இந்த தவறுகள் எல்லாம் உங்கள் வீட்டில் நடந்தால், நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் சீக்கிரம் ஏழை ஆயிடுவீங்க. வீட்டில் நடக்கவே கூடாது தவறுகள் என்னென்ன.

cash-mahalakshmi
- Advertisement -

பணம் சேருவதற்காக பொன் பொருள் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை செய்து பார்க்கின்றோம். ஆனால் ஏன் பலன் கொடுக்கவில்லை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கின்றோமா. சில பேர் ஒரு காலத்தில் ரொம்பவும் வசதி வாய்ப்புகளோடு வாழ்வார்கள். ஆனால் ஒரு சில நாட்களில் அவர்கள் கடனாளி ஆகி பணத்திற்கு ரொம்பவும் கஷ்டப்பட்டு வருவார்கள்.  வீட்டினுடைய சூழ்நிலை இப்படி இருந்தால் நீங்கள் செய்யக்கூடிய பரிகாரங்கள் பலன் கொடுக்காது. வீட்டிற்குள் மகாலட்சுமி நுழைய மாட்டாள். இந்த தவறுகளை செய்யும் போது வீட்டிற்குள் தங்கியிருக்கும் மகாலட்சுமியும் ஒரு சில நாட்களில் வெளியே சென்று விடுவாள்.

வீட்டில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன. பொன் பொருள் சேர்க்கையை கொடுக்கக்கூடிய அற்புதமான மூலிகைகளை எப்படி வீட்டில் வைப்பது என்பதை பற்றிய அறிய சில பரிகாரங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

முதலில் ஒரு வீட்டில் கதவு ஜன்னல்கள் திறக்கும்போது மூடும் போதோ கீச் கீச் என சத்தத்தை எழுப்பக் கூடாது. அந்த சத்தம் எழுந்தால் வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள். தாழ்ப்பால் கதவு ஜன்னல்களில் எண்ணெய் விட்டு கதவை சுத்தமாக பராமரித்து வர வேண்டும். இதே போல எந்த ஒரு வீட்டில் தண்ணீர் நிறைய செலவழிக்கப்படுகின்றதோ அந்த வீட்டிலும் பணம் காசு தங்காது.

அடுத்தபடியாக சதா சண்டை சச்சரவோடு தகாத வார்த்தைகளை உச்சரிக்க கூடிய வீட்டில் பணம் தங்காது. காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு சில வீடுகளில் பேச்சுவார்த்தை நடக்கும். இப்படிப்பட்ட வீடுகளில் மகாலட்சுமி அம்சம் நிச்சயமாக நிலைக்காது. கெட்ட வார்த்தை என்றால் பெரிய அளவுக்கு போகாதீங்க. வீட்டில் இருக்கும் பெண்கள் தன்னுடைய கணவரை திட்டக்கூடிய வார்த்தையை கூட இப்போதெல்லாம் நம்மால் கேட்க முடிவது கிடையாது. இதே போல சில வீடுகளில் ஆண்கள் தங்களுடைய மனைவியை பேசக்கூடிய வார்த்தையையும் காது கொடுத்து கேட்க முடியாது.

- Advertisement -

அடுத்தபடியாக பணம் சேர வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டில் எப்போதுமே ஜவ்வாது வாசனை வீசிக்கொண்டே இருக்க வேண்டும். நிலை வாசலுக்கு பொட்டு வைப்பதாக இருந்தாலும் சரி, பூஜையறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு பொட்டு வைப்பதாக இருந்தாலும் சரி, பூஜை ஜாமான்களுக்கு பொட்டு வைப்பதாக இருந்தாலும் சரி, அந்த மஞ்சள் சந்தனத்தோடு கொஞ்சமாக ஜவ்வாது பொடியை சேர்த்து வையுங்கள் வீட்டில் நறுமணம் கமழும். இந்த நறுமணத்திற்கு வீட்டில் லட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கும்.

பணம் சேர வீட்டில் கட்டாயமாக கருங்காலியால் செய்யப்பட்ட ஒரு பொருள் இருக்க வேண்டும். கருங்காலி பிரம்பு குச்சி இருந்தால் கூட பரவாயில்லை. அதை பூஜையறையில் வைத்து வழிபாடு செய்தால் வீட்டில் கண் திருஷ்டி விலகி செல்வ வளம் பெருகும்.

பொன் ஊமத்தை என்ற ஒரு மூலிகைச் செடி உள்ளது. இந்த செடியின் இலை குச்சு எது கிடைத்தாலும் சரி, அதை எடுத்து வந்து மஞ்சள் தண்ணீரில் கழுவி நன்றாக காய வைத்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் இரட்டிப்பாக பெருங்கும். கடன் சுமை குறையும். வறுமை வீட்டை விட்டு விலகும்.

மேல் சொன்ன சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றி வாருங்கள் கருங்காலி பொன் ஊமத்தை உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. சிறிய பச்சை துணியில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், வெந்தயம், டைமண்ட் கல்கண்டு இந்த ஐந்து பொருட்களை ஒன்றாக வைத்து முடிச்சாக போட்டு பீரோவில் வைத்தாலும் பணம் சேரும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரங்களை பின்பற்றி பயன்படுத்தலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -