வீண் பண விரயத்தை குறைத்து வீட்டில் செல்வம் பெருக முருங்கை விதை பரிகாரம்

cash
- Advertisement -

ஓரணா சம்பாதித்தாலும் அதில் காலணாவை சேர்த்து வைக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் தேவைக்கேற்ற வருமானம் இல்லை என்ற பொழுது எவ்வாறு சேமித்து வைப்பது. வருமானத்தைவிட செலவுகள் தான் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு காலம் சென்று கொண்டிருக்க நமது தலைமுறைகளின் வாழ்விற்கு என்று எவற்றையும் நம்மால் சேர்த்து வைக்க முடியாது. ஆனால் ஒரு சில மாற்றங்களை செய்தோம் என்றால் நம்மால் முடிந்தவரை சேமிக்க இயலும். சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப ஏதாவது ஒரு பங்கை நாம் சேமித்து வைக்க வேண்டும். அவ்வாறு பணம் வீண் விரையம் ஆவதை தவிர்த்து வீட்டில் செல்வம் பெருக இந்த முருங்கை விதை பரிகாரத்தை தவறாமல் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

hundi

வீட்டில் உள்ள பெரிய மூதாட்டியை கிழவி என்று அழைப்பார்கள். அதுபோல சிறிய பிள்ளைகள் ஏதாவது அதிகமாக பேசினால் கிழவி போல வாய் ஆடுகிறாயா என்று கேட்பார்கள். அவ்வாறு கிழவி என்ற சொல்லுக்கு அனைத்தும் அறிந்தவர்கள் என்று அர்த்தமாகும். இவ்வாறு வயதானவர்களிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் நிறைய அனுபவங்கள் நிறைந்திருக்கும். அவற்றை நாம் காது கொடுத்து கேட்டோம் என்றால் நமது வாழ்க்கைக்கு தேவையான பலவித நன்மைகளை பெறமுடியும்.

- Advertisement -

இவ்வாறு முருங்கை மரத்தை ஊர் கிழவி, காட்டு கிழவி என்று பெயரிட்டு அழைப்பார்கள். காட்டுகிழவி என்பது காட்டுப் பகுதியில் உள்ள முருங்கை மரத்தை குறிப்பதாகும். ஊர் கிழவி என்பது நமது வீட்டுக்கு அருகாமையில் ஊர்ப்புறங்களில் இருக்கின்ற முருங்கை மரங்களை குறிப்பதாகும். முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளவையாக இருக்கின்றன. ஆன்மீக ரீதியாகவும் சரி, மருத்துவ ரீதியாகவும் சரி முருங்கை மரத்தில் எண்ணற்ற பயன்பாடுகள் இருக்கின்றன

murungai-maram.

முருங்கை மரத்தின் பயன்பாடுகள் பற்றிய பாடல்களும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு அற்புத சக்தி வாய்ந்த முருங்கை மரத்தின் முற்றிய விதைகளை வைத்து பணம் வீன் விரையம் ஆவதை தவிர்க்க முடியும்.

- Advertisement -

முதலில் முருங்கை மரத்தின் முருங்கைக்காய் முற்றி வெடித்து அதில் வெளிவரும் விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இயற்கையான முறையில் முருங்கை விதைகள் கிடைக்கவில்லை என்றறால் நாட்டு மருந்து கடைகளில் இவற்றை வாங்கிக் கொள்ளலாம். பிறகு இந்த விதைகளை பூஜை அறையில் வைத்து அதன் மீது சிறிய அளவு கோமியத்தை தெளித்து அனைத்திற்கும் பொதுவான முருகப்பெருமானை மனதில் நினைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

murungai-vidhai

பணம் வீண் விரயம் ஆவது குறைந்து எனது மக்களுக்காக என்னால் இயன்ற அளவு பணத்தை நான் சேமிக்க வேண்டும். அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு இந்த முருங்கை விதையை சிறிய கண்ணாடி பாட்டிலில் அடைத்து கொள்ள வேண்டும். பின்னர் பூஜை அறையில் ஒன்று, சமையலறையில் ஒன்று, வீட்டின் கூடத்தில் ஒன்று ,படுக்கை அறையில் ஒன்று என எத்தனை தேவையோ அத்தனை பாட்டில்களில் அடைத்து அந்தந்த இடத்தில் வைத்துவிட வேண்டும்.

poojai

இந்த முருங்கை விதையின் சக்தி நாற்பத்தி எட்டு நாட்களுக்கு நிலைத்திருக்கும். அதிகபட்சம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இவற்றை மாற்றி விட வேண்டும். இந்த முருங்கை விதைகளை நீர் ஓடும் பகுதியிலோ அல்லது கால் படாதஇடங்களிலலோ கொட்டி விடலாம்.

- Advertisement -