எட்டுத்திக்கில் இருந்து நம்மை தாக்க வரும், கண் திருஷ்டி, செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், மாந்திரீகம் இவைகளை எட்டாதூரத்திற்கு விரட்டி அடிக்க வீட்டில் இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்.

amman5
- Advertisement -

அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகி பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் போது தான் நாம் யோசிப்போம். நமக்கு என்ன தான் பிரச்சனை. எதனால் இவ்வளவு துன்பங்கள் வருகிறது என்று, கொஞ்சம் சிந்தித்து பெரியவர்களிடம் கேட்டால் கண் திருஷ்டி பட்டிருக்கும் என்று சொல்லுவார்கள். இன்னும் பிரச்சனைகள் தீவிரம் அடைய ஜாதகத்தை கொண்டு போய் ஜோதிடரிடம் காண்பித்தால், உங்களுக்கு யாரோ ஏவல் பில்லி சூனியம் வைத்திருப்பார்கள் என்று சொல்லுவார்கள். இது அல்லாமல் மாந்திரீகம் தாந்திரீகம் என்று நம்முடைய எதிரிகள் செய்யக்கூடிய வேலைகள் ஒரு பக்கம் இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத காத்து கருப்பு சேட்டையாக இருக்குமோ என்ற சந்தேகமும் சில பேருக்கு இருக்கும். இப்படி உங்கள் கஷ்டத்திற்கும் துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் காரணமாக கண்ணுக்குத் தெரியாத எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, அதை சரி செய்ய இந்த எட்டு பொருட்களை எடுத்து நெருப்பில் போடுங்கள். பிரச்சனை இன்றிலிருந்து சுலபமாக வெளிவந்து விடலாம்.

மாந்திரீகத்தில் இருந்து தப்பிக்க எளிய பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான முக்கியமான பொருட்கள். நவதானியம் – 1 கை பிடி, விளக்குமாறு குச்சி – 3, எள்ளு – 1 ஸ்பூன், ஓமம் – 1 ஸ்பூன், வெள்ளெருக்கம் பூ – 3, வர மிளகாய் – 3, முச்சந்தி மண்ணு – ஒரு கைப்பிடி, கொஞ்சம் – கல் உப்பு, இந்த எட்டு பொருட்களை மேல் சொன்ன அளவுகளோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எல்லா பொருட்களையும் ஒன்றாக ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இதை பாதிக்கப்பட்டவரின் தலையை வலப்புறமாக மட்டும் ஐந்து முறை சுற்றி, அப்படியே நெருப்பில் பொசிக்கி விட வேண்டும். பரிகாரம் இவ்வளவுதான். இதை செய்தாலே உங்களைப் பிடித்த பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும். ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லையென்றால் அமாவாசை இரவு 9 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பரிகாரம் திருஷ்டி கழிப்பது போல மிக சுலபமான எளிமையான பரிகாரம்தான். ஆனால் இதில் நாம் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் ஒவ்வொன்றுமே மிகவும் சக்தி வாய்ந்த பொருட்கள். அவை அனைத்தும் உங்கள் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து வெளியே கொண்டு வந்து விடும். குலதெய்வத்தை மனதார வேண்டி, குலதெய்வத்திடம் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். பரிகாரத்தை செய்து முடித்து ஒரு வாரம் கழித்து குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ கோவிலில் இரவு தங்கி விட்டு வர வேண்டும்.

- Advertisement -

குலதெய்வ கோவில் பிரகாரத்துக்கு உள்ளே தான் படுத்து உறங்க வேண்டும். சௌகரியமாக குலதெய்வ கோவில் இருக்கும் ஊரில் ரூம் போட்டு எல்லாம் தங்கக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கோவிலுக்கு உள்ளே உங்களுக்கு தங்குவதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் கோவில் வெளியில் கோவில் பிரகாரத்தை சுற்றி மண்டபங்கள் இருக்கும் அல்லவா அந்த இடத்தில் தங்கிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி அருளோடு சுக்கிரனின் கடைகண் பார்வையும் உங்க மேல் பட வெள்ளிக்கிழமை தவறாமல் இதை முடிச்சாக கட்டி வைத்து விடுங்கள். அப்புறம் என்ன ஜாக்பாட் அடுத்தது போல பண மழையில் நனைவீர்கள்.

இந்த எளிமையான பரிகாரம் உங்களை பலவிதமான பெரிய பிரச்சனைகளில் இருந்து வெளியே கொண்டு வந்து விடும். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -