்த வேரை இப்படி மூன்று வழிகளில் பயன்படுத்தி வந்தால் கைக்கு வந்த பணம் சட்டென்று கரைந்து போகாமல் பல மடங்கு பெருகிக் கொண்டே இருக்கும்

cash-pei-viratti
- Advertisement -

மனிதன் நிம்மதியாக வாழ்வதற்காகவும், தனது குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கும் பணம் என்ற ஒன்று அவசியமாக தேவைப்படுகிறது. இதற்காகத்தான் பெற்றோர்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து திறமைசாலியாக வளர்த்து வருகிறார்கள். இப்படி தங்களது பட்டப்பை படித்து முடித்த பிறகு வேலைக்கு செல்ல தயாராகும் இளைஞர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ற வேலையைத் தேடி அதில் தங்களை முன்னேற்றிக் கொள்வதற்கு அரும்பாடு படுகிறார்கள். இப்படி மிகவும் பாடுபட்டு, கஷ்டப்பட்டு, உழைத்து சம்பாதிக்கும் பணத்தை வைத்து தான் தங்கள் குடும்பத்தை நிம்மதியாக வழி நடத்திச் செல்கின்றனர். ஆனால் இப்படி சம்பாதித்து வந்த பணம் நொடிப்பொழுதில் செலவாகி விடுகிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் அவற்றை சேமித்து வைக்க முடியாத நிலைமை இருக்கிறது. இது போன்ற சூழ்நிலையை மாற்றி அமைக்க இந்த நாயுருவி வேர் பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

வியாழக்கிழமை அன்று ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரத்தில் நாயுருவிச் செடியை வேருடன் பறித்து எடுக்க வேண்டும். பின்னர் இதனை வீட்டிற்கு கொண்டு வந்து மஞ்சள் கலந்த நீரில் கழுவி விட்டு, அதனை வெயில் படாமல் நிழலில் உலர்த்தி விட்டு, பூஜை அறையில் வைத்து கற்பூர ஆராதனை காண்பித்து பூஜை செய்ய வேண்டும். பின்னர் இந்த நாயுருவி வேரை ஒரு பாட்டிலில் அடைத்து கொண்டு அதனுடன் நாட்டு மருந்து கடையில் வாங்கி வந்த கஸ்தூரி மஞ்சள் சக்கை மற்றும் வாசனை திரவியம் ஊற்றி இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனை வீட்டின் வரவேற்பு அறை, பூஜை அறை அல்லது நிலை வாசலில் கட்டி தொங்கவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இவற்றின் ஆற்றல் பணத்தை கரைக்கும் வீண் செலவுகள் வரவிடாமல் தடுத்து விடுகிறது. அடுத்ததாக ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த நாயுருவி வேருடன் சிறிதளவு சுக்கு, 3 ஏலக்காய் மற்றும் அதனுடன் ஏதாவது ஒரு வாசனை திரவியம் சேர்த்து அதனை வீட்டு வாசலின் வலது புறம் வைத்துவிட வேண்டும்.

இதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும், பணம் வீன் விரையமாவது தடுக்கப்படுகிறது. அடுத்ததாக இந்த நாயுருவி வேரை நன்றாக நிழலில் உலர்த்தி விட்டு, அதனை ஒரு கடாயில் இட்டு, அடுப்பின் மீது வைத்து நன்றாக கருகிப் போகும் அளவிற்கு வறுக்க வேண்டும். இவை தீய்ந்து கருப்பாக மாறும் வரை வறுத்து விட்டு அடுப்பை அனைத்து இதனை பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றுடன் பசும் நெய் சேர்த்து நன்றாகக் குழைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த மையை வீட்டின் நிலை வாசலில் சிறிதளவு தேய்த்து விட வேண்டும். பிறகு வீட்டில் இருக்கும் பீரோ, பணம் வைக்கும் டப்பா மற்றும் நீங்கள் தினமும் பயன்படுத்தும் பர்ஸ் போன்றவற்றில் லேசாக தடவிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஐஸ்வர்யம் பெருகி பணம் பல மடங்கு பெருக ஆரம்பிக்கும்.

- Advertisement -