மறந்தும் வீட்டில் இவ்வாறான தவறுகளை செய்யாதீர்கள். இவற்றை கவனிக்காமல் இருந்தால் தீராத பணக்கஷ்டம் வந்துவிடும்

poojai
- Advertisement -

எப்பொழுதும் வீட்டில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் இதற்காக வீட்டில் எப்போதும் பணம் நிரம்பி வழிய வேண்டி இருக்கும். இவ்வாறான அதிர்ஷ்டம் அனைவருக்கும் அமைவதில்லை. இதற்காக வீட்டை மாற்றி விடலாமா? என்றும் கூட பலரும் யோசித்து கொண்டிருப்பார்கள். வாடகை வீடாக இருந்தால் மாற்றி விடலாம். ஆனால் சொந்த வீடாக இருந்தால் என்ன செய்வது? இவ்வாறு பணம் கையில் தாங்காமலும், சரியான வருமானம் இல்லாமல் இருந்தாலும் வீட்டில் சில விஷயங்களை சரியாக கவனிக்க வேண்டும். அவ்வாறு நமக்கே தெரியாமல் நமது வீட்டில் நாம் செய்யும் தவறுகள் தான் இதற்கான காரணமாக இருக்கும். அவ்வாறு நாம் செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதனை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cash-rain

பொதுவாக ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் இடம் அந்த வீட்டில் உள்ள பூஜை அறை தான். நமது வீட்டின் பூஜையறை சரியான திசையில் இருக்கின்றதா என்று கவனிக்க வேண்டும். அடுத்ததாக பூஜை அறையில் இருக்கும் சாமி படங்களை சரிபார்க்க வேண்டும். அவற்றில் இரண்டு சாமி சிலைகள் எதிரெதிர் திசையை பார்த்தவாறு வைத்திருக்க கூடாது இவ்வாறு வைப்பதால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து வருமானம் குறைந்து விடும்.

- Advertisement -

வீட்டில் உடைந்த கண்ணாடி மற்றும் கண்ணாடி பொருட்கள் அல்லது விரிசல் அடைந்த கண்ணாடி இவற்றை சில வீட்டில் வைத்திருப்பார்கள். ஆனால் அவற்றை உடனே மாற்றிவிட வேண்டும். இவ்வாறு உடைந்த கண்ணாடி வீட்டில் இருப்பதன் மூலம் நிதி சிக்கல் ஏற்படும். விரயச் செலவுகள் அதிகரிக்கும்.

broken mirror

உடைந்த சாமி சிலைகள் கிழிந்த சாமி படங்கள் இவற்றை மடித்து வைப்பது அல்லது தனியாக எடுத்து வைப்பது இவ்வாறு செய்தல் கூடாது. இது வீட்டில் பெருமளவு பொருளாதார பிரச்சினையை ஏற்படுத்தும்.

- Advertisement -

அதுபோல் வீட்டினுள் வைப்பதற்கென்று இருக்கும் செடிகளை மட்டுமே வீட்டின் உட்பக்கம் வைத்து வளர்க்க வேண்டும். முட்கள் நிறைந்த செடிகளை கட்டாயம் வீட்டிற்கு வெளியே வைத்துதான் வளர்க்கவேண்டும். இல்லையெனில் வீட்டில் பணப் பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உண்டாகும்.

thulasi chedi

வீட்டில் தேவையில்லாத மற்றும் பழுதடைந்த எலக்ட்ரானிக் பொருட்களை அப்படியே பரனையில் போட்டு வைப்பது போன்ற செயல்களை செய்தல் கூடாது. இவ்வாறு அவற்றை அகற்றாமல், சரிசெய்யாமல் அப்படியே போட்டு வைப்தால் அவை வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் தான் கொண்டுவரும்.

அது போல் வீட்டை கழுவுவது, வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை வெளியே எரிவது போன்ற செயல்களை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் செய்தல் கூடாது. இவ்வாறு செய்வது வீட்டில் உள்ள மகாலட்சுமியை வெளியில் அனுப்புவதாக அர்த்தமாகும். இதனால் பெருமளவு பணக்கஷ்டம் உண்டாகும்.

cleaning5

அதேபோல் வீட்டில் ஒரு சில பொருட்களை சரியான திசையில் வைக்க வேண்டும். அவ்வாறு நமக்கு தெரியவில்லை என்றாலும் இதனை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்று பெரியவர்களிடம் கேட்டு அவர்கள் கூறும் அறிவுரைப்படி நடந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -