ஒரே ஒரு ரூபாய் நோட்டில், இந்த 3 பொருட்களை வைத்து மடித்து விட்டால், 3 மடங்கு பணவரவு உங்களுக்கு அதிகரிக்கும்.

mahalashmi1
- Advertisement -

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய நீங்கள், ஒரு சில நாட்களில் கூடுதல் வருமானத்தை பெற வேண்டும் 15 ஆயிரம் ரூபாய், அல்லது 20 ஆயிரம் ரூபாயாக உங்களுடைய வருமானம் உயர வேண்டும் என்றால், நீங்கள் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பார்க்கலாம். இது ஒரு உதாரணத்திற்காக சொல்லப்பட்ட விஷயம் தான்.

நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அது மூன்று மடங்கு பெருக இந்த பரிகாரம் கை கொடுக்கும். தாந்திரீகம் எல்லாமே ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் தான். ஆகவே உங்களுடைய குலதெய்வத்தை வேண்டி தான் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யப் போகிறீர்கள். மிக மிக எளிமையான பரிகாரம் இது. வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால் சிறப்பு. வெள்ளிக்கிழமை செய்ய முடியாதவர்கள், பௌர்ணமி அன்று மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். வாங்க பணத்தை பல மடங்காக பெருக்க கூடிய அந்த தாந்திரீகம் என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பணம் 3 மடங்காக பெருக தாந்த்ரீக பரிகாரம்:
ஒரு ரூபாய் நோட்டு எடுத்துக் கொள்ளுங்கள். 10 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை, உங்களிடம் எந்த நோட்டு இருக்கிறதோ அந்த நோட்டை எடுத்து விரித்து வைத்து அதன் உள்ளே நெல் 1 ஸ்பூன், பச்சை கற்பூரம் 1 சிறிய துண்டு, ஏலக்காய் 3 வைத்து மடித்து மகாலட்சுமியின் பாதங்களில் ஒரு தட்டில் வைத்து விடுங்கள். ரூபாய் நோட்டு மகாலட்சுமியின் பாதங்களில் படும்படி இருக்கட்டும்.

வழக்கம்போல பூஜை அறையை அலங்காரம் செய்து, விளக்கு ஒன்று ஏற்றி வைத்துவிட்டு, வாசனை நிறைந்த தூபம் போட்டுவிட்டு நீங்களும் பூஜையறையை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு, உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் தீர்ந்து பணம் பெருக வேண்டும் என்று மனம் உருகி குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மகாலட்சுமி பாதங்களில் ரூபாய் நோட்டு இருக்கிறது அல்லவா. அதற்கு மல்லி புஷ்பங்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். சீசனில் மல்லிப்பூ விலை குறைவாக கிடைக்கும். 20 ரூபாய்க்கு மல்லி பூ வாங்கினால் கூட போதும். ‘ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி அந்த பணத்திற்கு அர்ச்சனை செய்து, அந்த பணத்தை சக்தியூட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக கற்பூர ஆராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இப்போது கிண்ணத்தில் இருக்கும் அந்த ரூபாய் நோட்டை எடுங்கள். அதன் உள்ளே இருக்கக்கூடிய நெல், பச்சை கற்பூரம், ஏலக்காய் மூன்றும் அப்படியே இருக்க வேண்டும். உள்ளிருக்கும் பொருட்கள் கீழே விழாதபடி அந்த நோட்டை எடுத்து கிண்ணத்தில் வைத்து, பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். அவ்வளவுதான். இந்த பணத்தை செலவு செய்யக் கூடாது. அது உங்கள் வீட்டு பீரோவில் இருந்தால் போதும்.

இதையும் படிக்கலாமே: எட்டுத்திக்கில் இருந்து நம்மை தாக்க வரும், கண் திருஷ்டி, செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், மாந்திரீகம் இவைகளை எட்டாதூரத்திற்கு விரட்டி அடிக்க வீட்டில் இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்.

மூன்று மாதம் கழித்து இந்த நோட்டை எடுத்து செலவு செய்து கொள்ளலாம். உள்ளே இருக்கும் பொருட்களை எல்லாம் கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதியதாக ரூபாய் நோட்டை மகாலட்சுமி பாதங்களில் வைத்து, மீண்டும் பூஜை செய்து இதேபோல வைத்து வாருங்கள். உங்களுடைய வருமானத்தில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை நீங்களே உணர்வீர்கள். மூன்று மடங்கு உங்களுடைய வருமானத்தை பெருக்கி தரும் இந்த பரிகாரம். அதுவும் மூன்றே மாதத்தில் பலனை நீங்கள் எதிர்பார்க்கலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீகத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -